இடுகைகள்

வரைபடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாப்ளர் ரேடாரின் பயன் என்ன? - மிஸ்டர் ரோனி

படம்
      அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தேசிய தட்பவெப்பநிலை சேவை  தொடங்கப்பட்டது? 1870ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 அன்று தொடங்கப்பட்டது. உலிசஸ் எஸ் கிராண்ட் அதிபராக இருந்தார். தேசிய தட்பவெப்பநிலை பிரியூ என்று பெயர் சூட்டப்பட்டது. 1891ஆம்ஆண்டு அதன் பெயர் மாற்றியமைக்கப்பட்டது. அமெரிக்க தட்பவெப்பநிலை அமைப்பு என்று சூட்டப்பட்ட பெயர், 1967ஆம் ஆண்டு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. க்ளீவ்லேண்ட் அப்பே என்பவர் யார்? இவரைத்தான் தட்பவெப்பநிலை அமைப்பை நிறுவிய தந்தை என்று பெருமையோடு கூறுகிறார்கள். 1868ஆம்ஆண்டு சின்சினாட்டி கோளரங்கத்தில் இயக்குநராக இருந்தார். அதில் இருந்தபடியே தட்பவெப்பநிலை பற்றிய தகவல்களை திரட்டி எழுதினார். 1871ஆம் ஆண்டு, தேசிய தட்பவெப்பநிலை பிரியூவுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். தட்பவெப்பநிலை துறையில் பெஞ்சமின் பிராங்களின் பங்களிப்பு என்ன? புயலில் பட்டம் விடும்போது அதன் வழியாக மின்சாரம் கடத்தப்படுவதைக் கண்டுபிடித்தார். புயல்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடிகார சுற்று முறையில் செல்வதை ஆய்வு செய்து கண்டறிந்தார். அவர் ஆய்வு செய்தபோது, பிலடெல்பியாவிலிருந்த...

பூமியை விதம் விதமான கணித வடிவங்களால் வரைந்த புவியியல் வல்லுநர்கள் - புவியியல் அறிமுகம்

படம்
  டோலமி - தொன்மையான புவியியல் ஆராய்ச்சியாளர்  கிளாடியஸ் டோலமி. தொன்மையான கிரேக்க நாட்டின் எகிப்தில் பிறந்தவர். கிரிகோ ரோமன் புவியியல் தகவல்களை உருவாக்கினார். கூடுதலாக கணிதம், வானியல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். புவியியல் என்ற பெயரில் எட்டு பாகங்களைக் கொண்ட நூலொன்றை உருவாக்கினார். அதிலுள்ள தகவல்களைக் கொண்டுதான் உலக நாடுகளின் வரைபடம் வரையப்பட்டது. இதில் 26 உள்ளூர் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டன. அப்படியானால் அந்த நூலில் எவ்வளவு தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் பாருங்கள்....  நூலில் எட்டாயிரம் இடங்களின் பெயர்களையும் குறித்து வைத்திருந்தார்.  13 பாகங்களாக எழுதப்பட்ட அல்மாகெஸ்ட் என்ற நூலில் சூரிய குடும்பம் பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்திருந்தார். நான்கு பாகங்களாக வெளிவந்த டெட்ராபிபிலோஸ் என்ற நூலில் ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக விளக்கியிருந்தார். டோலமியின் அறிவும், அவரது படைப்புகளும்தான் உலக நாடுகளின் வரைபடங்களை ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உருவாக்கவும் புவியியல் துறையை பின்னாளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் உதவியது.  2 கிளாடியஸ் டோலமி பூமி என்ன வ...

புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்! - வரைபடம், மின்காந்தப்புலம், பூமியின் காந்தப்புல ஆய்வு, வேளாண்மை ஆய்வு

படம்
அருஞ்சொற்கள்!  ஏரோலாஜிகல் டயகிராம் (Aerological Diagram) பாறைகளின் தன்மையை அறிய உதவும் வரைபடம். இதில் வெப்பநிலை, அழுத்தம். ஈரப்பதம் ஆகிய தகவல்களை அறியலாம்.  ஏரோமேக்னடிக் சர்வே (Aeromagnetic Survey) பூமியின் மின்காந்தப்புலம் பற்றிய ஆய்வு. விமானங்களில் இணைக்கப்பட்ட மேக்னட்டோமீட்டர் (Magnetometer) மூலம் ஆய்வு நடைபெறுகிறது.  ஏயோலியானைட் (Aeolianite) காற்றால் அடித்துக்கொண்டு வரப்படும் மணல் துகள்களால் உருவாகும் பாறைகள் .  ஏஎஃப்எம்ஏஜி இஎம் அமைப்பு (AFMAG EM) இயற்கை நிகழ்வான புயல், மழையின் பிறகு பூமியின் இயற்கையான மின்காந்தப் புலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை அளவிடும் முறை.  அக்ரோமெட்ராலஜி (Agrometeorology) வேளாண்மைக்கு ஏற்ற தன்மையில் வானிலை மற்றும் நிலத்தின் அடுக்குகள் உள்ளதா என ஆராயும் முறை. 

அகழாய்வில் ட்ரோனின் பங்கு என்ன?

படம்
  அகழாய்வுக்கு உதவும் ட்ரோன்! தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.  ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில்  திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன்  மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும...

அழிந்துபோன வணிக கண்டம்! - பால்கனாடோலியா

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நடுவில் உள்ள கண்டம்! அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியம...

இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

படம்
  தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம்.  இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு ...

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை! - அசுதோஷ் சர்மா

படம்
  அசுதோஷ் சர்மா, செயலர் - அறிவியல் தொழில்நுட்பம் வரைபடத்துறையை தாராளமயமாக்கியிருக்கிறீர்களே? பல்லாண்டுகளாக இத்துறை சீர்திருத்தங்கள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இத்துறையில் தாராளமயமாக்கும் திட்டம் செயலாக்கம் பெற்றுள்ளது. இதன்மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ஏன்? நாங்கள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. மிகவும் துல்லியமான படங்களை பெற கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய நிறுவனங்கள் இப்படி படங்களைப் பெற்று பயன்படுத்த உரிமங்களைப் பெறவேண்டும். இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் புவியியல் சார்ந்த பல்வேறு தகவல்களை நிறுவனங்கள் பெற்று பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை அவுட்சோர்ஸ் முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? உறுதியாக. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஆப்களை தயாரிக்கவேண்டும். அதன் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாக இருப்பது அவசியம்.  மத்திய அரசு சட்டம் ...

இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்!

படம்
  இயற்பியலை மாற்றிய ஃபெய்மன் வரைபடம்! இயற்பியலில் அணுத்துகள்களைக் கணக்கிடுவதில் 1940 ஆம் ஆண்டு ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது.  ஆம் ஆண்டில்தான் இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெய்மன், அணுத்துகள்களைக் கணக்கிடுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.  இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ரிச்சர்ட் ஃபெய்மனை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான காரணமும் அதுதான். அமெரிக்காவில் மன்ஹாட்டன் ப்ராஜெக்டில்  அணுகுண்டை மேம்படுத்துவதற்கான குழுவில் ஃபெய்மன் பணியாற்றி வந்தார்.  இக்குழுத்தலைவராக இயங்கிய ஹான்ஸ் பெதே(Hans bethe) வுக்கு 1967 ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஹான்ஸ் சொன்ன வாக்கியம் மறக்க முடியாதது. உலகில் இருவகை அறிவாளிகள் உண்டு. ஒருவர் கடினமான உழைத்து பெரிய காரியங்களைச் சாதிப்பார்கள். சிலர் மாந்த்ரீகர்கள் போல செயல்பட்டு எப்படி சாதித்தார்கள் என வியக்க வைப்பார்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர், ஃபெய்மன் என்று கூறினார்.  மிகச்சிறந்த அறிவாளி, கோமாளித்தனமும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர் என அறிவியல் வட்டாரங்களும், நண்பர்களும் புகழும் ஆளுமை. 1962 ஆம் ஆண்டு கல்ல...