இடுகைகள்

செய்திக்கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

கொரானோ நோய்த்தொற்று உருவாக்கிய சொற்கள்!

படம்
    கொரானோ நோய்த்தொற்று உருவாக்கிய சொற்கள் ! கொரானோ நோய்த்தொற்று நம் வாழ்க்கையை மாற்றியுள்ளதோடு , நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் புதிய பல்வேறு சொற்களும் உருவாக காரணமாக அமைந்துள்ளது . பெருந்தொற்று காரணமாக , மக்களது தினசரி வாழ்க்கை என்பது இன்று தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்ததாக மாறியுள்ளது . மேலும் , நாம் பயன்படுத்தும் பல்வேறு புதிய சொற்களையும் உருவாக்க காரணமாக அமைந்துள்ளது . Body mullet, maskhole, covideo, domino distance, herd immunity, covidiot, oronageddon ஆகிய புதிய சொற்கள் நடைமுறையில் உருவாகியுள்ளன . மேற்சொன்ன சொற்களை முந்தைய ஆண்டு இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது . ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் இந்த சொற்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொண்டு விட்டார்கள் . வார்த்தைகளை புழக்கத்திற்கு கொண்டு வந்ததில் ஃபேஸ்புக் , டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பங்குண்டு . நாம் செல்லும் இடங்களில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக சமூக இடைவெளி என்பதை கூறலாம் . பெருந்தொற்று காலத்தில் மளிகைக் கடை முதல் மால்கள் வரை புகழ்பெற்ற வார்த்தை இதுதான்

எண்களே இல்லாத கிரடிட் டெபிட் கார்டுகள்! - மோசடிகளிலிருந்து தப்பிக்க புது ஐடியா

படம்
            நிதிமோசடிகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ! கிரடிட் , டெபிட் கார்டுகளில் நடைபெறும் நிதி மோசடிகளைத் தடுக்க பல்வேறு நிறுவனங்கள் எண்களற்ற கார்டுகளை வெளியிட்டு வருகின்றன . நாம் தற்போது கடைகளில் நேரடியாக பொருட்களை பணம் கொடுத்து வாங்குவதை கைவிட்டு டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறி வருகிறோ்ம் . வங்கி வழியை விட கிரடிட் , டெபிட் கார்டுகள் வழியாக நடைபெறும் பணப்பரிமாற்றம் பல்வேறு மோசடிகளுக்குள்ளாகி வருகிறது . இதில் ஒருவரின் பெயர் , எண்கள் , பாதுகாப்பு எண்கள் ஆகியவை உள்ளதால் , அவற்றை முறைகேடாக பெறுபவர்கள் மோசடிக்குப் பயன்படுத்தி வருகின்றனர் . இதனைத் தடுக்க எண்கள் இல்லாத அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன . இந்த அட்டையிலும் பின் (PIN) எண்ணை பயனர்கள் , ஓட்டல்களில் , மால்களில் பயன்படுத்தலாம் . இந்த அட்டை , ஸ்மார்ட்போனிலுள்ள செயலியோடு இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் முறைகேடுகளுக்கான வாய்ப்பு குறைவு . இந்தியாவில் இளைஞர்களுக்கான டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக ஃபேம்பே உரு்வாக்கப்பட்டுள்ளது . இந்நிறுவனத்தின் ஃபேம்கார்டு , மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின

6 ஜி இந்தியா! - இந்தியா தொலைத்தொடர்பு ஆய்வுகளில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

படம்
          6 ஜி இந்தியா ! தொலைத்தொடர்பு துறை நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளர்ந்து வருகிறது . இதன்மூலம் அத்துறை மட்டுமன்றி , எளிய மனிதர்களின் வாழ்க்கையும் காலப்போக்கில் வளர்ச்சியடைகின்றன . வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை தொண்ணூறுகளில் யாரும் நினைத்து பார்த்திருக்கமுடியாது . ஆனால் பெருந்தொற்று காலத்தில் வளர்ந்துள்ள நவீனத் தொழில்நுட்பம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளது . தொண்ணூறுகளில் 2 ஜி தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர் . அந்த வளர்ச்சி , மெல்ல வளர்ந்து 5 ஜி , 6 ஜிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேலைநாடுகளில் அமைத்து வருகிறார்கள் . 5 ஜியின் வேகம் 1 Gbps (1000 Mbps) என இருக்கும் என டெக் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர் . 6 ஜி வேகம் 1 Tbps (1000 Gbps) ஆக இருக்கும் . எரிக்ஸன் , சாம்சங் , ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகி்ன்றனர் . இந்த அதிவேக இணைய ஆற்றலை எப்படி எதற்கு பயன்படுத்தலாம் ? அலுவலகம் சார்ந்த சந்திப்புகளுக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்கு ஒருவர் அலைவது கடினம் . எனவே 5 ஜி , 6 ஜி தொழில்நுட்பம் மூலம் ஒரு இடத்தில் பே

ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும்!

படம்
            ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும் ! சாகாவரம் என்ற வார்த்தையின் மீது ஆசைப்படாதவர்கள் யார் ? இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் . நோயின்றி இருபது ஆண்டுகள் வாழலாம் என ஒரு மாத்திரையை டிவி சேனலில் விளம்பரம் செய்தால் நொடியில் அவை விற்றுத தீர்ந்துவிடும் . காரணம் , உயிர்வாழும் ஆசைதான் . தற்போது , ஆயுளை நீட்டிப்பதற்கான ஆராய்ச்சியில் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் நாய்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் . பல்லாயிரம் ஆண்டுகளாக நாய் இனம் , நம்முடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன . அவற்றுக்கு வயதாவது மனிதர்களை விட வேகமாக நடக்கிறது . இந்த ஆராய்ச்சி மூலம் அவற்றுக்கும் , மனிதர்களுக்கும் வயதாவது பற்றிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள் . அமெரிக்காவில் நாய்களின் வயது பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது . இதில் 80 ஆயிரம் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன . ” நோய்களை குணப்படுத்துவதற்கு நாம் முயற்சிப்பது நமது ஒட்டுமொத்த ஆயுளைக் குறைத்துவிடுகிறது . புற்றுநோய் , இதயநோய் , ஆகிய நோய்கள் ஏற்பட்டால் ஒருவர் அதிக நாட்கள் வாழ்வது கடினம் . நாம் வயதாவதைத் தடுக்க உடலின் மூ

மண்ணீரலை கல்லீரலாக பயன்படுத்த முடியும்! - ஆராய்ச்சித் தகவல் புதுசு

படம்
கல்லீரல் - போல்ட்ஸ்கை தமிழ் கல்லீரலுக்கு மாற்றாக மண்ணீரல்! உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளுக்கு மாற்று உறுப்புகள் தேடுவது கடினமாகி வருகிறது. மருத்துவ அறிவியல் வசதிகள் முன்னேறினாலும், கொடையாளி தன் உறுப்பை தானமாக கொடுத்தால் மட்டுமே நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிக்கு கல்லீரக்குப் பதிலாக மண்ணீரலைப் பொறுத்தி வெற்றி கண்டுள்ளனர். இதன் காரணமாக, மனிதர்களுக்கும் செயலிழந்த கல்லீரலை அகற்றிவிட்டு, அவர்களது உடலிலுள்ள மண்ணீரலை மாற்று உறுப்பாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. சீனாவிலுள்ள நான்ஜியாங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெய் டாங் தலைமையிலான குழுவினர், எலி மீது மண்ணீரல் சோதனை செய்து வென்றுள்ளனர். எலியின் உடலில் பெரும்பகுதி கல்லீரல், அகற்றிவிட்டு, மண்ணீரலைப் பொறுத்தியுள்ளனர். இதில் கல்லீரல் திசுக்களை செலுத்தி, வளரச்செய்தனர். எட்டு வாரங்களுக்குப் பிறகு எலியின் உடலில் பொருத்தப்பட்ட மண்ணீரலில் கல்லீரலில் உள்ளது போன்ற ரத்தக்குழாய்கள் உருவாகியிருந்தன. இச்சோதனையைப் பற்றி எதிர்மறையாக இரு கருத்துகள் கூறப்படுகின்றன. ”ரத

இந்தியா மின் வாகனங்கள் தயாரிப்பில் பின்தங்க என்ன காரணம் தெரியுமா?

படம்
மின்வாகன தயாரிப்பில் சுணக்கம்? இந்திய அரசு, சீனாவிலிருந்து பெருமளவில் மின் வாகன பாகங்களை இறக்குமதி செய்துவருகிறது. தற்போது இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகளால், அரசு வாகன பாகங்களின் இறக்குமதியைக் குறைக்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக, மின்வாகனங்கள் தயாரிப்புத்துறை தடுமாற்றத்தில் உள்ளது. தற்போது உலகளவில் மின் வாகனங்கள் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு, சீனா. மின் வாகனங்களுக்கு அரசு முன்னர் அளித்த வரவேற்பால், ஹைபிரிட் வகை வாகனங்களுக்கு கூட வரவேற்பு குறைந்துபோனது. தற்போது, அரசு என்ன முடிவு எடுக்குமோ என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நகம் கடித்தபடி காத்திருக்கின்றன. ”சீனா இத்துறையில் 60 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. மின் வாகனங்களில் பயன்படுத்தும் கன்வர்ட்டர், இன்வெர்ட்டர், டிசி மோட்டார்கள் என பல்வேறு பாகங்களையும் தயாரிப்பதற்கான உற்பத்தி திறன்களை அந்நாடு கொண்டுள்ளது” என்கிறார் துறை வல்லுநரான சூரஜ் கோஷ். மின்வாகனங்களை வாங்குவதில் உள்ள கடினமான விஷயம், அதன் விலைதான். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐசிஇ (Internal Combustion engine) பயன்படுத்துவதற்கு முக்கியக் காரணம், எரிப

விவசாயிகளின் பொருட்களை விற்க உதவும் தானிய வங்கி! - பீகார் தொழில்முனைவோரின் சாதனை

படம்
கிஷோர் குமார் ஜா - தானியவங்கி பீகாரைச்சேர்ந்த கிஷோர் ஜா, பிரவீன் குமார் ஆகிய இரு இளைஞர்கள், எர்கோஸ் நிறவனத்தின் மூலம், விவசாயிகளுக்கான தானிய வங்கியைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகளின் அறுவடையான தானியங்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அளிப்பதோடு, அதனை நல்ல விலைக்கு விற்கவும் உதவுகின்றனர். எர்கோஸ் நிறுவனம், தொடங்கப்பட்டு கடந்த ஐந்த ஆண்டுகளில் ஏராளமான விவசாயிகளுக்கு நம்பிக்கை தந்துள்ளது. ”இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்களை இவர்கள் விளைவிக்கிறார்கள். தானியங்களை விளைவித்தால், 40 முதல் 50 குவிண்டால்கள் வரும். ஆனால் இவர்கள் அத்தானியங்களை பெரிய மண்டிகளிலோ, சந்தையிலோ விற்பதில்லை. இதனால், குறைந்த வருமானம் பெற்று வந்தனர். இவர்களுடைய பொருட்களுக்கு சரியான விலை கிடைத்தால் உற்சாகம் பெறுவார்கள் என நினைதோம்” என்கிறார் எர்கோஸ் நிறுவன இயக்குநர் கிஷோர் ஜா. விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, அவர்களின் தானியங்களை பாதுகாத்து வைக்கும் சரக்கு கிடங்கு வசதி, சந்தைகளின் விலை நிலவரங்களை அறியத்தருவது ஆகியவற்றை எர்கோஸ் நிறுவனத்தினர் செய்

விமானங்களின் மாசுபாட்டைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பம்! - ஸ்வீடன் நாட்டின் சாதனை!

படம்
ஃபேமிலி டிராவலர் விமான சேவை மூலம் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது. இரண்டு ஜெட் எஞ்சின்கள் 2,721 கிலோகிராம்   எரிபொருளை எரிப்பதன் மூலம் 8,618 கிலோகிராம் கார்பனை காற்றில் உருவாக்குகின்றன. ஸ்வீடன்வாசிகள் இதனை ஃபிளைக்ஸ்காம் (flykskam) என்கின்றனர். சூழலுக்கு இழைக்கும் அநீதி என்கிறார்கள். கார்பன் சுவடின்றி விமான பயணங்களை செய்ய முடியும் என்றால் நன்றாக இருக்கும்தானே? ”இது சாத்தியம்தான். நாங்கள் சூரிய ஆற்றல் மற்றும் காற்று மூலம் பெறப்படும் எரிபொருளை பயன்படுத்தும்படி ஜெட் எஞ்சின்களை வடிவமைத்துள்ளோம்” என்கிறார் ஸ்வீடன் தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்டோ ஸ்டெய்ன்ஃபீல்டு. சின்கேஸ் எனப்படும் எரிபொருளை காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை ஈர்த்து ஆக்சிஜனுடன் வினைபுரிய வைத்து தயாரிக்கிறார்கள். இதற்கான சோலார் அமைப்பு,   மேட்ரிட் நகரின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரமுள்ள கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மூலம்தான் சின்கேஸ் தயாரிக்கப்படுகிறது. இதனை மண்ணெண்ணெய் மூலக்கூறாக மாற்றி ஜெட் எஞ்சின்களில் பயன்படுத்துகிறார்கள். மோஸ்டோல்ஸ் சுத்திகரிப்பு நி

உலக வல்லரசுகளின் செயற்கைக்கோள் போர்!

படம்
விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!   விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில் சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள

கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பு உதவுமா?

படம்
pixabay தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில் அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.    அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள் நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.    ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயண

தொடக்க கல்வியில் சறுக்கும் இந்தியா! - பிரதாம் நிறுவன அறிக்கை!

படம்
pexels தொடக்க கல்வியின் முக்கியத்துவம்!  பிரதாம் தொண்டு நிறுவனத்தின் ஏஎஸ்இஆர் (Annual Survey of Education Report) 2019 அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மாணவர்களின் தொடக்க கல்வி பற்றி பேசப்பட்டுள்ளது. உலகளவில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில், முதல் எட்டு ஆண்டுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆறு வயதில் மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் முழுமையடைந்து விடுகிறது. எட்டு வயது வரையில் குழந்தைகளின் உணர்ச்சி, அறிவு, ஆற்றல், சமூக கலந்துரையாடல் ஆகிய தன்மைகள் வளர்கின்றன. மேலும் பல்வேறு திறன்களை பள்ளிச்சூழல் வளர்க்கிறது. பள்ளிகளின் நிலை, 4 முதல் 8 வயது வரையிலான மாணவர்களின் திறன்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்களின் பரிந்துரைகள், அனுபவங்கள் அடிப்படையில் , வெளியான கல்வி அறிக்கை, தொடக்க கல்வி பற்றிய நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை. ஆய்வுக்குழுவினர், 24 மாநிலங்களிலுள்ள 24 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தனர். இங்குள்ள கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 39,730 மாணவர்களை  (4 முதல் எட்டு வயதுக்குட்பட்ட) ஆய்வு செய்தனர். இதில் 12.7 சதவீத மாணவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் நேரட