இடுகைகள்

குண இயல்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி உளவியலில் சாதித்த உளவியலாளர் எட்வர்ட்!

படம்
  இவான் பாவ்லோவ் பற்றிய நாய்கள் ஆராய்ச்சி பற்றி பேசியிருந்தோம். அவர் ஆராய்ச்சி செய்தால் பிறர் என்ன சும்மா உட்கார்ந்திருப்பார்களா? இவான் ரஷ்யாவில் முழு முனைப்பாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எட்வர்ட் தோர்ன்டைக் அப்போதுதான் விலங்குகளின் குணங்கள், இயல்புகள் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியிருந்தார். அமெரிக்காவில் முனைவர் படிப்பிற்காக ஆராய்ச்சியை செய்யவேண்டியிருந்தது. குணநலன் ஆராய்ச்சியாளர் என்ற பெயரை, அறிமுகமாகும் காலத்திற்கு முன்னரே சம்பாதித்தவர். 1890ஆம் ஆண்டு தோர்ன்டைக், படித்து பட்டம் பெறும்போது அறிவியல் முறையிலான உளவியல் என்பது பல்கலைக்கழகங்களில் மெல்ல புகழ்பெற்று வந்தது. இந்த புதிய துறை எட்வர்டை கவர்ந்து இழுத்தது.  ஆனால் அப்போது எதை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என அவருக்குத் தெரியவில்லை. பிறகுதான் எட்வர்டின் கவனம் விலங்குகள், அதன் புத்திசாலித்தனம் மீது திரும்பியது. ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் விலங்குகளை சோதிப்பது என முடிவெடுத்தார். இந்த வகையில் எட்வர்ட் செய்த சோதனைகளால், குணநலன் உளவியலில் அடிப்படையான விஷயங்களை உருவாக்கியவராக கருதப்பட்டு போற்றப்படுகிறார்.  ஆய்