இடுகைகள்

வெப்பமயமாதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் பற்றிய முக்கியமான ஆங்கில வார்த்தைகள்!

படம்
  தெரியுமா? Net Zero கார்பன் உமிழ்வை முற்றிலும் ஜீரோவாக்கும் திட்டத்தைப் பற்றி கூறும் வார்த்தை. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் குறிப்பிட்ட ஆண்டை இலக்காக வைத்துள்ளன. நடைமுறையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என நிறுவனங்களும் அரசுகளும் கூறுகின்றன.  Sustainability எதிர்கால தலைமுறையினர் தங்களது தேவைகளை சமரசம் இல்லாமல் பெறுவது என ஐ.நா அமைப்பு, இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. சூழலுக்கு இசைவான  முறையில் நாம் வாழும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.  Mitigation and adaptation பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்கள் என்பது இதற்கான பொருள்.  நிலக்கரியிலிருந்து காற்று, சூரிய ஆற்றல் புதுப்பிக்கும் வழிக்கு மாறுவதை உதாரணமாகக் கூறலாம்.  அடாப்டேஷன் என்ற வார்த்தை, வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைக் கூறுகிறது. சூழலுக்கு ஏற்ப சாலைகளை, வீடுகளை அமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.   Nature based solutions மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெறலாம்.  கார்பனை உறிஞ்சு

ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் வெப்பமயமாதல் விளைவுகள்!

படம்
  ஆர்க்டிக்கில் தீவிரமாகும் பருவச்சூழல் விளைவுகள்! சைபீரியாவின் ஆர்டிக் பகுதியில் வெப்பம் 10 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக கூடியுள்ளதை ஐ.நா அமைப்பு, சுட்டிக்காட்டியுள்ளது. இதுபற்றிய அறிக்கையை  உலக தட்பவெப்பநிலை அமைப்பு (WMO) வெளியிட்டது. ஆர்க்டிக் பகுதியில் இம்முறையில் அதிகரித்துள்ள வெப்ப அளவு, கடந்த கோடைக்காலத்தை விட அதிகம். இப்படி வெப்பம் அதிகரிப்பது காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுவது ஆகியவற்றை நிகழ்ச்சிகளை அதிகரிக்கக்கூடும்.  கடந்த ஆண்டு சைபீரியாவில் செய்த ஆய்வில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதுவே சமகாலத்தில் ஆர்க்டிக் பகுதியில் பதிவான  அதிக வெப்பநிலை ஆகும். பருவச்சூழல் மாறுபாடுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள ஐ.நா அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்ய நகரமான வெர்க்கோயான்ஸ்க் (verkhoyansk)என்ற இடத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நகரம் ஆர்க்டிக் பகுதியிலிருந்து 115 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தட்பவெப்பநிலை கணக்கீடு 1885ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது.  2020ஆம் ஆண்டு, உலகளவில் அதிக வெப்பநிலை நிலவிய மூன்று ஆ

காணாமல் போன ஆற்றை மீட்கும் நாடு! - வெப்பமயமாதல் பரிதாபம்

படம்
  காணாமல் போன ஆற்றை மீட்கும் பாரிஸ் நகரம்! இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெப்பத்தைக் குறைக்கும் பல்வேறு யோசனைகளை முக்கிய நகர நிர்வாக அதிகாரிகள் செயல்படுத்த  முன்வந்துள்ளனர். அதில் ஒன்றுதான், காணாமல் போன ஆறுகளை மீட்பது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் பீவ்ரே (Bievre) என்ற ஆற்றை மீட்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். 1899ஆம் ஆண்டு, பிரெஞ்சு பத்திரிகையான லே ஃபிகாரோவில் பீவ்ரே என்ற ஆறு பற்றி செய்தி ஒன்று வெளியானது. அதன்படி, பாரிஸின் தெற்குப் பகுதியிலிருந்து, நகரின் மையமான சீயின் (Seine) வரை (35 கி.மீ.) பீவ்ரே ஆற்றின் வழித்தடம் இருந்தது. இதன் அகலம் 13 அடி ஆகும். தொழிற்சாலைகள் அதிகரித்தபிறகு, ஆறு மாசுபடத் தொடங்கியது. ஆற்று நீர் அமிலங்கள், நிறமிகள், எண்ணெய் கலந்து கருப்பு நிறத்தில் ஓடியது என பத்திரிகையில் செய்தியே வெளியானது. மாசுபட்ட பீவ்ரே ஆற்றை முழுமையாக மூடிவிட, மக்கள் இசைந்தனர். எனவே,  அதிகாரிகளும் அதை ஏற்க, 1912ஆம் ஆண்டு ஆற்றின் வழித்தடத்தை முழுமையாக மூடினர்.   தற்போது பாரிஸ் நகரின் தோராய வெப்பநிலை, 2.3 டிகிரி செல்சியஸாக இருக்கிறத

காட்டுத்தீக்கும், பனிக்கும் உள்ள தொடர்பு!

படம்
  pixabay அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே பதினொரு வயது சிறுமி . 2013 ஆம்

வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!

படம்
          சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்! கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர். இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது. கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு  காரணமான பிஎம்இஎல

கடல்நீர்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - அலசல் பார்வை

படம்
      cc     நகரங்களை மூழ்கடிக்கும் கடல்நீர்மட்ட உயர்வு ! 2100 ஆம் ஆண்டில் கடல் மூலமாக ஏற்படும் வெள்ள அபாயம் 48 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தகவல் தெரிவித்துளளன . கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீர்மட்டம் உயர்நது வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன . இவை வெறும் பயமுறுத்தல் அல்ல என்பதற்கான சான்றுகளை , நாம் உலக நாடுகளில் கடற்கரையோர நகரங்கள்மூழ்குவதன் மூலம் அறியலாம் . இதுபற்றிய ஆராய்ச்சியில் 2100 ஆம் ஆண்டு கடல் அலைகள் மூலமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்துளளது . இதன்மூலம் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு காரணமாக 20 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் எனறும் எப்ரு கிரெஸி , லான் யங் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுளளது . பாதிப்பைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவேண்டும் . அடுத்து , கடல்நீர் நகரங்களுக்குள் புகாதபடி சுவர்களை கட்டலாம் என பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன . கடல்நீர் மட்டம் உயருவதற்கான முக்கிய காரணம் , வெப்பநிலை உயர்வு , துருவப்பகுதிகளில் உள்ள

அரசு கொள்கைகளை வகுத்தால் மட்டுமே பூமியைக் காக்க முடியும்!

படம்
நாம் நினைத்ததை நிலைமை மோசமாக உள்ளது டேவிட் வாலஸ் வெல்ஸ் , நியூயார்க் மேகசின் கூடுதல் ஆசிரியர் . வெப்பமயமாதல் பற்றி தி அன்ஹேபிட்டபிள் எர்த் என்ற நூலை எழுதியுள்ளார் . ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்கு வந்தவரிடம் பேசினோம் . நீங்கள் உங்கள் நூலின் தொடக்கத்திலேயே இப்போது உள்ளதை விட நிலைமை மோசமாகும் என்று கூறியுள்ளீர்களே ? நாம் என்ன செய்துள்ளோம் என்று கூட தெரியாதபடி வெப்பமயமாதலுக்கான விஷயங்களை செய்து விட்டோம் . இப்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் கூட புயல்கள் , கடலின் நீர்மட்டம் உயர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் . கொல்கத்தா போன்ற நகரங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் . வெப்ப பாதிப்பால் பலரும் சுருண்டு விழுவார்கள் . வெப்பமயமாதலால் , 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூழல் அகதியாக இடம்பெயர்வார்கள் . 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் இறப்பார்கள் . இதுமட்டுமன்றி , ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் கரையும் . இதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை திட்டமிடுவது அவசியம் . இதில் நிலப்பரப்பு ரீதியான அரசியல

டென்மார்க்கை தோற்கடிக்க நினைக்கும் பாரிஸ்! - சைக்கிள் சவால்!

படம்
giphy.com சைக்கிள் சொர்க்கம் பாரிஸ்! 1980 களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட சைக்கிள் இன்று பாரிசில் அபரிமிதமாக பெருகியுள்ளன. காரணம், அரசு சூழலுக்கு ஏற்றபடி தன் சட்டங்களை மாற்றி வருவதும். அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இசைவாக இருப்பதும்தான். கடந்தாண்டு செப்டம்பர் 2018 முதல் நடப்பாண்டு 2019 வரையில் மட்டும் சைக்கிள்களின் 54 சதவீத த்திற்கும் அதிகமாகியுள்ளது. அரசு பல்வேறு இடங்களில் சைக்கிள்களை ஷேரிங் செய்வதற்கான வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் சைக்கிள் சதவீதம் 62 ஆக உள்ளது. அந்த அளவை எட்ட இன்னும் மக்கள் சைக்கிள் மீது பாசம் காட்டி லட்சுமி, செல்லம்மா என செல்லம் கொஞ்ச வேண்டும். அவ்வளவேதான். ”இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மாற்றம் நடந்திருப்பதுபோல தோன்றலாம். உண்மையில் காரில் செல்பவர்கள் யாரும் சைக்கிளை அதற்கு மாற்றாக எடுக்கவில்லை. எப்போதும்போல பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவர்கள்தான் சைக்கிளை கையில் எடுத்துள்ளார்கள். பிறரும் தங்களுக்கு ஏற்ற மாசு குறைவான வழியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மட்டும்

கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா? இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு. மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது. குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். நன்றி - பிபிசி

வெப்பமயமாதலால் அழியும் பூமி!

படம்
அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளை விட ஆபத்தானது. வெப்பமயமாதல் பிரச்னைகள்தான். இவைதான் இன்று நாட்டின் ஒரு பகுதியில் மேக உடைப்பையும் மற்றொரு இடத்தில் வறட்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 1600 களில் ஏற்பட்ட வெப்பமயமாதல் பல்வேறு உயிரிகளை துடைத்து அழித்தது. தற்போது ஏற்பட்டு வரும் 1 டிகிரி செல்சியஸ் உயர்வும் இத்தகையை பாதிப்பை ஏற்படுத்தும வாய்ப்பு உள்ளது. மே 2019 ஆம் ஆண்டு கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு மில்லியனில் 415.39 எனும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். கார்பன் டை ஆக்சைடு  3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயர்ந்துள்ளது. கார்பன் டை ஆக்சைடின் உயர்வை 2050க்குள் 0 அளவுக்கு கொண்டு வருவது அவசியம். உலகம் வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டால் கடல் நீர் மட்டம் 230 அடி உயரும். தொண்ணூறுகளோடு ஒப்பிட்டால் இன்று 500 சதவீத அளவுக்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகிவருகின்றன. மேற்கு அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகினால், கடல் நீர் மட்டும் 8.2 அடி அளவுக்கு உயரும். நன்றி: க்வார்ட்ஸ்

மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்

படம்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ

இங்கிலாந்தில் சூடு பறக்கும் சூழல் போராட்டம்!

படம்
இங்கிலாந்தில் வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமானது, அவர்கள் விடுமுறை தினத்தன்று போராடுவதும் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதும்தான். ஆனால் அதற்காகவெல்லாம் அரசு சும்மா இருக்குமா? 2025 ஆம் ஆண்டிற்குள் கார்பனைக் குறைக்கும் நிர்பந்தம் இருக்கும் அரசை மேலும் போராட்டம் நடத்தி நெருக்கடியில் தள்ளியதற்காக, சுமார் 570 பேர்களை அரசு கைது செய்துள்ளது. இங்கிலாந்தின் ஹீத்ரு விமானநிலையத்தில் இளைஞர்கள் சூழல் தொடர்பான பாடல்களைப் பாடி போராடியதும் மக்களை உணர்ச்சிகரமாக போராட்டத்திற்கு அழைத்துள்ளது. போராட்டத்தில் அகாடமி அவார்டு வென்ற தாம்சன் என்ற நடிகையும் இணைந்துள்ளது போராட்டக்கார ர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பதிமூன்று முதல் பதினான்கு வரையிலான இளைஞர்கள் நாம்தான் பூமியின் கடைசி தலைமுறையா என்று கேள்வி கேட்டு வைத்த பேனர்கள் மக்களை போராட்டத்திற்கு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. என்னுடைய எதிர்காலம் பற்றிய பயத்தினால்தான் நான் போராட்டத்திற்கு வந்தேன். அதே பயம்தான் போராடுவதற்கான தைரியத்தையும் தந்தது என்று ராய

வெப்பமயமாதலின் விளைவுகள் என்ன?

படம்
புத்தக அறிமுகம் உலகில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதலால் அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றுகிறது. அல்லது மேக உடைப்பு ஏற்பட்டு வெள்ளம், அல்லது புயல் என ஏதேனும் மிதமிஞ்சி தாக்குகிறது. வெப்பமயமாதலுக்குப் பிறகு உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், அரசியல் மாற்றங்களைக் குறித்து ஆசிரியர் டேவிட் பேசுகிறார்.  நீர் எப்படி நமக்கு முக்கியமோ அதேபோலத்தான ஒயின் மற்றும்  காபி கூட. லண்டன் டூ சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானப் பயணத்தில் பல்வேறு நீர்ம பொருட்களைப் பற்றி மார்க் விவரிப்பதே நூலின் சுவாரசியம். லேபில் உள்ள பொருட்களோடு அலையடிக்கும் கடலும் உண்டு.  பாலினம் பொறுத்து ஆண், பெண் மூளைகளின் திறன்கள் மாறுவது உண்மையா என்பது பற்றி தீர்க்காமாக ஜினா ரிப்பன் ஆராய்ந்து எழுதியு ள்ள நூல் இது.  அமெரிக்காவை கதிகலக்கிய ஏலியன் என்ற கம்ப்யூட்டர் ஹேக்கரின் கதை இது. தற்போது பல்வேறு வங்கிகள் நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உதவி வருகிறார் என்றாலும் முன்னர் இவரது வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. அது குறித்த அறிமுகம் அருமை.  நன்றி: குட்ரீட்ஸ்

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள