இடுகைகள்

டாக்டர் எக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தம்பதிகள் ஒருவரையொருவர் ஏமாற்றுவது எதற்காக?

படம்
டாக்டர். எக்ஸ் pixabay வருகிற பஸ்ஸில் ஏறி குறிப்பிட்ட இடத்தில் இறங்கிக்கொள்வதுதானே நமது வாடிக்கை. திருமணம் கூட அப்படித்தான். குடும்ப அழுத்தம் காரணமாக பெண்ணை அல்லது ஆணை ஒருவர் திருமணம் செய்துகொண்டாலும், மனதிற்கு பிடித்தவர்கள் வெளியில் இருப்பார்கள். அவர்களை ஒருவர் தவிர்க்கவும் முடியாது. உங்களுக்கு ஒருவரோடு டீ, காபி குடிக்க பிடித்திருக்கிறது என்றால் அதில் தவறு என்ன? ஆனால் இதைப்பயன்படுத்தி பயன்களை அனுபவிப்பதில் ஆண்களே முன்நிற்கின்றனர். இதில் பொருளாதாரம் முன்னிலையில் உள்ளது. கிராமப்புறத்தில் கூலி வேலைக்கு பெண்கள் சென்று சம்பாதித்தாலும், பொருளாதாரக் கடிவாளம் ஆண்களில் கையில் இருக்கும். இம்முறையில் ஐந்து சதவீத பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றி, சல்லாபமாக இருக்கும் பெண்கள் எண்ணிக்கை 5 சதவீதம்தான். இதில் பொருளாதார சுதந்திரம் கொண்ட ஆண்கள் பச்சைக்கிளி போன்ற பெண்களுக்கு முத்துச்சரம் வாங்கிக்கொடுக்கும் அளவு 15 சதவீதத்திற்கும் அதிகம். பொருளாதாரத்திற்கு பெண்களை சார்ந்திருக்கும் ஆண்கள் ஒப்பீட்டளவில் குறைவு. அப்படியிருக்கும் பெண்கள் பெருமளவில் மற்றொரு ஆண்துணையை நட்பு தாண்டி அணுகுவதில்லை. ஆனா

இருமடங்கு புத்திசாலித்தனத்தின் விளைவு?

படம்
டாக்டர். எக்ஸ் நாம் இப்போது இருப்பதை விட புத்திசாலியாக இருந்திருந்தால்..... ஜியோமி போன்களை நோக்கியாவுக்கு முன்பே கண்டுபிடித்திருப்போம். 48 எம்பி கேமராவை வைத்து கிளு கிளு வீடியோக்களை உருவாக்கி பஞ்சாயத்து செய்திருப்போம். பிட்காயின்களில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்திருப்போம். ஹாலோகிராமில் பல்வேறு வித்தைகள் செய்திருப்போம். விண்வெளியில் காலனிகள் அமைந்திருக்கும் என ஏகமாக கற்பனைகள் பறக்கிறதா? பத்தொன்பதாம் நூற்றாண்டு புத்திசாலி ஆய்வாளரான ஐசக் நியூட்டனுக்கு கூட நாம் ஐக்யூ டெஸ்ட் செய்யவில்லை. அதிபுத்திசாலி என்பதால் ஐக்யூ டெஸ்ட் 200 மதிப்பெண்களுக்கு வைக்கப் போவதில்லை. புத்திசாலித்தன காரியங்களை விட அதை நிரூபிக்கத்தான் அதிக விஷயங்கள் செய்யவேண்டியிருக்கிறது இல்லையா?

தினசரி எக்சர்சைஸ் செய்ய மலைப்பாக இருக்கிறதா?

படம்
டாக்டர் எக்ஸ் திடீரென வார் படம் பார்த்து காலித், கபீர் போல உடம்பை ஏற்றுகிறேன். ஹிரித்திக் ரோஷனுக்கு சர்வதேச அளவில் டஃப் கொடுக்கிறேன் என நினைப்போம். அது மனப்பிராந்தி என்பது கேட் தாழ்ப்பாளை விலக்க அம்மாவை கூப்பிடும்போதே தெரிந்துவிடும். ஒருநாள் எக்சர்சைஸ் ஒன்பது நாள் ரெஸ்ட் என்பதுதான் நமக்கான விதி. ஏன் இப்படி நடக்கிறது என யோசித்திருக்கிறீர்களா? உடம்பில் சரியான அளவு நீர்ச்சத்து இல்லை. எலக்ட்ரோலைட்ஸ் இல்லை என ஓசோன் தண்ணீர் பாட்டில் விற்கிற கதைக்கு ஆதாரம் கிடையாது. என்ன செய்யலாம்? நடைமுறையில் வலிக்கும் தசைக்கு மெல்ல கைகளால் நீவி ஒத்தடம் போல கொடுத்தீர்கள் என்றால் அன்றும் சுகம் கிடைக்கும். அடுத்தநாள் வலியை நினைக்காமல் தொப்பை குறைய வாக்கிங் செல்லவும் முடியும். வாக்கிங்தான் போவீர்கள். ஆனால் உடலில் வயிறு, மார்பு, கால்கள் என சில இடங்களில் கடும் எரிச்சல் உருவாகும். இதற்கு காரணம் ரத்த ஓட்ட மாறுபாடுகள்தான். இதனால் உடல் கொடுக்கும் சிக்னலை அப்படியே ஏற்று மூளை கொடுக்கும் அலார எச்சரிக்கைத்தான் எரிச்சல். இதோடு நிறுத்திக்க என்று அதனை நினைக்கத் தேவையில்லை. கவனமாக நிதானமாக பயிற்சிகளைச் செய்தால

உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!

படம்
டாக்டர் எக்ஸ். விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா? விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது. டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார். இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன. விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அதிக காலம் காத்தி