உறுப்பு மாற்ற சோதனைகளுக்கு உதவும் விலங்கு-மனித கலப்பு உயிரிகள்!




© Getty Images




டாக்டர் எக்ஸ்.


விலங்கு மனிதர்கள் இணைப்பு சோதனைகளை ஏற்கலாமா?


விலங்கு அணுக்கள், மனிதர்களின் அணுக்கள் இணைந்து உருவாக்கப்படும் உயிரிகளை சிமேரா என்று அழைக்கின்றனர். மனித ஸ்டெம் செல்களை விலங்குகளின் கருக்களுக்குள் செலுத்தி இந்த கலப்பு பரிசோதனையைச் செய்கின்றனர். என்ன பயன் என்று கேட்கிறீர்களா இருக்கிறது.

டோக்கியோ பல்கலைக்கழகத்தின் அரசின் அனுமதி பெற்று எலி - மனிதன் ஆகியோரின் செல்களைப் பயன்படுத்தி சோதனைகள் நடைபெற்றது. இதனை டாக்டர் ஹிரோமிட்சு நாகாச்சி என்பவர் தலைமையேற்று செய்தார்.

இது ஜப்பானில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சால்க் பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் - குரங்கு செல்கள் கொண்ட கலப்பின  பரிசோதனை நடைபெற்றதாக ஸ்பானிஷ் பத்திரிகை எல் பாரிஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செல்கள் பின்னர் அழிக்கப்பட்டன.

விலங்கு - மனிதர்கள் கலப்பின உயிரிகள் உருவாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், உறுப்புகள் போதாமைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஏராளமானோர் உறுப்பு பழுதாகி மாற்று உறுப்புக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இவர்கள் அதிக காலம் காத்திருக்க முடியாது. அதற்காகத்தான் இப்படி அவசரமாக ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.  ஜப்பான் ஆராய்ச்சியாளர் நாகாச்சி கணையம் ஒன்றை கலப்பின செல்களைக் கொண்டு உருவாக்கினார். பின்னர் நீரிழிவால் பாதிக்கப்பட்ட எலி ஒன்றுக்கு இம்முறையில் கணையத்தைப் பொருத்தினார். இதன் விளைவாக, அதன் நீரிழிவு நோய் குணமானது.

இந்த வெற்றி வாய்ப்புதான் கலப்பின செல்களைப் பயன்படுத்தி உறுப்புகளை உருவாக்குவதற்குக் காரணம். எலிகளின் உறுப்புகள் மனிதர்களுக்கு சற்று நெருங்கி பயன்படுத்துவதற்கு சரியாக இருக்கும் என்பதால் அதனைப் பயன்படுத்துகின்றனர். இதில் பன்றிகள், ஆடுகள் போன்றவைற்றைப் பயன்படுத்தாததற்குக் காரணமும் இதுதான்.

2017 ஆம் ஆண்டு இஸ்புசா பெல்மாண்டே என்ற ஆராய்ச்சியாளர், பன்றி - மனிதர்கள் கலப்பின செல்களைப் பயன்படுத்தி உறுப்புகளை வளர்க்க முயற்சித்தார். ஆனால் ஒரு லட்சம் செல்களில் ஒன்று என்ற சதவீதத்தில் மனிதர்களின் செல்கள் உருவாகின. இது மிகவும் குறைவு.

நன்றி: பிபிசி