கல்வி போராளி!
கல்வி போராளி ! அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் . " கல்விக்கு அதிக செலவழிப்பதாக உணர்கிறீர்களா ? கல்வி கற்பதை புறக்கணிப்போம் " என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திப்போராடும் கூட்டத்தை தன் கூர்மையான பேச்சின் வழியே தீர்க்கமாக ஒழுங்குபடுத்துகிறார் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவரான ராண்டி வெய்ன்கார்டன் . கல்விக்கான நிதியை அதிகரிக்கவே இப்போராட்டம் . மேற்கு வர்ஜீனியா , இலினாய்ஸ் , புவர்ட்டோ ரிகோ ஆகிய இடங்களிலும் போராட்டம் தொடங்கியுள்ளது . " பள்ளிகளின் சீரமைப்பு , வகுப்பறைகளில் இருக்கை , மேஜைகளுக்கான தேவை அதிகரிப்பு , பென்ஷன் , பொதுக்கல்விக்கான தொகை , காலாவதியான பாடத்திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி போராடுகிறோம் " என்கிறார் ராண்டி . மாணவர்களின் நலன்களைவிட ஆசிரியர்கள் பயனடையவே மெனக்கெடுகிறார் என்று புகார்கள் என்றாலும் ராண்டி எதையும் பொருட்படுத்துவதேயில்லை . ட்ரம்ப் அரசுக்கு எதிரான பல்வேறு பேரணிகளிலும் ராண்டியை நீங்கள் பார்க்கலாம் . ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அவர்களுக்கான வழக்குரைஞராகவும் இரண்டு பணிகளையும் செய்து வருகிறா