இடுகைகள்

வீடியோகேம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்றுகாலத்தை எதிர்கொள்ள முடியாத இளைஞர்கள் வீடியோகேமில் மூழ்கிவிடுகின்றனர்!

படம்
                  ஜெனிபர் கொலரி குழந்தை வளர்ப்பு வல்லுநர் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் பலரும் மன அழுத்தம் , பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரே ? குழந்தை வளர்ப்பு என்பது காலந்தோறும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது . இதில் பல்வேறு விதமான நம்பிக்கைகள் , பிளவுகள் உள்ளன . 1960 ஆம் ஆண்டில் உங்கள் குழந்தையை அழ விடுங்கள் என்று கோட்பாடு ஆட்சி செலுத்தியது . குடும்பத்தில் குழந்தை மீது அதிகாரம் செலுத்துவது , சுதந்திரமாக விடுவது என்பது பல்வேறு கட்டங்களில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது . இப்போது குழந்தைகளுக்கு காலகட்ட நெருக்கடி காரணமாக பதற்றம் , மன அழுத்தம் , ஏடிஹெச்டி தொடர்பான அறிகுறிகள் உள்ளன . சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களைப் பேசும் இளைஞர்கள் எளிதில் பதற்றம் , மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர் . இவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , பிறரிடமும் கூட இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு , அதற்கு சாப்பிடும் மருந்துகளைப் பற்றி பேசுகிறார்கள் . ஆனால் விரைவில் நம்பிக்கையற்று போய்விடுகிறார்கள் . இந்த வகையில் யாரும் நம்பிக்கை பெ