இடுகைகள்

அதிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

படம்
  பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா... இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார்.  பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள்.  இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுக...

ஒருவர், மக்கள் திரளின் முடிவுகளை பின்தொடர்வது ஏன்?

படம்
  உளவியல்  கேள்வி பதில்கள் அதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் நம்புகிற உண்மைக்காக போராடவேண்டு்ம். இந்த போராட்டத்தில் யாருக்காக போராடுகிறீர்களோ அவர்களே கூட உங்களை இழிவு செய்யலாம். அரசு உங்களை பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யலாம். உங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படலாம். அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வழக்கு பதிவு செய்து அலைய வைக்கலாம். ஆனால் பொதுநலனுக்கான போராடும், உண்மையைப் பேசும் மனிதர்கள் உலகமெங்கும் இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்துதான் முன்னேறுகிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் சிறைப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால், உங்களின் வாழ்க்கை உண்மையை பேசி மக்களுக்காக போராடுபவர்களுக்கான உரமாகும். முட்டாள்தனமான பணிதல் அரசை வலுப்படுத்தலாம். சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க ஆதரவளிப்பதாக அமையும். நெருக்கடி வந்தாலும் நேர்மையான அணுகுமுறையை கைவிட்டுவிடக்கூடாது. மதவாதம், அதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகள், கடந்தகால வரலாற்று வெறுப்பு ஆகியவை நிகழ்கால மக்களின் வாழ்வை குலைத்து போட்டுவிடும். அவற்றை தடுப்பது சிந்தனையாளர்களின் பணி. அ...

வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

படம்
  வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம் இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது.  பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி ...

தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review

படம்
 தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்  ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங் கட்டுரை நூல் 297 பக்கங்கள் ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை.  ஷி எ...

ஆப் வழியாக மக்களை, கட்சி உறுப்பினர்களை கண்காணிக்கும் ஷி ச்சின்பிங்!

படம்
  ஆப் வழியாக கண்காணிப்பு சீனாவில் ஷி ச்சின்பிங் செல்வாக்கு என்பது தானாக வளர்ந்தது என்று கூறுவதை விட அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கில் வளர்த்தெடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். ஏற்கெனவே ஷி யின் உரைகளை நூலாக வெளியிட்டு கட்சி பள்ளிகளில் பாடமாக வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக, ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். மிகப்பெரிய அதிகாரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் ஆப்பின் பெயர். ஷி ச்சின்பிங் சிந்தனைகளிலிருந்து அரசு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கற்றுக்கொள்ளலாம். இதை கட்சியின் பிரச்சார நிறுவனம் கண்காணிக்கும். 2019ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டுகிறது. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40-60 சதவீதமாக உள்ளது. இந்த ஆப்பை பொதுவுடைமைக் கட்சிக்காக தயாரித்து கொடுத்தது அலிபாபா குழுமம். குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஷி ச்சின்பிங் எண்ணங்கள் வண்ணங்களைப் பற்றி ஒருவர் படிக்காமல் தேர்வு எழுதாமல் வெளியே வரமுடியாது. கொரோனா காலத்தில் ஷியின் ஆப் பயன்பாடு, அதிகரித்தது. ...

வறுமை ஒழிப்பு திட்டத்தில் அதிபர் ஷி ச்சின்பிங் சாதித்தது என்ன?

படம்
 ஷி ச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு ஷி ச்சின்பிங் கிராமப்புற வறுமை ஒழிப்பை தனது பேச்சுகளில், கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் நகர்ப்புற நிலைமைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்தவேண்டுமென கூறியவர் முன்னாள் அதிபர் டெங். பொருளாதார வளர்ச்சியின் வழியாக உலகளவிலான அந்தஸ்து, அங்கீகாரம் பெறுவதே நோக்கம்.  சீனாவில் தனிநபர் வருமானம் 2000ஆம் ஆண்டில் 500 தொடங்கி 4000 டாலர்கள் அளவில் பெருக வேண்டும் என்பது அவரது கனவு. இந்த வகையில் வறுமை நிலையில் இருந்து நாடு மேலெழுந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் என்பது அவரது கனவு.  ஆனால், டெங் எதிர்பார்த்ததை விட நாடு வேகமாக முன்னேறி வளர்ந்தது. ஆனால் இங்கே ஒரு பிரச்னை எழுந்தது. தாராளவாத பொருளாதாரம் , சர்வாதிகார நாடு என முரண்பாடுகள் உருவாகியது. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. டெங்கிற்கு அடுத்து அதிபரானவர்களான ஜியாங் ஜெமின், ஹூ ஜின்டாவோ ஆகியோரும் சீனர்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்க முயன்றார்கள். அதற்கான இலக்குகளை நிர்ணயித்தனர்.  ஷி சீனா வளம் நிறைந்த நாடாக மாறுவது கடந்து வறுமை ஒழ...

மறுபிறப்பெடுத்து எதிர்தரப்பில் நின்று தனது அண்ணனை பழிவாங்கும் தம்பி!

படம்
    ரெக்கிரஸ்டு ட்யூக் சன் ஏஸ் எ அசாசின் மங்காகோ.காம். நிறைவுறாத கதை மங்கா காமிக்ஸ் வெர்ட் என்ற குடும்பம் உள்ளது. அரசருக்கு ஆதரவாக எல்லையில் போரிடும் குடும்பம். அதில், மூத்தவன் அசெல், மனச்சிதைவு கொண்ட பொறுக்கி. அவனுக்காக அதே குடும்பதில் உள்ள சியான் என்ற சகோதரன் செய்யும் உதவிகளும், இறுதியாக அவன் அசெல் செய்த துரோகத்தால் வீழ்வதுமே முன்கதை. அதை மாற்றுவதற்கு சியான் மறுபிறப்பில் முயல்கிறான். சியான் ஒரு தீயசக்தியைப் பின்பற்றுபவன். அந்த இனக்குழுவின் வாளை பெறும் முன்னுரிமை பெறுகிறான். பெயர் தீயசக்தி இனக்குழு என்று கூறப்பட்டாலும், அவர்கள் முக்கியப்பணி, சமூகத்தில் தீங்கிழைப்பவர்களை கொன்று களைவதே. ஆனால் ஒளிசக்தி என்ற இனக்குழு உள்ளது. காட் ஆப் லைட் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்படுபவர்கள், பெருமை புகழுக்காக எந்த இழிவையும் செய்ய தயங்காதவர்கள். தங்களுக்கு நல்லபெயர் வர மோசமான செயல்களை இவர்களே செய்து, அதை இவர்களே தடுத்து மக்களிடையே நாயகனாவது. அதன் வழியாக அதிகாரத்தை, செல்வாக்கை, பணத்தை அடைவது லட்சியம். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட சியான், தனது இறப்பிற்கு பிறகு பத்தாண்டுகள் பின்னோக்கி போகிறான். அதா...

மக்கள் அதிகார அமைப்புகளில், அதிகார பரவலாக்கம்!

படம்
  ஒரு அமைப்பை குறிப்பிட்ட கட்டமைப்பில் உருவாக்கினால், அதை எதிர்பார்த்தபடி பயன்படுத்திக்கொள்ளலாம். சரிதான். ஆனால், மக்கள் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை குறிப்பிட்ட முறையில் கட்டமைக்கப்படுவதில்லை. அங்கு நடக்கும் தகவல்தொடர்புகளும் கூட தனித்துவம் கொண்டவை. ஆட்களை ஒருங்கிணைப்பது, உரையாடுவது, குறிப்பிட்ட பணிகளை செய்வது அனைத்துமே பிற தன்னார்வ, தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக, மக்கள் அதிகார அமைப்புகளில் கண்காணிப்பு என்பது இருக்காது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கும் சென்றாலும் உங்களை யாரோ ஒருவர் கண்காணிப்பார். ஆசிரியர், பேராசிரியர் அல்லது கல்லூரி முதல்வர், நிறுவன முதலாளி, கண்காணிப்பு கேமரா பிரிவு என ஏதாவது ஒரு நச்சு இருக்கும். இப்படியான கண்காணிப்பு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதாகும். இதை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் செய்வதில்லை. புக்சின், பாகுனின், ஃப்ரீமன் என பல முன்னோடி தத்துவவியலாளர்கள் இதைப்பற்றி கூறியிருந்தாலும் கூட நடைமுறையில், கண்காணிப்பை செய்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அமைப்புகளில் உருவாகும் உறவுகள் நீர்போன்ற இலகுவான தன்மை கொண்டவை. ...

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

அதிகாரத்தை, பலவந்தத்தை அழிப்பதன் மூலம் உருவாக்கும் மாற்றங்கள்!

படம்
    ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது. மக்களின் ஆதரவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த புரட்சி என்பது மக்களுக்கு பெரிய நியாயத்தை செய்துவிடாது. ரஷ்ய நிலத்தில் ஏராளாமான புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை எப்படி தோற்றுப்போயின என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிகள். அதற்கு பிறகு மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அதிகாரத்தை ருசிப்பதில் தங்களுக்குள் அடித்துக்கொண்டன. இதனால் அவர்கள் பெற்ற வெற்றியை எதிரிகளுக்கு தாரை வார்த்தனர். ஒரு நாட்டிற்கு அடிப்படையானது உணவு. மக்களின் ஆதரவோடு வென்றவர், திடீரென சர்வாதிகார பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கினால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியைப் பெற முடியாது. வெற்று சட்டங்கள் தொழில்துறையை இயங்க வைக்காது. உள்நாட்டு உற்பத்தி அதிகம் என்ற கூவல்கள், பசியோடு காயும் மக்களுக்கு வயிறார சோறு இட்டுவிடாது. அதற்கு சிந்தனை, செயல்திட்டம் என இரண்டும் தேவை. அரசின் வானொலி, நாளிதழ் விளம்பரங்கள், அறைகூவல்கள், கைக்கூலி ஊடகங்கள் சேர்ந்து உழைத்தாலும் கூட நாட்டை முன்னேற்ற ஆக்கப்பூர்வ செயல்திட்டம் தேவை, மக்களைப் பற்றி புரிந்துகொள்ள...

ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது

படம்
    ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென். சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர். அதிபர் ஷியின் அப்பா, ஷ...

வன்முறைதான் எங்கள் மொழி!

படம்
  வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது. மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்...

அதிகாரச் செல்வாக்கு பெற்ற தொழிலதிபர்கள் - பெண்கள்

      பிட்டாயா வோரபன்யாசாகுல் அதிபர், இயக்குநர், குருங்தாய் கார்ட் தாய்லாந்து pittaya vorapanyasakul krungthai card தாய்லாந்து நாட்டில் நிதிச்சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் குருங்தாய். இந்த நிறுவனம் கடன் அட்டைகளை மக்களுக்கு வழங்கி அதன் வழியாக நிதிச்சேவைகளை செய்து வருகிறது. பிட்டாயா, கடந்த ஜனவரி மாதம், குருங்தாயின் அதிபர், இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னர், குருங்தாய் சொத்து நிர்வாக நிறுவனத்தின் கணக்கு தணிக்கை கமிட்டியின் தலைவர், உறுப்பினாக செயல்பட்டு வந்தார். ரோடா ஏ ஹூவாங் அதிபர், இயக்குநர், ஃபில்இன்வெஸ்ட் டெவலப்மென்ட் நிறுவனம் பிலிப்பைன்ஸ் rhoda a huang fillinvest development 2023ஆம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர், அதிபராக பொறுப்பேற்ற ரோடா, கோடியானுன் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. முதல் வெளிநபராக நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு முன்னர், ஜேபி மோர்கன் சேஸ், கிரடிட்சூஸ் பிலிப்பைன்ஸ், பிபிஐ கேபிடல் முதலீட்டு வங்கி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஃபில் இன்வெஸ்ட் நிறுவனம், வங்கி, நிலம், மின்சாரத்துறையில் இயங்கி வருகிறது. ரோடா, சூரிய ...

டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

படம்
  How To Disappear: Erase Your Digital Footprint, Leave False... Author: Frank M. Ahearn Publisher: Lyons Press தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.  இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.  அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவன...

கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

படம்
  ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963. பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம்.  அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக க...

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அட...