இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூழலுக்கு உகந்த விவசாயத்தை கையில் எடுத்து சாதித்த கியூபா!

படம்
பசுமை சூழலை உருவாக்க அதுதொடர்பான ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவை. அவை வளரும்போதுதான், அதைச் சார்ந்த வணிகமும் உருவாகும். மக்களும் அதன் பயனை உணர்வார்கள். இப்படியான மாற்றம் பலவந்தமாக இல்லாமல் இயல்பாக மடைமாறுவது நடக்கும். அரசு கட்டமைப்பு அளவில் பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து அதை பரவலாக்க வேண்டும். அலுவலகத்திற்கு காரில் அல்லது பைக்கில் செல்கிறீர்கள். என்ன காரணம், நேரத்திற்கு பேருந்தோ, ரயிலோ கிடைக்காததுதான். அலுவலகத்திற்கு அருகிலேயே செல்லும்படியாக ரயில் வசதி இருந்தால், கார், பைக்கில் முதலீடு செய்யவேண்டியதில்லைதானே? காய்கறிகளை நாமாகவே உற்பத்திசெய்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளையும் உருவாக்கிக்கொண்டால் ஆற்றல் அதிகம் தேவைப்படாது. தூய ஆற்றல் ஆதாரங்களே போதுமானது. அடிப்படையில் ஆற்றலை செலவழிப்பதில் சிக்கனம் தேவை. 1990ஆம் ஆண்டில் கியூபாவிற்கு சோவியத் யூனியன் அளித்து வந்த எரிபொருட்கள் குறைந்துவிட்டன. எனவே, அதைத் தவிர்த்து பொருளாதாரத்தை இயக்க முயன்றனர். பொதுப்போக்குவரத்தில் அரசு முதலீடு செய்தது. மண்புழு உரத்தை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்கம் கொடுத்தது. தூய ஆற்றல் ஆதாரங்க

உயிரி எரிபொருள்(பயோ ஃப்யூல்) - காட்டிலுள்ள உயிரினங்களை அழிக்கும் எரிபொருளாக மாறிய கதை!

படம்
கரிம எரிபொருட்களுக்கு மாற்றாக நிறைய நாடுகள் உயிரி எரிபொருட்களை பரிந்துரைக்கின்றன. அப்படி மாறினால் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில் அது தவறான வாதம். உயிரி எரிபொருட்களை விளைவதற்கு பயன்படுத்தும் உரங்களுக்கு அடிப்படையானதே கரிம எரிபொருட்கள்தான். அவை இல்லாமல் எப்படி உயிரி எரிபொருட்களுக்கு அடிப்படையான பயிர்களை விளைவிக்க முடியும்? உணவுப்பயிர்களை விளைவிப்பது குறைந்துவரும் சூழலில் ஒருவர், உயிரி எரிபொருட்களுக்கான பயிர்களை விளைவித்தால் அங்கு சூழல் என்னாகும்? விரைவில் நாடு உணவு தானியங்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதே நடைமுறை உண்மை. உயிரி எரிபொருட்களில் முக்கியமானது, பனை எண்ணெய். அதாவது பாமாயில். இதை எப்படி விளைவிக்கிறார்கள்? இந்தோனேஷியா, மலேசியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் மழைக்காடுகளை வெட்டி எறிந்துவிட்டு அங்கு பனைமரக்கன்றுகளை நட்டு பனை எண்ணெய்யை உற்பத்தி செய்கிறார்கள். உணவு பயிர்களுக்கு மாற்றாக பணப்பயிர்களை விளைவிப்பது, ஒருகட்டத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தைக் கொண்டு வரும். மேலும், அமெரிக்காவில் வாகனங்களுக்கு எரிபொருளாக சோளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன

சூழல் மாநாடுகளை இயக்கும் பெட்ரோலிய, நிலக்கரி பெருநிறுவனங்கள் - மாறாத கொள்கைகள், அபகரிக்கப்படும் பழங்குடிகளின் நிலங்கள்

படம்
சூழல் மாநாடுகளை கவனித்தால், அதில் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சூழல் ஆர்வலர்கள் என இருப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருந்து அனைத்தையும் இயக்குவது, பெருநிறுவனங்கள்தான். எனவே, மாநாடுகளில் எடுக்கும் முடிவுகள் வணிகத்தை பாதிக்காதவாறு மாற்றிக்கொள்கிறார்கள். சூழலைக் காப்பது பற்றி பேசினால், பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் வாழ்வை மாற்றியமைக்கும் என அதை மறுத்து பேசுகிறார்கள். ஏழை மக்களின் வறுமை, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற லேபிள்களின் பின்னணியில் பெரு நிறுவனங்களின் லாபவெறி மட்டுமே உள்ளது. போட்ட முதலீடுகளுக்கு குறையாத லாபம் வரவேண்டும். அதை சூழல் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து குறைத்துக்கொள்ள மனம் வரமாட்டேன்கிறது என்பதே உண்மை. காலநிலை மாற்ற மாநாடு நடக்கும் இடங்களுக்கு வெளியில் இளைஞர்கள், சூழல் ஆர்வலர்கள் உலக நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பலருக்கும் பழகிவிட்டது. சூழல் பிரச்னைகள் மேற்கு நாடுகளில் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டன. அப்போதே அதை சரிசெய்யவேண்டும் என கூறத் தொடங்கிவிட்டனர். சூழல் மேம்பாட்டிற்கான வணிக கௌன்சில் என்ற உலகளாவிய அமைப்பு இயங்கி வருகிறது. இதில், உள்ள அ

கார்பன் டை ஆக்சைடு, பயிர்களுக்கு நல்லது - நச்சு பிரசாரம் செய்யும் வலதுசாரி பெருநிறுவனங்களும், கைக்கூலி சிந்தனை அமைப்புகளும்

படம்
சமூக பகிரலுக்கு எடுத்துக்காட்டு, நூலகம். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல நல்ல நூலகங்கள் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிக்கழகமாக மாறிவிட்டது. ஆனால், முன்னர் ஏராளமான நல்ல நூல்களுக்கான உறைவிடமாக இருந்தது. தனிநபராக ஒருவர் புத்தக திருவிழா அல்லது நூல் கடைக்குச் சென்று எதையும் வாங்க வேண்டியதில்லை. நூலகத்தில் அரசு நூல்களை வாங்கி வைத்திருக்கும். அதை ஒருவர் இலவசமாக அணுகி படிக்கலாம். வீட்டில் எடுத்து வந்து படிக்க காசு கட்டவேண்டும். இதன்மூலம் நிறைய நூல்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. சூழல் சார்ந்து அனுகூலங்கள் அதிகம். காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டி கூழாக்கவேண்டியதில்லை. மாசுபாடும் குறையும். கார் பூல் எனும் ஒரு காரை நிறைய பயணிகள் பகிர்ந்துகொண்டு பயணிப்பதைக் கூட சமூக பகிரலில் சேர்க்கலாம். சூழல் சோசலிசம் தனிநபர் உடைமையை எதிர்க்கவில்லை. வீணாக்குதலை தவிர்க்க கோருகிறது. இயற்கை வளம் சேதப்படுத்துதலை தடுக்க முயல்கிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் நாட்டிற்கு தேவை. ஆனால், அதற்கான வழி இயற்கைச்சூழலை குறைந்தளவு பாதிப்பதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை ஈடுகட்ட முடியாது. இயற்கை வளம் அழிப்பு சார்ந்த விஷயங்களை ச

இந்தியர்களின் கால்களுக்கு அகலமான செருப்புகள்- புதிய காலணி அளவீடு பா

படம்
  புதிய காலணி அளவு பா - அவசியம் என்ன? இந்தியாவில் தற்போது செய்யப்படும் காலணிகளின் அளவுக்கு ஐரோப்பிய, இங்கிலாந்து நாட்டு அளவீடுகள்தான் பயன்படுகின்றன. அதை மாற்றும் விதமாக பா - பாரத் என்ற பெயரில் இந்தியர்களின் தனித்துவம் கொண்ட காலணி அளவீடு கொண்டு வரப்படவிருக்கிறது. இதற்காக தேசிய அளவிலான ஆய்வு நடைபெற்றது.  2021-22 என இரண்டு ஆண்டுகளில் 1,01,880 மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் உள்ள எழுபது இடங்களில் உள்ள மக்களை இதற்காக தேர்ந்தெடுத்தனர். இந்தியர்களின் தோராய காலணி அளவைக் கண்டுபிடிக்க 3டி ஸ்கேனிங் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.  ஆண்களுக்கு பதினொரு வயதிலும், பெண்களுக்கு பதினைந்து அல்லது பதினாறு வயதிலும் கால்களின் வளர்ச்சி கூடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட 3டி ஸ்கேனர்கள் மூலம் கால் அளவு, அதன் வடிவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களை விட இந்தியர்களின் கால் அகலமாக உள்ளது. மேற்குநாடுகளின் காலணி அளவு, இந்தியர்களுக்கு குறுகலானதாகவே இருந்துள்ளது. இதை மாற்றினால் அவர்களுக்கு கால் அளவை விட சற்று தாராளமான செருப்புகள்

பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித்தவித்த இந்தியாவில், தொடங்கிய இந்திராகாந்தியின் யுகம்!

படம்
  குழப்பமான காலத்தில் தொடங்கிய இந்திராகாந்தியின் ஆட்சி! சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது (1962), நான்காவது (1967) மக்களவைத் தேர்தலின்போது மக்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகி தவித்தது. அன்றைய இளம் வாக்காளர்கள் அனைவருக்குமே இந்தியா என்னாகும் என்ற தவிப்பு இருந்தது. அப்போதுதான் இந்தியா சீனாவுடன் போரிட்டு தோற்றுப் போயிருந்தது. அதற்கடுத்த கெடுவாய்ப்பாக பிரதமர் நேரு 1964, மே 27 அன்று காலமானார். அதற்கடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி இரண்டு ஆண்டுகள் கூட பதவியில் முழுமையாக இருக்கவில்லை. அவரும் விரைவிலேயே காலமானார்.  இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு மாதங்கள் போரிட நேர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. பிறகுதான் அமைதி ஒப்பந்தம் உருவானது. தாஸ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாஸ்திரி அதற்கடுத்த நாளான ஜனவரி பதினொன்றாம் தேதி மரணமடைந்தார். உஸ்பெக் நகரில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. மேற்கண்ட ஒப்பந்தம் கூட ஐ.நாவின் தலையீட்டாலேயே சாத்தியமானது.  இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காலமானபோது தற்காலிக பிரதமராக இருந்தவர் குல்சாரிலால் நந்தா. இவர் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இயங்கி வந்தார். ச

அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  அமரத்துவத்தை தேடி குரூர ராணியின் மாளிகைக்கு பயணிக்கும் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள்! அல்டிமேட் நோட் சீன டிராமா 34 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் 1976ஆம் ஆண்டு குயின் மதர் என்ற தொன்மை கால ராணி வாழ்ந்த இடங்களை ஆராய்ச்சி செய்யப்போன ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போகிறார்கள். உயிருடன் வந்தவர்களில் மிகச்சிலரே  இருக்கிறார்கள். காணாமல் போன ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வீடியோ டேப்புகள் மூன்று நபர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை துப்பாக கொண்டு பலரும் குயின் மதர் மாளிகையை அடையாளம் காண தேடிச்செல்கிறார்கள். இந்த பயணத்தில் மிஸ்டிக் நைன் எனும் பழைய புகழ்பெற்ற குழு உறுப்பினர்களின் புதிய தலைமுறை ஆட்கள் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பதே கதை.  தேடல் பயணத்தில் பலருக்கும் பல நோக்கம் இருக்கிறது. பெரும்பாலான ஆட்கள் நல்ல காசு கிடைக்கும், பொக்கிஷம் கிடைக்கும் என நம்பி வருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை அமரத்துவம் பற்றிய உண்மைகள் கிடைக்கும் என வருகிறார்கள். அப்படியான உண்மையைத்தான் அல்டிமேட் என்கிறார்கள். இதை அறிந்தவர்கள் யாரும் சுயநினைவுடன் இருப்பதில்லை. பிறரைக் கொல்லும் வெறி

எங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது வேடிக்கை பார்க்க முடியாது! - நேமொன்டோ நென்க்யூமோ

படம்
 பூமியின் காவலர்கள் - நேமொன்டே நென்க்யூமோ சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அமேசான் காடுகளில் கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் என்ன பிரச்னை என்று.... அவர்கள் அப்படி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு அளவற்ற கோபம் உருவாகிறது. உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து எரியும்போது, அதை அணைக்க முயற்சிப்பீர்கள்தானே? நிச்சயம் அமைதியாக நின்று எரியும் நெருப்பை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள்தானே?  உங்களது வீடு, உறவினர்கள் வீடு, உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் நெருப்பால் அழிவைச் சந்திக்கும்போது அதைத் தடுக்க முயல்வீர்கள்தானே? உங்கள் நாட்டை அணுக்கதிர்வீச்சிலிருந்து எதற்காக பாதுகாக்க நினைக்கிறீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? எங்கள் வீடுகளும், மக்களும் அழிவை, பேரிடரை சந்திக்கும்போது வெளிப்புற மக்கள் கேட்கும் இத்தகைய கேள்விகள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. மேற்குலகினரின் குடியேற்றம் எங்கள் இன மக்களின் வாழ்க்கையை வீடுகளை வாழ்வாதாரத்தை அழித்தொழித்தது. இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உயிரைப் போராடி தக்க வைத்திருக்கிறேன். மேலும் பல்வேறு போலியான செய்திகளை

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரியாதையைக் கூட அழிக்கா

அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

படம்
  கோடிங் டெமாக்கிரசி மௌரின் வெப் எம்ஐடி பிரஸ் கட்டுரை நூல்  உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது.  அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான்.  அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடைப்பது கடினம். பெரும

அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

படம்
  அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்! இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.  தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.  இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.  சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற்று முந்தியது. இதன்

நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு

படம்
  நல்லவனொருவன், கெட்டவனொருவன் - மருத்துவரின் விபரீத ஆய்வு மிஸ்டர் ஹெகல் அண்ட் மிஸ்டர் ஹைட் லூயிஸ் ஸ்டீவன்சன் நாவல்  மொழிபெயர்ப்பு - ரகுநாதன் ஒருவரின் மனதிற்குள் நன்மை, தீமை என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை தனியாக பிரித்து அதற்கென உருவம் கொடுத்தால் இரண்டு இயல்புமே சந்தோஷமாக இருக்குமே என மருத்துவர் யோசிக்கிறார். இதற்காக அவர் செய்த ஆய்வு விபரீதமான திசையில் செல்கிறது. அதன் விளைவுகள் என்னவென்பதே கதை.  ஒருவரின் மனதில் இருக்கும நன்மை, தீமைக்கெதிரான போர் நிற்காத ஒன்று. காலம்தோறும் நடந்துகொண்டு இருக்கிற ஒன்று. இதை ஒருவர் தனித்தனியே பிரித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அது எப்படியொரு மோசமான தீர்வை நோக்கிச் செல்கிறது என்பதே கதை.  வக்கீல் அட்வன்சன், அவரது நண்பர் என்பீல்ட், டாக்டர் ஜெகில், டாக்டர் லான்சன், ஜெகிலின் வேலைக்காரன் பூல் ஆகியோர்தான் நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள். ஒரு மனிதனின் மனதிலுள்ள நன்மை, தீமை ஆகிய இரு இயல்புகளுக்கான போராட்டம் அவனை எப்படியான நெருக்கடியில் தள்ளுகிறது என்பதே கதை. இதை கடிதம் வழியாக டாக்டர் ஜெகில் சொல்லும்போது யாருக்கும் மயிர்க்கூச்செரியும். அந்தளவு நம்ப முடியாத ஒரு க

போதை கார்டெல் குழுவை அழிக்க கைகோர்க்கும் இரு நண்பர்களின் போராட்டக்கதை!

படம்
  சிட்டி ஆஃப் சாவோஸ்  சீன தொடர் 24 எபிசோடுகள் ஐக்யூஇ ஆப் கலின்சியா என்ற  நாடு உள்ளது. அதில் புகழ்பெற்ற நகரம் லாங்புக். இங்கு போதைப்பொருட்கள் கார்டெல்கள் வலுவாக உள்ளன. அதில் முக்கியமான கார்டெல், செவன்ஸ்டார் சொசைட்டி. இந்த அமைப்பு, ஆர்எக்ஸ் 45 என்ற போதைமருந்தை தயாரித்து மறைமுகமாக விற்று லாபம் பார்த்து வருகிறது. நேரடியாக செய்யும் வியாபாரங்கள் தனி. குளியலறை, கடை, மதுபானம் விற்பது, வணிக வளாகங்கள், கிளப்புகள், சூதாட்ட மையங்கள்  என ஏராளமானவை நடைபெறுகிறது.  சீனவீரர், இந்த போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்க கலின்சியா வருகிறார். அதற்காக அவர் வேண்டுமென்றே குற்றம் ஒன்றில் சிக்கிக்கொண்டு லாங்புக் கடல் சிறைக்கு செல்கிறார். அங்கு, யு யோங்ஜி என்ற செவன்ஸ்டார் சொசைட்டியின் துணைத்தலைவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்பவர்களை இடைமறித்துக் கொன்று அந்த மனிதனுக்கு நெருக்கமாகி போதை மாஃபியாவில் சேருகிறார். கூடவே, தீவின் சிறையில் இருந்த வார்டன் லாவோ பாயும் சேருகிறார். இவர், யு யோங்ஜியின் பள்ளிக்கால நண்பர்.  சீன வீரர் லூஜா, தன்னைப் பற்றிய ரகசியங்களை லாவோ பாயிடம் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார். பாய்க்கு தனது தம