இடுகைகள்

இடைமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையை அப்கிரேட் செய்ய முடியுமா?

படம்
pixabay மூளையின் திறன்களைப் பற்றி நாம் நிறைய பெருமை கொள்கிறோம். ஆனால் சிறு சிப்களில் அதிக தகவல்களை அடக்கி வைக்கத் தொடங்கிவிட்டோம். மேலும் கணினி அளவுக்கு கணக்குகளைப் போட்டு நம்மால் செயல்பட முடியவில்லை. அதுவே மனித மூளையின் முதல் தோல்வி. இனிமேலும் பல்வேறு டெக் நிறுவனங்களின் ஆராய்ச்சி மனித மூளையை பல்வேறு துறை சார்ந்து வெல்வதாகவே இருக்கும். மூளையிலுள்ள தகவல்களை கணினியில் இணைப்பது பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அவற்றில் புதுவரவு எலன் மஸ்கின், நியூராலிங்க். 1973 ஆம் ஆண்டு உலகில் முதன்முதலாக மனிதர்களின் மூளை -கணினி  இடைமுகம் உருவாக்கப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலையைச் சேர்ந்த ஜாக்யூஸ் விடல் என்பவர் இதனை உருவாக்கினார். மூளையின் மின் துடிப்புகளை எலக்ட்ரோபாலோகிராம் கருவி மூலம் அறிந்து கணினியில் பதிவு செய்தார். அதனை இயங்க வைத்தார். 1988 ஆம் ஆண்டு யூகோஸ்லேவியா ஆராய்ச்சியாளர்கள், இசிஜி சிக்னல்களை மூளையிடமிருந்து பெற்று, கணினியின் இணைப்பிலுள்ள ரோபோ ஒன்றை இயங்க வைத்தனர். கண்களை மூடவும் திறக்கவும் வைத்தனர். அவ்வளவேதான். 1991 ஆம் ஆண்டு நூறு எலக்ட்ரோடுகளைக் கொண்ட