இடுகைகள்

மாசுபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தரிசு நிலத்தை பசுமையாக்கிய சீன அரசு!

பசுமையின் திசை! சீனாவை பொருளாதார வளர்ச்சிக்கு பாராட்டுபவர்களை விட சூழல் மாசுபாட்டிற்கு கடுமையாக விமர்சிப்பவர்களே அதிகம். ஆனால், இப்போது கூறும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கு நற்செய்திதான். சீனாவில் மூன்று மாகாணங்களுக்கு சேர்ந்த தரிசு நிலத்தை போராடி பாடுபட்டு, மறுபடியும் பசுமையின் திசைக்கு திருப்பியிருக்கிறது சீன அரசு. பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியுள்ள நிலப்பரப்பின் அளவு 6,40,000 சதுர கி.மீ. ஆகும். இருபதாம் நூற்றாண்டில் வேளாண்மைக்காக பயன்படுத்திய அதீத உரப்பயன்பாடு, நிலத்தை வளம் குன்றச்செய்தது என சூழலியலாளர் ஜான் டி லியு படம்பிடித்த ஆவணப்படம், பல்வேறு தகவல்களை நமக்கு தருகிறது. விளைச்சல் தந்த நிலம் மெல்ல தரிசாகி, அதில் இருந்து தூசிப்புயல் மஞ்சள் ஆற்றில் வந்து விழத்தொடங்கியது. இந்த ஆறு தலைநகரான பெய்ஜிங் வழியாக செல்கிறது. நிலம் மாசடைந்து ஆற்றையும் மாசுபடுத்துவதை அறிந்த சீன அரசு, இதற்கென கிரெய்ன் டு க்ரீன்(Grain to Green) என்ற திட்டத்தை உருவாக்கியது. உலகவங்கியின் நிதியுதவியோடு திட்டம் தொடங்கப்பட்டது. மாசுபட்ட நிலத்தை மீண்டும் பழையபடி பசுமையான வளம் நிறைந்த இயல்புக்கு...

டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி காற்று மாசுபாடு என்றால் என்ன? விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன? ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும். பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன? மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்...

அறிவியல் கேள்வி பதில்கள் - புவியியல்

படம்
  அன்டார்டிகாவில் உள்ள ஐஸ்கட்டியின் தடிமன் என்ன? தோராயமாக அதை கூறவேண்டுமெனில் , 6,600 அடி நீளத்திற்கு ஐஸ்கட்டி இருக்கலாம் என அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஐஸ் மூன்று கி.மீ. அளவுக்கு தடிமனமாக உள்ளது. மேலும் உலகில் உள்ள தொண்ணூறு சதவீத ஐஸ்கட்டி, அன்டார்டிகாவில்தான் உள்ளது. அன்டார்டிகாவில் கால்பதித்த முதல் மனிதர் யார்? உலகின் பத்து சதவீத நிலப்பகுதி அன்டார்டிகா கண்டம் கூறலாம். ஐந்தாவது பெரிய கண்டம். யார் முதலில் கால்பதித்த மனிதர் என்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. 1773-1775 காலகட்டத்தில் கால்பதித்தவர் என பிரிட்டிஷை  சேர்ந்த கேப்டன் குக்கை கைகாட்டுகிறார்கள். இவருக்கு அடுத்து நாதேனியல் பால்மர், பால்மர் பெனிசுலா என்ற இடத்தைக் கண்டறிந்தார். அவருக்கு அப்போது அது ஒரு தனி கண்டம் என்பது தெரியாது. அந்த ஆண்டு 1820. அவருக்குப் பிறகு , அதே ஆண்டில், ஃபேபியன் காட்டிலெப் வோன் பெலிங்ஹாசன் என்பவர் அங்கு சென்றார். இவருக்கு அடுத்து 1823ஆம் ஆண்டு, ஜான் டேவிஸ் என்பவர், அன்டார்டிகாவிற்கு சென்று வெடல் சீ என்ற பகுதியை கண்டறிந்தார். 1840ஆம் ஆண்டு, அன்டார்டிகா சென்ற சார்லஸ் வில்கெஸ், அதை ஒ...

சீனாவின் சூழல் பிரச்னைகளை அரசியல் பின்னணியோடு விளக்கும் நூல்!

படம்
      சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் ரிச்சர்ட் ஸ்மித் ப்ளூடோ பிரஸ் சீனாவில் இயற்கை வளமான நிலம், நீர், காற்று பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். மொத்தம் 321 பக்கங்கள். எட்டு அத்தியாயங்களில் சீனாவின் முதலாளித்துவ கொள்கை, முன்னாள் அதிபர் டெங்கின் வளர்ச்சி உத்தரவு, ஆறுகள், ஏரி எப்படி மாசுபாடுக்குள்ளானது, பளபள கட்டிடங்களால் ஏற்படும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், நிலக்கரி ஏற்படுத்தும் காற்று மாசுபாடு, அவற்றை அதிபர் ஷி ச்சின்பிங் கூட தடுத்து நிறுத்த முடியாத அரசியல் நிலைமை என நிறைய விஷயங்களை நூல் ஆழமாக ஆராய்கிறது. சீனாவில் இடதுசாரி கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்து உண்கிறார்கள். சீன விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுகளை, சீன தலைவர்கள் தொடுவதே இல்லை. ஏன் அப்படி என்றால், அந்தளவு காய்கறிகளில் வேதிப்பொருட்கள், நச்சுகள் உள்ளன. இப்பொருட்களை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பணம் நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால், கலப்பட உணவுப்பொருட்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ன ஆவார்கள்? அதைப்பற்றி யாருக்குமே ...

அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்

படம்
      அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள் மாவோ காலத்தில் நான்கு நபர்கள் அரசியல், சமூக, பொருளாதார பலம் பெற்றவர்களாக வலம் வந்தனர். அவர்கள்தான் கட்சியில்  செல்வாக்கு பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு மாவோ மறைந்தபிறகு டெங் ஷியாவ்பிங் தலையெடுத்தார். அவர், மாவோ தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கிய தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை மாற்றியமைத்தார். இரும்பு அரிசிக் கிண்ணம் எனும் திட்டம் இந்த வகையில் ஒழித்துக்கட்டப்பட்டது. அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு சலுகை கட்டண வீடு, மருத்துவம் இலவசம், காப்பீடு உண்டு, இன்னும் நிறைய சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக அவர் தம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம். ஆனால், டெங் தனிநபர்கள் அனைவரும் செல்வந்தர்களாகுங்கள் என்ற கோஷத்துடன் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அதற்குப் பிறகுதான் எட்டு குடும்பங்கள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளே நுழைந்தனர். சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்களிடையே வினோத வாழ்க்கை முறை உண்டு. அதாவது, பொதுவாழ்க்கை, தனிவாழ்க்கை, ரகசியவாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு. சீன...

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - சீனாவின் பசுமைக் கொள்கைகள்

படம்
 

சீனாவின் பசுமை அரசியல் செயல்பாடுகள் செல்லும் திசை!

படம்
    சீனாவின் பசுமை அரசியல் செயல்பாடுகள் செல்லும் திசை! green politics in china joy y zhang,michal barr, pluto press சீனாவின் சோலார் பேனல்கள், பேட்டரி உலகின் மூலை முடுக்கெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சீனா, கொடுத்த சூழல் மாசுபாட்டின் விலை என்ன என்பதைப் பற்றி க்ரீன் பாலிட்டிக்ஸ் இன் சீனா நூல் பேசுகிறது. முக்கியமாக பொதுவாக எழுதப்படும் ஆங்கில நூல்கள் போல, இந்த நூல் சீனாவின் கம்யூனிச கருத்தியல் முரண்பாடுகளை விமர்சனத்திற்குள்ளாக்கவில்லை. அரசின் செயல்பாடுகள், அந்தளவு இயற்கையை பாதுகாக்கும் விதமாக இல்லை என்பதை மட்டுமே கூறுகிறது. நூலில், சீனாவைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளர்களின் நூல்கள், சூழலியல் விவாதங்களுக்கு தேவையான வகையில் பல்வேறு தகவல்களை எடுத்துப் பேச பயன்பட்டுள்ளன. இதில், அரசுக்கு ஆதரவான வகையில் எழுதப்பட்டுள்ள தேசியவாத நூல்களும் உள்ளடங்குகிறது. இணையத்திலுள்ள நாட்டின் மீது சூழலின் மீது அக்கறை கொண்டவர்கள், சீனமொழி நூல்களின் கட்டுரைகளை, கருத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிடுவதையும் நூலின் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தன்னார்வ ...

சீனாவின் பசுமை அரசியல்! - கார்பனை அடிப்படையாக கொண்ட காலனியாதிக்க முறை வளருகிறதா?

படம்
சீனா, ஆசிய அளவில் பெரிய பொருளாதார சக்தி. அதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் அந்நாட்டை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இழிவும் அவதூறும் செய்து வருகின்றன. அதில் முக்கியமானது. மாசுபாடு தொடர்பானது. இந்தியா, கருத்தியல் அல்லது பொருளாதார அளவில் கூட சீனாவின் அருகே நிற்க முடியாத நாடு. ஆனால் தொடர்ச்சியான சீனாவுடன் அதை ஒப்பீடு செய்து தாழ்வுணர்ச்சி கொண்ட ஆய்வாளர்கள் மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். அதனால் என்ன பயன் கிடைக்குமோ அவர்களது மனதிற்கே தெரியும். இந்தியா தலைநகரான டெல்லியில் கூட மாசுபாட்டை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதன் முதல்வருக்கான அதிகாரங்கள் மிக குறைவு. சீனாவில் மாசுபாடு பாருங்கள் இதோ என புகைப்படங்கள் எடுத்த மேற்குலகு கூட இப்போது சீனாவில் மாசுபாடு வெகுவாக கட்டுப்பட்டிருப்பதை ஏற்க முடியாவிட்டாலும் நெசந்தானுங்க அய்யா என ஒருவழியாக ஒப்புக்கொள்ள தலைப்பட்டிருக்கிறார்கள். பொறாமையும், வயிற்றெரிச்சலும் மட்டுமே ரு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லமுடியாது. சூழியல், காலநிலை மாற்றம் ன்பன மக்...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

over tourism!?

படம்
        சுற்றுலா வளர்வதை நிறைய நாடுகள் வரவேற்கின்றன. அதற்கென நிதியளித்து அதை ஊக்குவிக்கின்றன. ஆனால், இவ்விவகாரத்தில்  உள்நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதில்லை. அம்மக்களோ, வெளிநாட்டினரை வரவேற்காமல் இங்கு வராதீர்கள் என கூறி வருகிறார்கள். ஏதென்ஸ், ஸ்பெயின் நாட்டிலுள்ள உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மீது தண்ணீர் துப்பாக்கி மூலம் தெளித்து இங்கு வராதீர்கள் என்று  சுற்றுலாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். ஜப்பான் அரசு ப்யூஜி மலையைக் காக்க கம்பி வேலை அமைத்துள்ளது. சியோலில் சுற்றுலா தளங்களை பார்க்க குறிப்பிட்ட நேரம் தடை விதிக்கும் ஏற்பாட்டையும் கொரிய அரசு யோசித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு, சுற்றுலா வணிகம் பழையபடி வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 1.5 பில்லியன் மக்கள் சுற்றுலாவுக்கு வந்து சென்றுள்ளதாக யுன் டூரிசம் என்ற அமைப்பு தகவல் கூறியுள்ளது. சுற்றுலாக கூட்டிச்செல்லும் நிறுவனங்களும் பழையபடி விளம்பரங்களை இணையத்தில் செய்யத் தொடங்கியுள்ளன. கிரீஸ், போர்ச்சுக்கலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்து வருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு இடங்களிலும் கூட்டம் அல...

ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

படம்
  ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி! ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாடு எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதில், பொருளாதார இலக்கு ஒன்றை தீர்மானிக்க இருந்தனர். 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கு தாண்டி செல்லவேண்டும் என்பதே லட்சியம். அப்போதுதான் காலநிலை மாற்ற திட்டத்திற்கு வளரும் நாடுகளுக்கு உதவ முடியும். வரும் நவம்பர் மாதம் அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற மாநாடுக்கு முன்னதாக நிதி இலக்கை திட்டமிட இருந்தனர். ஆனால் நோக்கம் நினைத்த திசையில் செல்லவில்லை. காலநிலை மாற்ற அறிக்கையில் நாற்பத்தைந்தாவது பக்கம், இன்புட் பேப்பர் என்ற சொல் உள்ளது. இதில், நாடுகள் வழங்கும் நிதி, அது செலவழிக்கப்படும் விதம், அதை அமைப்பினர் கண்காணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை அழுத்தம் கொடுத்து கூற வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத் திட்டங்களில் நிதியாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் செலவிடப்படும் விதம், ஏற்பட்ட தாக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவது 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை...

விரைவில்...அமேசான் வலைத்தளத்தில் ---- பச்சை சிவப்பு பச்சை - தீரன் சகாயமுத்து

படம்
       

கார்பன் டை ஆக்சைடு, பயிர்களுக்கு நல்லது - நச்சு பிரசாரம் செய்யும் வலதுசாரி பெருநிறுவனங்களும், கைக்கூலி சிந்தனை அமைப்புகளும்

படம்
சமூக பகிரலுக்கு எடுத்துக்காட்டு, நூலகம். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல நல்ல நூலகங்கள் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிக்கழகமாக மாறிவிட்டது. ஆனால், முன்னர் ஏராளமான நல்ல நூல்களுக்கான உறைவிடமாக இருந்தது. தனிநபராக ஒருவர் புத்தக திருவிழா அல்லது நூல் கடைக்குச் சென்று எதையும் வாங்க வேண்டியதில்லை. நூலகத்தில் அரசு நூல்களை வாங்கி வைத்திருக்கும். அதை ஒருவர் இலவசமாக அணுகி படிக்கலாம். வீட்டில் எடுத்து வந்து படிக்க காசு கட்டவேண்டும். இதன்மூலம் நிறைய நூல்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. சூழல் சார்ந்து அனுகூலங்கள் அதிகம். காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டி கூழாக்கவேண்டியதில்லை. மாசுபாடும் குறையும். கார் பூல் எனும் ஒரு காரை நிறைய பயணிகள் பகிர்ந்துகொண்டு பயணிப்பதைக் கூட சமூக பகிரலில் சேர்க்கலாம். சூழல் சோசலிசம் தனிநபர் உடைமையை எதிர்க்கவில்லை. வீணாக்குதலை தவிர்க்க கோருகிறது. இயற்கை வளம் சேதப்படுத்துதலை தடுக்க முயல்கிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் நாட்டிற்கு தேவை. ஆனால், அதற்கான வழி இயற்கைச்சூழலை குறைந்தளவு பாதிப்பதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை ஈடுகட்ட முடியாது. இயற்கை வளம் அழிப்பு சார்ந்த விஷயங்களை ச...

மக்கள்தொகை பெருக்கமே, கார்பன் வெளியீட்டுக்கு முக்கியக் காரணம்!

படம்
  தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளில் உழைத்து வந்தார்கள். பின்னாளில், தொழிற்சாலைகள் நகரத்தில் உருவாகின. அதைச் சுற்றி பல்வேறு உபதொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிலாளிகள் எந்திரம் போல அதிக நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தன. தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தபோது வளிமண்டலத்தில் 48 சதவீத கார்பன் டை ஆக்சைடு கலந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வேளாண்மை பொருளாதாரத்தில் இருந்து பெரும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு மாறினர். இந்த தொழில்புரட்சி மெல்ல பிற நாடுகளுக்கும் பரவியது. இரும்பு, ஸ்டீல் ஆகியவற்றைத் தயாரிக்க அதிகளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல உதவி நீராவி எஞ்சினுக்கு முக்கிய ஆதாரமே நிலக்கரிதான். அன்று உலக நாடுகள் ஆற்றல் தேவைக்கு நம்பியிருந்த ஒரே பொருள், நிலக்கரிதான். தொழில்புரட்சி மேற்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் அவை நிலம், நீர், காற்றை   மாசுபடுத்தவும் செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு,...

கிராமத்தை அழித்த களிமண் எரிமலை - இந்தோனேஷியா

படம்
  களிமண் எரிமலை பெரிய மலை உச்சியில் எரிமலை பொங்கி வழிந்து புகையும், பாறைக்குழம்பும் வெளியே வருவதை டிவி, நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்தோனேஷியாவில் உள்ள சித்தோர்ஜோவாவில் களிமண் எரிமலையில் பாறைக்குழம்பு வெடித்து வெளியாகிறது. எண்ணெய் தோண்டி எடுக்க ஒரு தனியார் நிறுவனம் ட்ரில்லரை உள்ளே விட்டு துளையிட்டது. அப்போதுதான் எரிமலைக் குழம்பு தலைகாட்டியது. அப்போது 155 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதன் விளைவுதான் எரிமலைக் குழம்பு என நிறுவனம் சொன்னது. உலகம் முழுக்க ஆயிரம் களிமண் எரிமலை கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்டது, மனித செயல்பாடுகளால் உருவானது.   2006ஆம் ஆண்டு மேமாதம் 28ஆம் தேதி துளையிட்டபோதுதான் முதல்முதலில் லூசி எரிமலை உருவானது தெரியவந்தது. நீர், நீராவி, வாயு என முதலில் வெளியானது. பிறகு முழுக்க மண்ணும், உலோகமும் வெளியேறத் தொடங்கியது.     ஒருநாளுக்கு 1,80,000 க்யூபிக் மீட்டர் களிமண் வெளியேறத் தொடங்கியது. 2011ஆம்ஆண்டு வெளியாகும் களிமண் அளவு 10 ஆயிரம் க்யூபிக்காக குறைந்தது.   அங்கிருந்த மக்களை அரசு காலிசெய்யச் சொல்லியது. 30 ஆயிர...

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பய...

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்களின் யுக்தி!

படம்
  மழையிலிருந்து காத்துக்கொள்ளும் தாவரங்கள்! வெயில் போல மழையும் அனைத்து தாவரங்களுக்கும் தேவையானது. ஆனால், சிலவகை தாவரங்கள் மழை மூலமாக நோய் ஏற்படும் என்பதை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள சில முன்னேற்பாடுகளை செய்துகொள்கின்றன. அதில் முடிக்கற்றை போன்ற மெல்லிய இழைகளைக் கொண்ட தாவரங்கள் முன்னணியில் உள்ளன. இவை. இழைபோன்ற ட்ரைகோம்ஸ் எனும் அமைப்பைப் பயன்படுத்தி மழையை உணர்கின்றன. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுகின்றன என ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  தாவரங்களுக்கும் மனிதர்களுக்கு உள்ளது போன்ற நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு உள்ளது. மழை மூலமாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள் எளிதாக தாவரத்திற்குள் நுழைந்து அதை தாக்க முடியும் என்பதுதான்.  அரபிடோப்சிஸ் தலியானா (Arabidopsis thaliana) எனும் தாவரத்தை வைத்து, பேராசிரியர் யாசுவோமி டாடா, உதவி பேராசிரியர் மிகா நோமோடோ ஆகியோர் ஆய்வு செய்தனர். இவர்கள் தாவரத்தின் ஆர்என்ஏ வரிசையை சோதித்து, மழைக்கு எதிராக தூண்டப்படும் மரபணுக்களை அடையாளம் காண முயன்றனர்.  நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் ம...