டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி?

 




டெல்லி காற்று மாசுபாட்டை தீர்ப்பது எப்படி?


தந்தூரி சிக்கன் செய்யாமல் இருந்தால் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம். நாளடைவில் தடுக்கமுடியும் என டெல்லி முதல்வர் தீர்க்கதரிசனத்தை கனவில் கண்டு செயல்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே,அவர் மேக விதைப்பு எனும் திட்டத்தில் ஈடுபட்டு தோல்வி கண்ட ஆர்எஸ்எஸ் முரட்டு தற்குறி. அவரை இப்படி இருந்தால் அவரது அமைச்சரவை எப்படி இருக்கும்? பிரச்னையைத் தீர்ப்பதா, பிரச்னை என்று சொல்லும் மக்களைத் தீர்ப்பதாக என மதவாத கட்சி முடிவு செய்ய முடியாமல் தவிர்த்து வருகிறது. 


இப்போதைக்கு சங்கிகள் நீதிமன்றத்தில், காவல் துறையில் இருப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு, வல்லுறவு, கடத்தல் செய்தவர்களை பிணையில் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்து வருகிறார்கள். இந்த வகையில் மக்கள் சொத்துகளை, தங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாப்பதில் நிறைய நேரம் செலவிடு்ம தேவை உருவாகியுள்ளது. எனவே, நீங்கள் காற்று மாசைப் பற்றி கவலைப்படும் தேவையே இல்லை. அப்படி காற்று மாசு அதிகம் என உலக நாடுகள் கண்டுபிடிக்கிறார்களா? அதை எதிர்த்து நாம் இந்திய அளவுகோல் ஒன்றைக் கண்டுபிடித்து அப்படியெல்லாம் கிடையாது என்போம். யாரும் நம்முடைய சுயநலமான வளர்ச்சியை தடுத்துவிட முடியாது. வெளிநாடுகளில் வளரும் வங்கி சேமிப்புகளை குறைத்துவிட முடியாது.


இப்போதைக்கு கிறிஸ்மஸ் தாக்குதலை ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருப்பதால், காற்று மாசுபாடு பற்றி உடனே முடிவெடுக்க முடியாது. அதற்கு சற்று காலம் தேவைப்படும். அதற்காகத்தான் 2047ஆம் ஆண்டை தேர்ந்தெடுத்துள்ளார் முற்காலத்தில் டீ விற்ற ஆட்சித்தலைவர். கம்போடியாவில் உள்ள விஷ்ணு சிலைக்கு ஆபத்து உருவான செய்தியைக் கேட்டு ஆட்சித்தலைவர் மனம் நொறுங்கிப் போய்விட்டார். ஆனால், உள்நாட்டில் கிறித்தவர்கள், முஸ்லீம்களை கொல்வது,சித்திரவதை செய்வது அவருக்கு தெரியவில்லை. டெல்லி காற்று மாசுபாடு என்பது தேசிய பிரச்னை கிடையாது. குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த பிரச்னைதான். அதை தீர்க்க நினைத்தால் தீர்த்துவிட முடியும். இந்தியாவின் எதிரி நாடான சீனா, தனது மாசுபாட்டு பிரச்னையை பத்தாண்டுகளுக்கு முன்னரே தீர்த்துவிட்டது. இதற்கு அந்த அரசு உள்ளாட்சி அரசுகளோடு நல்ல புரிந்துணர்வு, ஒற்றுமை கொண்டிருந்ததுதான் காரணம்.இன்று மின் வாகனங்களில் அவர்கள் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள். எப்போதும் போல இந்தியாவில் இப்போதுதான் எலுமிச்சை நசுக்கத் தொடங்கியுள்ளனர்.2100 இல் ஏதாவது மாற்றம் உறுதியாக நடக்கும். ஆண்டு மாறுகிறதே ஒழிய வாழ்க்கை மாறவில்லை என்பவர்கள் காலண்டர்களை மாற்றாமல் இருக்கவேண்டும். அல்லது பேசுவதை நிறுத்திவிட்டு ஏதாவது செய்யத் தொடங்கலாம். இரண்டு வாய்ப்புகள் நம் முன் எப்போதுமே உள்ளன. 


உலக வங்கி உத்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தலா 300 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி மின் வாகனங்களை உருவாக்க முயலலாம். ஆனால். இந்த நிதியை வழங்கியதால் மாநிலத்தில் முக்கியமான விஷயங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும். பெரும்பாலும் இதெல்லாம் மக்களின் தலையில்தான் விழும். மாட்டுத்தொழுவத்தை கட்டி அதில் வேலை செய்பவர்களுக்கு எதற்கு இந்தளவு நிதி என்று புரியவில்லை. இந்து நாட்டில் கிறிஸ்தவ பண்டிகை எதற்கு என்று கேட்பவர்கள் உலக வங்கிப் பணத்தை எதற்கு வாங்கிக்கொண்டனர்? அப்போது வாங்கிய மாநில அரசுகளுக்கு மானம்,ஈனம் ஏதுமில்லையா? இந்தியர்கள் போட்டு என்று ஒன்று வைத்தால் அதில் நிச்சய வெற்றி பெறுவார்கள் என்று நாம் உறுதியாக கூறமுடியும் என்றால், அது பொறுக்கித் தின்பதில் மட்டும்தான். 


கோமாளிகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு அறிவியல் பரிசோதனைகளை எதிர்பார்க்க கூடாது... சர்க்கஸ் காண்பிப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு நம் வாழ்க்கையை நாம் வாழ வேண்டியதுதான். சோற்றுக்கே தடுமாறிக் கொண்டிருப்பவன், எங்கே போய் உரிமைகளைக் கேட்டு போராடுவது? அந்த நம்பிக்கை இப்போது இடதுசாரிகளுக்கு கூட இருக்குமா,இருக்கிறதா என்று தெரியவில்லை. டெல்லி காற்று மாசுபாடு என்பது எப்போதும் பனிக்காலத்தில் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அந்த நேரத்தில் அங்குள்ள மக்களை அப்பிரச்னை பாதிக்கிறது.அது தலைநகராக வேறு போய்விட்டது. வேறு வழியில்லை பேசித்தானே ஆகவேண்டும். 


பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியது.... ஜனநாயகம் என்பது பஞ்சங்களை தடுக்கும். ஆனால் ஊட்டச்சத்துக் குறைவை விட்டுவிடும் என்றார். ஆனால், டெல்லி காற்று மாசுபாடு நாடு முழுக்க ஏன் உலகம் முழுக்கவே தெளிவாக தெரிகிறது. 


நிர்விகார் சிங்கின் கருத்துகளை தழுவியது.


- ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!