செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?





Related image




செக்ஸ் அண்ட் ஜென்

பார்க்க ஏதோ திபெத்திய த த்துவத்தை படம் வழியாக சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தேன். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடக்குமா? ஆபாச படம்தான் அதனை 3டியில் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கேரள நண்பர் ஷேர் பண்ணக்கூடாது என கண்டிஷனோடு கொடுத்த படம். ஷேர் செய்யும் தமிழனின் குணத்தை மலையாளிகள் வெறுக்கிறார்களே என அங்கலாய்ப்போடு பார்த்தேன். அடுத்த நாள் ஷார்ட்ஸில் பொங்கலோ பொங்கல்.


படத்தின் கதை? அதுவா முக்கியம். முழுக்க நீலப்படம்தான். தழுவுகிறார்கள். நழுகிறார்கள். ஒரே காண்டம் விளம்பரத்தை இரண்டு மணிநேரம் பார்ப்பது போல இருந்தது. அதற்காக இயக்குநர்  சும்மா இருக்க முடியுமா? அவருக்குத்தான் இரண்டாம் பகுதி. முழுக்க எமோஷனல். நாயகனின் மனைவியை கூட்டிவந்து செக்சுவல் கருவிகளை வைத்து அவரது யோனியை பீட்ரூட்டாக துருவுகிறார்கள். அப்புறம் நாயகனின் அதிசக்திவாய்ந்த ஆணுறுப்பை கறிக்கதை கத்தி வைத்து சதக் செய்கிறார்கள். அப்புறம் நாயகனின் மனைவியை வெறித்தனமாக வில்லன் ரேப் செய்ய, அடுத்தது என்னாகும்? ஹீரோவுக்கு ரோஷம் வந்து... ம்ஹூம் எதுவும் நடக்காது. அவருடைய பீஸ் பிடுங்கப்பட்டதால், அரசு படைகள் வந்து வில்லனை கொன்று நாயகனை மீட்கின்றனர். இதற்குள் நாயகிக்கு யோனிப்பூட்டு பூட்டப்பட்டு, நாயகனுக்கு வாழ்நாள் முழுக்க புணர முடியாத தண்டனை அளிக்கப்படுகிறது.


செக்ஸ் படத்திலும் எமோஷனலைக் கொண்டு வந்து அதையும் ரசிகர்கள் மாஸ்டர்பேஷன் பண்ணிக்கொண்டே ரசிப்பார்கள் என நம்பிய இயக்குநருக்கு ஹேட்ஸ் ஆஃப். நம்பிக்கை அதானே எல்லாம்.

கதை தொடங்குவது இது காதல் வரும் பருவம் போலத்தான். நாயகனுக்கு கல்யாணம் பேசுகிறார்கள். கல்யாணம் ஆகிறது. காளை பாய்ந்து பசுமை கபளீகரம் செய்கிறது. ஆனால் என்ன ஐந்து எண்ணுவதற்குள்ளே பேட்டரி வீக்காகிறது. அதாவது, சேலம் டாக்டர் சிவராஜ் சொல்வது போல, கெட்டப்பழக்கத்தினால் விந்து முந்துகிறது. இதனால் அவரின் மனைவி, வேற இடம் பார்க்க விழைகிறார்.  நாயகன் இதற்காக சீன சித்தமருத்துவர் சிவராஜிடம் வைத்தியம் பார்த்து ஆண்குறியை நடராஜ் ஸ்கேல் தாண்டிய நீளத்துக்கு அறுவைசிகிச்சை மூலம் மாற்றிக்கொள்கிறார். அப்புறம் முழுக்க, களியாட்டம்தான்.

அவரது மனைவி மட்டும் என்ன சும்மாவா, கட்டுடலான ஆண்களை வளைத்து இன்பம் துய்த்து.. இந்த வார்த்தை சரியில்லை. சந்தோஷமாக இருக்கிறார்.

இறுதியில் உடல் காற்றடைத்த பை, அன்பு என்பது ஹீலியம் பலூன் என உலக  தத்துவம் புரிந்து ஆண்குறி அறுபட்ட நாயகனும், யோனிப்பூட்டு போடப்பட்ட நாயகியும் ஒன்றிணைவதோடு படம் சுபம்.

புத்த துறவி, செக்ஸ் செய்து குற்றவுணர்வில் தற்கொலை செய்யும் காட்சியைத்தான் என்னால் மறக்கவே முடியவில்லை. மதம் மீது இயக்குநருக்கு முன்ஜென்ம பகை என்னவோ. இறுதியில் மதகுரு தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.

கா.சி.வின்சென்ட்
நன்றி: மீகா