இடுகைகள்

நிதின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி

படம்
  எக்ஸ்ட்ரா ஆர்டினரி தெலுங்கு நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத் சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில்  நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்? தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.  இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரிதாக வாய்ப்பு க

வில்லனின் வீட்டிற்கு சென்று கடத்தி வரப்பட்ட காதலியை கல்யாணம் செய்யும் தைரிய நாயகன்!

படம்
                சீதாராமுலு கல்யாணம் லங்காலோ நிதின் , ஹன்சிகா , சுமன் , அலி , பிரம்மானந்தம் கல்லூரியில் படிக்கும் நிதின் , அவரை சிகரெட் பிடிக்காதே என்று சொல்லும் நாயகியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார் . காதல் செய்தவுடனே கல்யாணம் நடந்துவிட்டால் படத்தை குறும்படமாகவே முடிக்கவேண்டியது வரும் என காதலியின் அப்பா கிராமத்தில் பெரிய ரவுடி , அவருக்கு எதிரியாக ஒரு ரவுடிக்கூட்டம் இதற்கு இடையில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் என கதையைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் . படத்தில் உருப்படியான விஷயம் பிரம்மானந்தம் மட்டுமே . அவரின் காமெடி மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது . சுமன் பெரிய ரவுடி . சுருட்டி பிடித்தபடி அவர் நிதினை கேட்பது , உன்னால் என் மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா , அப்படி முடிந்தால் பெண்ணைக் கட்டித்தருகிறேன் என்கிறார் . உடனே நிதினும் முதுகில் மாட்டியுள்ள ரோஷன் பேக்கோடு வருங்கால மாமனாரின் ஆட்கள் நால்வரை உதைத்து மலைப்பாதையில் உருட்டிவிடுகிறார் . பிறகுதான் சுமன் மனம் மாறி சூப்பர் செலக்‌ஷன் என தைரியம்கொள்கிறார் . ஆனால் கர்மா ஈஸ் பூமராங் அல்லவா ? எதிரிகள் மாப்பி

இரக்கமில்லாத ரவுடியோடு தொழிலதிபர் மகன் ஆடும் போங்காட்டம்!

படம்
            ஆட்டாடிஸ்தா நிதின் , காஜல் அகர்வால் தொழிலதிபரின் மகனான நிதின் , தனது அப்பா பெயரை சொல்லாமல் அவர் பாட்டிற்கு கல்லூரிக்கு செல்வது , நண்பர்களோடு சுற்றுவது , வம்பு வழக்குகளை இழுத்து வருவது என குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படாமல் வாழ்கிறார் . சுருக்கமாக அவரது குடும்பத்தில் அவர் படிக்காதவன் . பிறர் படித்தவர்கள் . இந்த நிலையில் நிதின் , ரவுடிகளை அடித்து உதைக்கும்போது , அந்த இடத்தில் காஜலின் தோழிக்கு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகிறது . அந்த விழாவே சண்டையால் களேபரமாகி சங்கடமாகிறது . இதைப்பற்றி காஜல் காவல்துறையில் புகார் செய்கிறார் . அங்குதான் நிதின் மிகப்பெரிய பணக்காரர் வீட்டு பிள்ளை என தெரிய வருகிறது . இன்ஸ்பெக்டர் அவரை விட்டுவிடுகிறார் . ஆனால் நிதின் காஜலை விடுவதாக இல்லை . அவரை பின்தொடர்ந்து செல்கிறார் . நிதினின் அப்பா நாக பாபு , மனிதர்களின் வாழ்வை கெடுக்காத தொழில் செய்ய நினைப்பவர் . இவரின் தொழில் போட்டியாளர் ரகுவரன் . அவருக்கு நாக பாபுவை எப்படியேனும் தோற்கடித்தால் போதும் என்ற வெறி . இப்படி போட்டி போட்டதில் இருவரின் நிறுவனங்களும் கீழேத

அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

படம்
            ரெச்சிப்போ நிதின் , இலியானா கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை . அ ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும் . அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை . நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார் . திருடன்தான் . ஆனால் நல்ல திருடன் . பிளாட்பாரம் , கோவில் வாசல் என தூங்கி எழுபவர் , தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார் . ஆனால் , மாது , நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு , படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள் , வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார் . இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது . அப்போதுதான் காவல்துறை அதிகாரி , திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார் . நான்கு கி . மீ . ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார் . திருடனுக்கு அது போல ஐடியா ரொம்ப புதுசு . இருந்தா

நக்சலைட் காதலியைக் காப்பாற்றும் போலீஸ் காதலன்!

படம்
  ஹீரோ 2008 - நிதின், பாவனா ஹீரோ நிதின் , பாவனா எலன் மஸ்க் செவ்வாயை காலனியாக்க துடிக்கிறார் அல்லவா ? அங்கு திரையிடப்பட வேண்டிய படம் . படத்தில் அனைத்துமே மிகையாக நம்ப முடியாமல் உள்ளது . இ து வேறு உலகம் ப்ரோ . நிதினின் அப்பா போலீஸ் கமிஷனர் . அவருக்கு தனது மகனை தனது துறையில் வேலையில் சேர்த்துவிடவேண்டுமென நினைக்கிறார் . ஆனால் அதற்கு அவரது மனைவி சரளா எதிராக நிற்கிறார் . மகன் சினிமா ஹீரோ ஆகவேண்டும் என்பது அவரின் ஆசை . மகனுக்கும் அதுதான் லட்சியம் . இந்த நேரத்தில் நியாய உணர்வு கொண்டவர்கள் போலீஸ்காரர்களாக மாறலாம் என மாநில அரசு சட்டம் கொண்டு வருகிறது . நிதினை பயிற்சிக்கு அப்பா அனுப்புகிறார் . மகனும் வேண்டாவெறுப்பாக மூன்று மாதத்தை கடத்த அங்கு வருகிறார் . மூன்று மாத காலத்தில் போலீஸ் அகாடமியில் நடக்கும் காதல் , நட்பு , தேசப்பற்று இதர சமாச்சாரங்கள்தான் கதை . '' என்னை எதுக்காக காதலிக்கிற ? என்னோட கண்ணு , மூக்கு , வாய் , உதடு , கழுத்து பிடிக்குமா ?'’ என காதலி கிருஷ்ணவேணி கேட்க , சட்டென நாயகன் ராதாகிருஷ்ணன் அவளின் நீலநிற இடுப்