இடுகைகள்

அமலாக்கத்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை !

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அமலாக்கத்துறை இன்று சிபிஐ யை விட சக்தி வாய்ந்த துறையாக மாறி வருகிறது. அப்படி என்ன ஆற்றல் உள்ளது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். சட்டங்கள்தான் அதற்கு சக்தி.... 2002 இல் அமலான பணமோசடி சட்டம் பிஎம்எல்ஏ இதில் ஒருவரை கைது செய்தால் அவர் வெளியே வருவது கடினம். இதில் விசாரணை அதிகாரி தன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்ய முடியும். எஃப்எம்ஓஏ எனும் சட்டம், பொருளாதாரக்குற்றவாளியாக ஒருவரைக் கருதி குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தால், அவரின் சொத்துக்களை எப்பாடு பட்டாலும் பிற்பாடும் வாங்க முடியாது. 2005 முதல் 2019 வரை பிஎம்எல்ஏ சட்டத்தில் வழக்கு பதிவான 164 நபர்களில் வெறும் மூன்றே பேருக்கு மட்டுமே பெயில் கிடைத்துள்ளது. அதுவும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகத்தான். மற்றவர்களுக்கு சிறைதான் நிரந்தர வசிப்பிடம். பொதுவாகவே அமலாக்கத்துறையிடம் அசையும், அசையா சொத்துக்கள் சிக்கினால் திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் அதை போட்டுவிட்டதாக மனசார நம்பலாம். வழக்கு போட்டு அதை மீட்பதற்குள் உங்களின் சட்டை கிழிந்து தலைமுடி உதிர்ந்து....