இடுகைகள்

தேச துரோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் அணுஉலைகள்!

படம்
  மீண்டும் அணுஉலைகள்! இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர...

ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்!

படம்
      ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்! ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிற, தலித், ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கு பாடுபடுகிற போராளிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது பயங்கரவாத சட்டமான ஊபா. இச்சட்டத்தைப் பற்றி இடதுசாரி கட்சிகள் அளவுக்கு, அதிகம் பேசியவர்கள் யாரும் கிடையாது. அவர்களின் நாளிதழ், ஊடகங்கள் அனைத்திலும் ஊபா சட்டம் பற்றிய செய்திகள் இன்று வரைக்கும் வெளியாகி வருகின்றன. ஊபா என்பது சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். எப்போதும்போல, அரசியல் கட்சிகள் இதை தம் சொந்த சுயநலனுக்கு பயன்படுத்திக்கொண்டு மனித உரிமை போராளிகளை, திட்டங்களை கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைக்க பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் இந்த வழக்குகளில் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கித்தருவதற்கு அரசு புலனாய்வு அமைப்புகள் விரும்புவதில்லை. இதனால் வழக்குகளில் இருந்து வெளியே வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசுகள், ஒருவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தவே இதுபோன்ற அ...

பாஸ்போர்ட்டை அரசு மறுக்க முடியுமா? அதற்கு என்ன காரணங்கள் இருக்கும்?

படம்
  ஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பவர்களை கண்காணிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள், கல்வீச்சு ஆகியவற்றில் பங்கேற்றவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதை தடை செய்ய அரசு முயன்று வருகிறது என பலரும் விமர்சித்து வருகின்றன. ஒருவருக்கு பாஸ்போர்ட வழங்க முக்கியமான ஆவணம், அந்த நாட்டின் குடிமகனாக இருப்பதுதான். அடுத்துதான் பிற விஷயங்கள் முக்கியத்துவம் பெறும். நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவற்றை கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு அரசு பாஸ்போர்டுகளை வழங்குவதில்லை. மேலும், பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஒருவர்  எந்த குற்ற வழக்கிலும் இருக்க கூடாது. கோர்ட்டில் விசாரணைக்கு அழைப்பு வந்திருந்த சமயம் என்றாலும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்கலாம்.  இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967படி,  பாஸ்போர்ட்டை  அதனை வழங்கும் அதிகாரி  ஒருவர் சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியும். இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. சட்டப்பிரிவு 22 படி, குறிப்பிட்ட காலம் அதாவது, ஓராண்டு வரையில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பாஸ்போர்டுகளை  வழங்கலா...

இந்தியாவில் வாழும் தேசதுரோகிகளின் பட்டியலும், விவரங்களும்!

    தேசதுரோகம் செய்த பயங்கரவாதிகள்! 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேசதுரோக வழக்குகளின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது . இதில் தண்டனை வழங்கப்படும் வழக்குகளின் சதவீதம் 33.3 லிருந்து 3.3 சதவீதமாக குறைந்துவிட்டது . பிரிட்டிஷ் அரசு சுதந்திர போராட்டக்காரர்களை சிறையில் பிடித்துப் போட்டு சித்திரவதை செய்ய தேசதுரோக குற்றச்சாட்டு சட்டத்தை உருவாக்கியது . இன்று அதே மனநிலையில் இந்தியர்களை இந்தியர்களே ஆளும் நிலையிலும் சட்டம் வீறுநடைபோட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது . ஹரியானாவில் துணை சபாநாயகரின் கார் தாக்கப்பட்டது . இதில் நூறு விவசாயிகளின் மேல் தேசதுரோக குற்றச்சாட்டு பதியப்பட்டது . 124 ஏ எனும் இந்த காலனிய கால கொடுமை சட்டம் இந்தியாவில் தொடரத்தான் வேண்டுமா என உச்சநீதிமன்றம் ஜூலை 15 இல் கேள்வி எழுப்பியுள்ளது . தேச துரோகிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம் . ஆயிஷா சுல்தானா திரைப்பட இயக்குநர் டிவி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு மக்கள் மீது மத்திய அரசு உயிரியல் ஆயுதங்களால் தாக்குதல் நடத்துகிறது என்று மனம் திறந்து பேசினார் . ஜூன் 7...