இடுகைகள்

வன்மம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன் தந்தையை துரோகத்தால் வீழ்த்தியவர்களை தேடிச்சென்று பழிவாங்கும் வடக்கு வாள்!

படம்
  லெஜண்ட் ஆஃப் நார்த்தர்ன் பிளேடு காமிக்ஸ்  ரீடுமங்காபேட்.காம் வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஜின் மோ வோன், என்பவன் நார்த் ஹெவன்லி செக்ட் என்ற சிறிய அரசின் ஒரே வாரிசு. அவரது அப்பா பேராசையற்ற ஆட்சியாளர். காலப்போக்கி்ல் அவருக்கு செல்வாக்கு பெருகியதால், அவர் மீது தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இதனால் அவர் தனது மகனைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.  அவர் இப்படி இறந்துபோக அவரது நான்கு நண்பர்களே முக்கிய காரணம். சென்ட்ரல் அலையன்ஸ், நைன் ஸ்கைஸ் என இரு அமைப்புகளிடம் பரிசுகள், பணம் பெற்று, ஜின்னின் அப்பாவுக்கு துரோகம் செய்கிறார்கள். நாட்டின் நூலகத்தில் உள்ள தற்காப்புக்கலை நூல்களை ஜின் படித்து வீரனாகிவிட்டால் என்னாகும் என அத்தனை நூல்களையும் எடுத்துசெல்கிறார்கள்.  ஜின்னின் அப்பா இறந்தபிறகு, நாட்டின் அரசு கலைக்கப்படுகிறது. சென்ட்ரல் அலையன்ஸ் சார்பாக கண்காணிப்பு மட்டும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, ஜின்னை அங்கு உள்ள காவலர்கள் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் அவன் அதை பொருட்படுத்தாமல் வாழ நினைக்கிறான்.  ஜின்னின் அப்பா, அவனுக்கு மட்டுமே குறிப்பிட்ட முன்னோர்களின் எழுத்து

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய

அத்தையின் மந்திரி பதவியை அழித்து அவரின் மகளைக் கரம் பிடிக்கும் மருமகனின் கதை!

படம்
  பொப்பிலி ராஜா வெங்கடேஷ்,திவ்ய பாரதி  இயக்கம் பி கோபால்,  காட்டுக்குள் அம்மா, தாத்தாவுடன் சிறுவன் இருபது ஆண்டுகளாக வளர்ந்து பெரிதாகிறான். அவன்தான் பொப்பிலி ராஜா. அங்கு வரும் அமைச்சரின் பெண்ணுடன் நேசம் பிறக்கிறது. ஆனால் அமைச்சரோ, ராஜாவின் அம்மா, தாத்தாவை கட்டி வைத்து அடிக்கிறாள். காவல்துறை மூலம் சித்திரவதை செய்ய முயல்கிறாள். ஏன் அப்படி செய்கிறாள் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  தேர்தல் அரசியலுக்காக கொலை செய்யப்பட்டு, குணநலன்கள் களங்கப்படுத்தப்பட்டு காட்டுக்கு செல்ல நேருகிற சூழல் ராஜாவின் அம்மாவுக்கு நேருகிறது. ஆனால், அவர் பழிவாங்குவதை முக்கியமாக கருதவில்லை. தனது மகனை அவன் இயல்புப்படி வளர்க்கிறார். அவன் அரசு வனத்துறையோடுசேர்ந்து வேலை செய்கிறான். இந்த நேரத்தில் அங்கு வரும் அமைச்சரின் மகளை சந்திக்கிறான். இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொள்கிறது. பிறகு இருவரும் மெல்ல மனதால் நெருங்கி வருகிறார்கள். அவன் யார் என அடையாளம் தேடும்போது, அவளின் அப்பா, அவன் உன் மாமன் முறைதான். கட்டிக்கொள்ளலாம் என வெளிப்படையாக சொல்கிறார். அதாவது, மனைவியின் தம்பி மகன்.  பழிவாங்குதலை தொடங்க வேண்டாமா? மந்திர

வில்லியிடம் இருந்து காதலியை மீட்கும் நாயகனின் போராட்டம்!

படம்
  சகியா தெலுங்கு தருண், நவ்ஹீத் சைருஷி   கிராமத்தில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் மகளை கூட்டி வர ஸ்விட்சர்லாந்து செல்லும் நாயகன், காதலில் விழுகிறார். பெண்மணி கூறியபடி அவரது மகளை கூட்டி வந்தபிறகுதான் தெரிகிறது. அந்தபெண்மணி, அவரது அம்மா கிடையாது. எதிரி குடும்பத்து பெண். பழிவாங்குதலுக்காக அவரை ஏமாற்றி தனது மகளென கூறி வரவைத்திருக்கிறார் என்று. இப்போது நாயகன் எப்படி அவரிடமிருந்து அந்த அப்பாவி பெண்ணை மீட்டு திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தில் ஒரே ஒரு உருப்படியான விஷயம் ஆங்கில நடிகையான நவ்ஹீத் சைருஷிதான். அவரை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பாத்திரமாக சந்தனா என்று வருகிறார். அதில் பெரிய மாற்றமோ, ஆச்சரியமோ இல்லை. லூசுப்பெண் போல காட்டுகிறார்கள். துயரம். அதிலும் அவர் ஒரே மாதிரியான உடையில் படத்தில் பெரும்பாலான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். எதற்கு என அவருக்கும் தெரிவதில்லை. நமக்கும் தெரியவில்லை. ஹரி பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் தனது அண்ணன் பற்றி மாற்றிப் பேசி அவர் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள உதவுகிறார். ஆனால் அதற்குப் ப

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத

சுயநலமான காரியக்காரர்களால் நண்பருக்கு ஏற்பட்ட துயரம்!

படம்
  சில உறவுகளை நாம் தேடிச்செல்கிறோம். சில உறவுகள் நம்மைத் தேடி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை நம்மைத் தேடி வரும் உறவை முக்கியமாக பார்க்கிறேன். அதில் நாம் ஏற்பவையும் குறைவுதான். அனைத்தும் நமது குணநலன்களுக்கு ஏற்ப இருப்பதில்லை. கார்ட்டூன் கதிரை நான் முதல்முறையாக முரசு அலுவலகத்தில் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. இவரின் திறமையை நாம் நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கு இருந்த சூழலில் அவருக்கு அதிக நம்பிக்கையைத் தர முடியவில்லை. ஆனால் அவரின் வலைப்பூ சென்று சோதித்துப் பார்த்தேன். நான் அப்படி செய்தது ஆசிரியர் தூயவருக்கு பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை. இப்படியொரு திறமைசாலி ஏன் உளுத்துப்போன இதழுக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்போது கார்ட்டூன் கதிரவனுக்கு, சாதி சார்ந்து இயங்கும் பத்திரிகையில் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை தோன்றியிருக்கிறது. பின்னாளில் அது தவறான முயற்சி என உணர்ந்திருப்பார்.  கார்ட்டூன் கதிரவன் பதினைந்து நாட்களில் மயிலாப்பூரில் உள்ள தினசரியில் வேலைக்கு சேர்ந்ததைப் ப

வன்மமாக மாறும் வெறுப்பு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3.4.2022 மயிலாப்பூர் அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசி இருக்கிறேன். மகிழ்ச்சி. தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டன. இம்முறை துறை சார்ந்த வல்லுநர்களை தேடி எழுத வைக்க இருக்கிறேன். முயற்சி பலிதமாகுமா என்று தெரியவில்லை. கஷ்டம்தான். முயல்கிறேன். இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். வடபழனி. கேம்பஸ் என்ற ஹோட்டலில் புட்டும் கடலைக்கறியும் வாங்கிக் கொடுத்தார். டீப் வாட்டர். பவர் ஆஃப் டாக் என்ற இரு படங்களைப் பார்த்தேன். டீப் வாட்டர், மனைவி மீது கொலைவெறி பாசம் கொண்ட கணவரின் அதீத செயல்பாடுகளைப் பேசுகிறது. குறைந்த வசனங்கள். நிறைந்த உடல்மொழி என படம் எடுத்திருக்கிறார்கள்.  பவர் ஆஃப் டாக் படம், பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் எடுத்தது. ஒருவரின் மனதில் உருவாகும் வெறுப்பு எப்படி வன்மமாக மாறி குற்றச்செயல்களுக்கு தூண்டுகோலாகிறது என்பதே படம். இந்து ஆங்கில நாளிதழில் சூழல் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார்கள். இதை மொழிபெயர்த்து எழுத வேண்டும். எங்கள் நாளிதழ் இனி நூலகங்களில் கிடைக்கும் என்று ஆசிர

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

மகளின் காதலனின் மேல் தந்தைக்கு உருவாகும் அதீத வன்மம்! தனா 51

படம்
  தனா 51 சுமந்த், சலோனி அஸ்வானி, முகேஷ் கண்ணா இயக்குநர் சூரிய கிரண் இசை சக்ரி  தனா போலீஸ் ஆகவேண்டும் என துடிக்கும் இளைஞர். தினத்தந்தி ஸ்டைலில், வாலிபர். அந்த முயற்சியில் இருக்கும்போது கமிஷனர் அந்த ஊரிலுள்ள ரௌடிகளை பிடிக்க தனாவை ரௌடி போலீஸ் ஆக வற்புறுத்துகிறார். தனாவும் அதன் உள்ளர்த்தம் அறியாமல் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இறுதியில் அவரது வாழ்வை அழிக்கும் சூழ்ச்சி புரிந்துகொள்ளும்போது காலம் கடந்திருக்கிறது. காதலும் அவரது கையை விட்டு போய்விட்டது. இந்த சூழலில் அவர் என்ன செய்கிறார், கமிஷனரை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.  படத்தின் சுமந்தின் எனர்ஜிக்கு எதுவுமே ஈடு கொடுத்து நிற்பதில்லை. செய்யும் விஷயங்களை யோசிக்காமல் செய்வது போல தெரிந்தாலும் அதன் பின்னணி ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதுதான் தனாவின் பலம். இப்படி இருப்பவனை யாருக்குத்தான் பிடிக்காது. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்றாலும் அங்கு நடக்கும் ராக்கிங், சீர்கேடுகளை தட்டி கேட்டு உதைத்து திருத்துவது தனாவின் வாடிக்கை.  இப்படி இருக்கையில் அந்த கல்லூரியில் புதிதாக படிக்க வருகிறாள் லட்சுமி. தனா செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த்து அவளுக்கு அவனைப்

தீயவாள் பயிற்சிமுறையைக் கற்க போட்டிபோடும் பேராசைக்காரர்கள்! - தி ஸ்மைலிங் ப்ரவுட் வாண்டெரர்

படம்
  ஸ்மைலில் ப்ரவுட் வாண்டரெர் சீன தொடர் மாண்டரின் மொழித்தொடர் தமிழில்.. எம்எக்ஸ்பிளேயர் தொன்மை சீனாவில் உய், ஓஷன், பௌத்தம் என பல்வேறு மதங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசி முடிவெடுக்கும் திறமை உய் பள்ளிக்கு உண்டு. பிற பள்ளிகள் அனைத்தும் உய் பள்ளித் தலைவரின் கட்டளைகளை கேட்பார்கள். இதன் அனைத்து பள்ளி தலைவர்களும் கலந்துபேசி தங்களது பொது எதிரிகளை சமாளிப்பார்கள். இவர்களது பொது எதிரி, மந்திர சக்திகளை பயன்படுத்தும் அசுரர்கள். இவர்கள் டாபோ எனும் கலையைக் கற்றவர்கள்.  ஒரே பள்ளி ஒரே தலைமை என்ற கொள்கையை உய் பள்ளி தலைவர் எடுக்கிறார். இதற்காக கூலிப்படைகளை அமர்த்தி தனது கொள்கைகளுக்கு ஒத்துவராத பள்ளி தலைவர்களை கொல்கிறார். அவர்களின் பள்ளி கற்றுக்கொடுக்கும் தற்காப்புக்கலை நூல்களையும் திருடி வந்து பயிற்சி எடுக்கிறார். இதெல்லாம் தாண்டி அவருக்கு தீராத வேட்கையை ஏற்படுத்துவது தீயவாள் பயிற்சி எனும் வாள்சண்டை முறை.  இதனை ஒருவர் கற்றுவிட்டால் பிற வாள்பயிற்சி முறைகளை எளிதாக உடைக்க முடியும். பிரிந்துள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து உய் பள்ளி என்ற பெயரில் அதன

மகனின் இறப்பில் தொடங்கும் பழிக்குப்பழி வன்மம்!

படம்
              ரேத் ஆப் தி மேன் கய் ரிட்சி பிரெஞ்சில் வந்த படனத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள் . படத்தின் கதை எளிமையானதுதான் . அமெரிக்காவில் உள்ள கேங்ஸ்டர் ஒருவரின் மகனை முன்னாள் கொள்ளையர்களின் குழு கொன்றுவிடுகிறது . இதற்கு கேங்ஸ்டர் தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை . படத்தின் கதையை நகர்த்தி செல்வதில் ஒளிப்பதிவும் இசையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன . மென்மையாக தொடங்கும் கிடார் கம்பிகளின் மீட்டலே படத்தின் ரத்த வேட்கையான சண்டைக்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் உணர்ச்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கிறது . ஜேசன் ஸ்டாதம் இருக்கிறார் படத்தில் . அப்புறம் வேறென்ன வேண்டும் என இயக்குநர் நினைத்திருக்கிறார் . அதுதான் படத்திற்கு பலவீனமாகிறது . அனைத்து சண்டைக்காட்சிகளுமே மிகவும் ஜென்டில்மேன்தனமாக உள்ளது . துப்பாக்கியில் சுட்டு வரவு செலவு தீர்ப்பதாக இருப்பதால் , சில சமயங்களில் ஆக்சன் காட்சிகளில் ஈர்ப்பு குறைகிறது . நேருக்கு நேரான மோதல்களே இல்லாமல் இருப்பது ஜேசன் படங்களை பார்ப்பவர்களுகு இழப்பாக தோன்றும் . போர்ட

கந்தர்வனை பல ஜென்மங்களாக துரத்தி பலிகொள்ளத் துடிக்கும் யட்சிணி! - குபேரவனக்காவல் - காலச்சக்கரம் நரசிம்மா

படம்
                குபேர வனக்காவல் காலச்சக்கரம் நரசிம்மா அமுதன் என்ற சிறுவனை அவனது தாய்மாமா குடும்பத்தினர் கிண்டல்செய்வது முதல் நாவல் தொடங்குகிறது . தந்தையும் , தாயும் காணாமல் போன சூழலில் அவன் தன் தாய்மாமா குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான் . ஆனால் அவனது அத்தை , அவரது அம்மா என அனைவரும் அவனது நிறம் , அவனது காணாமல் போன அம்மாவின் நடத்தை ஆகியவற்றை மனதை வருத்தும்படி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . அதனை நம்பாடுவான் என்ற சிவ பக்தர் மட்டும் கோபத்தோடு பார்க்கிறார் . அமுதன் யார் , அவனது அப்பா , அம்மா யார் என்ற ரகசியங்களை நம்பாடுவான் என்ற கிழவர் அவனுக்கு சொல்லுகிறார் . அதிர்ச்சியளிக்கும் அந்த சம்பவங்களின் முன்னொட்டாக புருஷாமிருகம் என்ற கதை நாவல் தொடங்கும் முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது . அதை படித்து விட்டு நாவலுக்குள் வந்தால் எல்லாம் சுலபமாக புரியும் . அமானுஷ்யம் கலந்த திகில் கதைதான் . புருஷோத்தமன் என்ற குழந்தை ஶ்ரீவாத்சாங்கம் என்ற வைணவரின் வீட்டு பெண்ணுக்கு மகனாக பிறக்கிறது . அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவென்று சகடவாக்கி ஒருவர் நாடிச்சக்கரங்களை தொட்டு சொல்கிறார் . அது ப