இந்திய எல்லையில் சீனா செய்வது நண்பனின் முதுகில் குத்தும் துரோகச்செயல்! - ஏ.கே. அந்தோணி
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏ.கே. அந்தோணி முன்னாள் ராணுவத்துறை அமைச்சர் இந்திய வீரர்கள் பலியாவதை தடுத்திருக்க முடியுமா? சீனர்கள் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும்போது தாக்கியிருப்பது நம்பிக்கை துரோகம். நமது ராணுவத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினால் நம் வீரர்கள் பலியாவதை தடுக்கலாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 43 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சீனர்கள் இந்தியாவின் இடத்தை ஆக்கிரமித்தனர். 600க்கும் மேற்பட்ட முறை அத்துமீறல் நடந்தது என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளாரே? அது தவறான தகவல். 1962ஆம் ஆண்டுதான் சீனா முன்னேறி தாக்கி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அதற்குப் பிறகு எங்களுடைய ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. சீனாவை எப்படி சமாளிப்பது? இந்தியா 1962இல் இருந்த நிலையில் இல்லை. இன்று நம்மிடம் திறன் வாய்ந்த ஆயுதப்படைகள் உள்ளன. அவர்களை வைத்து தாக்கி பதிலடி கொடுக்கவேண்டும். காங்கிரஸ் அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, சுமார், டெப்சங் ஆகிய பகுதியில் முன்னேற முயன்றனர். ஆனால் அதனை முழுமையான செயலாக செய்யவில்லை. அப்போது சீனா தென்சீனக்கட