இடுகைகள்

புராணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி

படம்
  கார்த்திகேயா 2 இயக்கம் சந்து மாண்டெட்டி இசை கால பைரவா ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர்  நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.  கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். நம்பிக்கையால்

வரலாற்றை மாற்றும் ஆட்சியதிகாரம்!

படம்
  அதிகாரம் எந்த இடத்தில் பொய் சொல்லும்?  செல்வம், அரசியல்கட்சி அலுவலகம், காவல்துறை, ராணுவம்? இதில் எந்த பதிலைத் தேர்ந்தெடுத்தாலும் தவறுதான். ஏனெனில் அதிகாரம் என்பது அறிவை உருவாக்கும் இடத்தில் தான் பொய்களை ஏராளமாக கூறும். ஏன், அறிவை அதிகாரம் தேர்ந்தெடுக்கிறது? அதுதான் மக்களை உஷார் படுத்துகிறது. அவர்களை உயர்ந்தவர்களாக்குகிறது. எச்சரிக்கை செய்கிறது.  இங்கு அறிவு என்பது கருவிதான். அதை யார், எப்படி, என்ன பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். ரஷ்யா, தனது பள்ளி பாடப்புத்தகங்களில் உக்ரைன் மீது எதற்கு போர் தொடுக்கிறோம் என்பதற்கான காரணங்களை கூறியிருக்கிறது என கார்டியன் பத்திரிகை கூறியிருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர்களின் தேவைக்கேற்ப பாடங்களை மாற்றியமைத்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வே அறிக்கைகள், என நிறைய விஷயங்களை மாற்றியமைத்தனர். இப்படித்தான் இந்தியர்களின் மூளையை மாற்றியமைத்து தங்களுக்கு ஆட்சிக்கு சாதகமாக மாற்றினர். நாம் இன்றுவரையில் கூட அவர்கள் உருவாக்கிய பல்வேறு விஷயங்களிலிருந்து முழுமையாக மாறவில்லை.  சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி நீண்ட

புராணம் உண்மையல்ல என்று கூறுவது சிறுமைத்தனமானது! - எழுத்தாளர் அமிஷ் திரிபாதி

படம்
  எழுத்தாளர் அமிஷ் திரிபாதி அமிஷ் திரிபாதி எழுத்தாளர்  லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா - அமிஷ் திரிபாதி அமிஷ் தற்போது டிஸ்கவரி பிளஸ்சில் தி லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா என்ற டாக் - சீரீஸை தொகுத்து வழங்கி வருகிறார்.  வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்படப்போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது. அவர்கள்தான் உங்களது நூல்களை பதிப்பித்தவர்கள் அல்லவா? எனது மனம் உடைந்து போய்விட்டது. வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மட்டுமே பிறர் பிரசுரிக்க மறுத்த எனது நாவல்களை பிரசுரித்த நிறுவனம். இம்மார்டல் என்ற வரிசை நூல்களை அவர்கள் தான் பிரசுரத்திற்கு ஏற்றனர். வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இயக்குநர் கௌதம் பத்மநாபன் சிறந்த நபர் என இதற்கு எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே கூறுவார்கள். அவரது அப்பாதான் இந்த தொழிலை உருவாகி நடத்தினார். அவரது மகனான கௌதம் மனம் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.  டாக் சீரிசில் ராமனுக்கு சகோதரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுபற்றி மக்கள் பலருக்கும் தெரியாதே? ராமாயணம் என்ற புராணத்திற்கு பல வெர்ஷன்கள் உண்டு. இந்த சீரிசின் நோக்கம் நகரத்திலுள்ள இந்தியர்களுக்கு

எதிர்காலத்தில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை முன்னமே சுட்டிக்காட்டும் நூல்! - நூல் அறிமுகம் நவ.2021

படம்
  நூல் அறிமுகம் தி புக் ஆஃப் பாஸிங் ஷாடோஸ் சிவி பாலகிருஷ்ணன், டிஆர்எஸ் டிஎம் யேசுதாசன் நியோகி புக்ஸ் 350 மலபார் கிராமம் ஒன்றில் வசிக்கும் யோகண்ணன் என்பவர், மெல்ல வீழ்ச்சிக்கு உள்ளாவதை நூல் விவரிக்கிறது. தனக்கு தெரிந்த பழக்கமான அத்தனை விஷயங்களையும் ஒரு மனிதன் இழக்கும்போது ஏற்படும் வலியை வாசகர்கள் உணரலாம்.  எ பேர்ட் ஃபிரம் அஃபார் அன்சுல் சதுர்வேதி பான் மெக்மில்லன் 399 1942ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனி தலைவர் ஹிட்லரை சந்தித்து பிரிட்டிஷாரை விரட்ட ஆதரவு கேட்கிறார். தனி ராணுவத்தை அமைத்து போர் செய்ய திட்டமிடுகிறார் இதுதொடர்பான நிகழ்ச்சிகளை நூல் பேசுகிறது.  பாய்ஸன் ஃபார் பிரேக்ஃபாஸ்ட் லெமோனி ஸ்னிக்கெட்  ஒன்வேர்ல்ட் 499 எழுத்தாளரே பேசுவது போல அமைந்த நூல். அவரின் கதவருகே உங்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டுவிட்டது என குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னாலுள்ள மர்மங்களை கண்டுபிடித்தால்தான் அவர் உயிர் பிழைக்கமுடியும். என்ன செய்கிறார் என்பதுதான் கதை.  தி எக்ஸைல் ஆப் முகுந்தா ஆர்பிட் பக்ஷி ஆலெப் புக் கம்பெனி 395 மகாவிஷ்ணு தொடர் நூல்களின் தொடர்ச்சி இது. கிருஷணனின் மகன் முகுந்தன். அவர் இப்போத

அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!

படம்
  cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ்   ஜானியின் அசுரவேட்டை காமிக் பிடிஎப் டைம்ஸ் தமிழில் ஜானி வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை. 18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள்  நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை. காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது. புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள் காமிக்ஸ் நூல்

சாகாவரம் பெற்ற குரங்கு ராஜா! - அட்டகாசமான 3 பாகங்கள்!

படம்
மங்கி கிங் 1, 2 அண்ட் 3 சீனாவின் பதினாறாம் நூற்றாண்டுக் கதை. நம் ஜங்கிள் புக் போல. தேவதை ஒன்றின் தியாகத்தால் கிரிஸ்டல் உருவாகிறது. சொர்க்கத்தை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க அத்தேவதை தன் முழு உடலையும் கிரிஸ்டல் கற்களாக மாற்றுகிறு. அதில் ஒரு கல்லில் பிராண சக்தி இருக்கிறது. அது குரங்காக உருவம் பெற, அதுதான் மங்கி கிங். முதிர்ச்சியான அறிவு இல்லாத குரங்கு ராஜாவிற்கு மனித உடல், குரங்கின் முடி, அதன் உடல் திறன் என அனைத்தும் மாமி மெஸ் கலந்த சாதம் போலவே இருக்கிறது. குரங்கு ராஜா செய்யும் அமர்க்களம்தான் மூன்று படங்களுமே. முதல் பாகம். இதில் சொர்க்கத்தை சூறையாட வரும் வில்லனை குமட்டில் குத்தி வீழ்த்துகிறார் சொர்க்க ராஜா. வில்லன் சும்மா இல்லை. கடுமையாக உழைத்து ராஜாவின் தங்கையை உஷார் செய்தது அந்த சண்டையில்தான் சொர்க்க ராஜாவிற்கு தெரிகிறது. சரி பிழைச்சுப் போ என்று தீயசக்தியை கொல்லாமல் விடுகிறார். வில்லனுக்கு சொர்க்க ராஜாவின்இருக்கைதான் குறி. அதாவது அதில் அமர்ந்து ஆள வேண்டும். ஆனால் கிடைத்தது வௌவால் பறக்கும் குகை. எனவே காலத்திற்காக காத்திருக்கிறார். அப்போதுதான் குரங்கு ராஜா ப