இடுகைகள்

சங்கடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் நிலையத்தில் திடீர் ஜோதிடர்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிர் போன் செய்தபோது விசாரித்தார். நலமோடு இருப்பதாக பதில் கூறினேன். நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் மனைவி அகிலா, அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார்.   ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார். அங்கு, ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார். முழுநேர ஜோதிடரும், பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார் ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார். கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார். அகிலா தடாலடியாக பேசக்கூடியவர். கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார்.  நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வருகிறேன். கோவைய