இடுகைகள்

தஞ்சை ப்ரகாஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளம் இல்லாத மனத்துடன் கலையை வளர்க்க முயல்பவனின் கதை! - கடிதங்கள்

படம்
  கள்ளம் -எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்பு நண்பர் முருகுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஆர்ச்சீவ்.ஆர்க் என்ற தளத்தில் பள்ளத்தாக்கு என்ற சிறுகதையைப் படித்தேன். மைதிலி என்ற பெண்ணின் சுதந்திர வாழ்கையைப் பேசுகிற கதை. தஞ்சை ப்ரகாஷின் மொழியில் பெண்கள் தைரியமாகவும், தனித்துவமாகவும் எழுந்து நிற்கிறார்கள். முக்கியமான அம்சம், மைதிலியைப் பெண் பார்க்க வரும் ஆண்கள் பற்றியது.  வர்க்கீஸ் குரியன் எழுதிய  எனக்கும் ஒரு கனவு  நூலை இரண்டாம் முறையாக படித்தேன். குரியன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மீதான ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. திரிபுவன்தாஸ் படேலின் பேச்சைக் கேட்டு பணிபுரிய ஒப்புக்கொண்ட வர்க்கீஸின் முடிவு முக்கியமானது. விவசாயிகளை வலுவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அமுலுக்கு முக்கியமான பங்குண்டு.  1950 முதல் 1988ஆம் ஆண்டுவரை மேலாளர் பதவியில் ரூ.5 ஆயிரத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு வேலை செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்வாதிகளில் சுயநலமாக செயல்பட்ட ஜெகஜீவன்ராம் போன்றோரை நேரடியாகவே விமர்சித்து எழுதியிருக்கிற துணிச்சல் பாராட்டத்தக்கது. குரோடி, ஜெகஜீவன்ராம், நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோ

தந்திரமான ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது! - கடிதங்கள்

படம்
               பெண்களை மயக்கும் காமம்! - பரந்தாம ராஜூவின் வேட்கை   அன்புத்தோழர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? அஞ்சல் அட்டையில் எழுதுவது பற்றி நண்பர்களுக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன . அதனை யாரும் எளிதாக படித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள் . அது உண்மைதான் . ஆனால் இன்லேண்ட் கார்ட் வாங்கி எழுதும் அளவு்க்கு . என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை . அஞ்சல் அட்டை எளிமையாக இருக்கிறது என்பதுதான் அதனைப் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் . எங்களது பத்திரிக்கையில் புதிதாக கணித பாடத்திற்கென உதவி ஆசிரியர் இணைந்துள்ளார் . அவர் கொஞ்சம் தடுமாறுவதால் வானியல் , இயற்பியலை எனக்கென பொறுப்பாசிரியர் ஒதுக்கியுள்ளார் . ஆனால் எனக்கு துணுக்குகள் எழுத தெரியும் . ஆனால் நீண்ட கட்டுரைகளை எழுதுவது கடினமான காரியம் . குங்குமத்தில் அப்படி அறிவியல் கட்டுரைகளை இரண்டே இரண்டு பேருக்கு எழுதியுள்ளேன் . அங்கு அறிவியலை எழுதுவதற்கு ஆட்கள் இல்லாத சூழலில் எனது மேசைக்கு வந்த வாய்ப்பு அது . மற்றபடி இவற்றை எழுதுவதற்கான சரியான ஆள் நான்தானா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது . நான் எ