இடுகைகள்

தந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்  நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.  மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...

சிந்தனையாளர் மாக்கியவெல்லி படைப்புகள்!

படம்
  சிந்தனையாளர் மாக்கியவெல்லி நாரா நாச்சியப்பன் இந்த நூலில், மாக்கியவெல்லி எழுதிய அரச நீதிகள், அவரின் நூல் ஆராய்ச்சி, நாடகம் கடிதங்கள், மணிமொழிகள் ஆகியன ஒன்று இடம்பெற்றுள்ளது. ஓரளவுக்கு இந்த நூல் மாக்கியவெல்லியின் பல்வேறு வித எழுத்துகளை ஒன்றாக தொகுத்து நமக்கு அளிக்கிறது. ஏற்கெனவே நாம் பிரின்ஸ் என்ற நூலை ராஜதந்திரம் என்ற மொழிபெயர்ப்பு நூல் வழியாக வாசித்துவிட்டோம். எனவே, அவற்றை தவிர்த்துவிட்டாலும் கூட வாசிக்க சுவாரசியமான பகுதிகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடிதங்கள். அதில், அவர் தனக்கு பதவியில் நேரும் நெருக்கடிகளை, வறுமை நிலையை வெளிப்படையாக எழுதியுள்ளார். பொதுவாக கவிஞராக அறியப்பட விரும்பியவர். ஆனால், அவரை உலகம் சிந்தனையாளராகவே பார்த்தது. அரசியல் நூல்களையே முக்கியமானதாக பார்த்தது சற்று வினோதமானதுதான். தமிழ் மொழிபெயர்ப்பு நூல் முழுக்க இடர்ப்பாடு இல்லாமல் உள்ளது. ராஜதந்திரம் நூலை விட இந்த நூல் இன்னுமே தெளிவாக தனது அரச நீதிகளை முன்வைக்கிறது என கூறலாம். மாக்கியவெல்லியின் படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்ப்பதன் வழியாக, அவரது சிந்தனை, வாழ்க்கை நிலை, முடியாட்சியின் அவரது நிலை, குடும்ப...

பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!

படம்
  பற்களை துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம் அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா? இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி, கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன. கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே இல்லை. 1.பிரச்னையை அடையாளம் கண்டு கூறவேண்டும் 2.அதை மிகப்பெரியதாக்கி பதற்றம் ஏற்படுத்தவேண்டும் 3. தீர்வைக் கூறவேண்டும் பற்பசை விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள...

டெய்லி புஷ்பத்தின் காரியக்கார ராஜதந்திரம் - மீட்டருக்கும் மேலே ராஜதந்திரம்!

  இனவெறுப்பால் அழியும் மக்களின் வாழ்வு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று ராயப்பேட்டையில் மதியம் ஒரு மணிநேரம் மழை பெய்தது . சாப்பிடக் கிளம்பிச் சென்று மழையில் முழுமையாக நனைந்துவிட்டேன் . மாலையில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது . அசாமில் வங்கமொழி பேசும் முஸ்லீம்களை பாஜக அரசு அடித்து விரட்டி வீடுகளை இடித்து வருகிறது . இதைப் பற்றிய கட்டுரையை ஃபிரன்ட்லைனில் படித்தேன் . மோசமான நிகழ்ச்சி . 40 ஆண்டுகாலமாக அங்கு வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கை இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது . உள்ளூர் நிர்வாகம் வீட்டை இடிப்பது பற்றிய செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்திருக்கிறது . வீடுகளை அரசு இடிப்பதை தடுத்த மக்களை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு தடுத்துள்ளது . பலருக்கு மார்பிலும் , வயிற்றிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன . மோடியின் அயராத உழைப்பினால் பசி பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு ,101 ஆவது இடம் கிடைத்துள்ளது . பாக் . இன் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ செய்யவேண்டியதை இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக செய்வது ஆச்சரியமானதுதான் . பாஜகவைத் தேர்ந்தெடுத்த வட இந்திய முட்டாள்களை என்ன...

நீதிகளைப் பேசும் சீனச்சிறுகதைகள்! - குறிதவறிய அம்பு - வானதி

படம்
  குறி தவறிய அம்பு சீன சிறுகதைகள் தமிழ் மொழிபெயர்ப்பு வானதி சீன பழமொழிகளை ஒட்டிய ஏராளமான சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்துமே பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நன்னெறிகளைக் கொண்டவை. குழந்தைகள் வாசிக்க ஏற்றவை என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  சகோதரர்களுக்கு உள்ள அபூர்வ சக்தியால் ஒருவரையொருவர் காப்பாற்ற முயலும் கதை அருமையானது. இரும்பினால் வெட்டப்பட முடியாத, கடலில் மூழ்கினாலும் சாகாத, நெருப்பும் எரிக்க முடியாத அபூர்வ சக்திகளை கொண்ட சகோதர ர்களின் கதை அவர்களின் பாசத்தை காட்டுவதோடு, சமயோசிதமாக யோசித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தையும் பேசுகிறது.  நீதியை கையில் எடுத்து தண்டிக்கும் பெண்ணின் கதை. இதன்படி, கணவனைக் கொன்றவரை இரண்டாவது கணவனாக ஏற்றுக்கொண்டு குழந்தை பெற்றாலும் முதல் கணவனின் இறப்புக்கு பழிவாங்கும்  வேகம் ஆச்சரியப்படுத்தியது. நீதிநோக்கில் பார்த்தால் இது சரியா என்று தோன்றும். ஆனால் நீதிக்கு உணர்ச்சிகளை விட சாட்சிகளே முக்கியம் என்பதால் இரண்டாவது கணவன் செய்தது கொலை என நிரூபிக்கப்பட முடியாது. எனவே சட்டத்தை தன் கையில் எடுத்து இரண்டாவது கணவனைக் கொல்கிறாள் ம...

சிறையில் உளவியலாளர் பணி - ஹரே என்ன செய்தார்?

படம்
அசுரகுலம் உளவியலாளர் ராபர்ட் ஹரே ராபர்ட் ஹரே நம் ஆட்கள் போல படித்தால் டாக்டர் இல்லைனா எஞ்சினியர் என பிளான் போட்டு படிக்கவில்லை. அல்பெர்டாவின் கால்கேரியில் பிறந்து வளர்ந்தவர் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் எந்த இலக்கும் இல்லை. அவருக்கு கணிதம், அறிவியல், தொல்லியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு இருந்தது. ஆனால் அல்பெர்டா பல்கலையில் ஏதேனும் படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது உளவியலும் சேர்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 1950 ஆம் ஆண்டு உளவியல் படிப்பில் பட்டம் பெற்றார். அதை நினைவுகூர்ந்தவர், எனக்கு அப்போது நான் படித்த விஷயங்களை ஆய்வு அடிப்படையில் சோதித்தப் பார்க்க விரும்பினேன். ஏனெனில் கல்லூரியில் படித்தது முழுக்க தியரிதானே ஒழிய அதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் பார்க்கவேயில்லை என்றார். காலம் நீங்கள் விரும்புகிற விஷயங்களை வழங்காமல் போகுமா? அவருக்கும் வழங்கியது. அப்போது உளவியல் வகுப்பில் ஒரு பெண்ணைப் பார்த்தார். அவெரில் என்ற அந்தப் பெண்ணுடன் டேட்டிங் போய் பிறகு அந்த உறவை சுபமாக திருமணத்தில் முடித்தார்.  1959 ஆம் ஆண்டு திருமணமானவர்கள் படிப்பிலும் இல்லறத்திலும் அதீத ஆர்வம் காட்டி, செரில்...