இடுகைகள்

இலந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளம் தரும் மரங்கள் பாகம் - 1 - விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் மரங்களைப் பற்றிய கையேடு

 நூல் விமர்சனம் வளம் தரும் மரங்கள்  பாகம் 1 தோட்டக்கலை இயக்குநர் மணி , கமலா நடராஜன் என்சிபிஹெச் வெளியீடு விவசாயம் செய்யும் நண்பர் வளம் தரும் மரங்கள் ஐந்து பாகங்களை வாங்கி வைத்திருந்தார். என்சிஹெச் புக் இப்படியெல்லாம் நூல்களை வெளியிடுகிறதா என ஆச்சரியப்பட்டு அவர் வாசித்த முதல் பாகம் மட்டும் இரவல் வாங்கி வந்து படித்தேன். நூல் சிறப்பான கருப்பொருளைக் கொண்டுள்ளது. நூலில் முப்பது வகையான பல்வேறு தாவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.  நூலை தோட்டக்கலை இயக்குநராக பணிபுரிந்த மணி என்பவரும், அவருடைய மகளும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். நூலிலுள்ள தகவல்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளன. ஏராளமான அறிந்திராத தகவல்கள் உள்ளன என்பது உண்மை. அதை வாசிக்கும் யாருமே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் காலத்திற்கு ஏற்ப நூலில் மரங்கள் பற்றிய வண்ணப்புகைப்படம் ஏதும் இணைக்கப்படவில்லை. நூலின் விலை ரூ.230 என நினைவு. இந்த விலையில் கூட சிறிது தொகை கூடுதலாக சேர்ந்தாலும் நூலில் வண்ண புகைப்படங்களை இணைத்திருந்தால் மரங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமே? கருப்பு வெள்ளையில் இலையை, மரக்கன்றுகளை வரைவது எதற்கு? அதில் எந்த...