இடுகைகள்

தாவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணமாக உ

அறிவியல் முறைகளும், அதன் கண்காணிப்பும்! - அறிவியல் அறிவோம்

படம்
  அறிவியல் எப்படி வேலை செய்கிறது? அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து வைக்கும் தொகுப்பு என பலரும் நினைக்கலாம். அப்படியல்ல. புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அதனை சோதித்துப் பார்ப்பது அறிவியலின் முக்கியமான இயல்பு. அறிவியலாளர்கள் புதிய சிந்தனைகளை வைத்து கணிப்புகளை உருவாக்கி சோதிக்கின்றனர். அறிவியல் ரீதியாக சிந்தனைகளை சோதித்துப் பார்ப்பதை அறிவியல் முறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் சயின்டிஃபிக் மெத்தட். கவனித்தல் அல்லது கண்காணித்தல் அறிவியல் முறையில் அடிப்படையே, ஒன்றைக் கண்காணித்தல்தான். பூக்கள் தோட்டம் வைத்திருந்தால் இந்த முறையில் சூரிய வெளிச்சம் படுவதை எளிதாகப் பார்க்கலாம்.  இப்படி கண்காணித்தலை ஹைப்போதிசிஸ் என்று கூறுகிறார்கள். ஒரு பொருளை, தாவரத்தைக் கண்காணிப்பதை விளக்குவதுதான் ஹைப்போதிசிஸ். மண் சூரிய வெப்பத்தைப் பெற்று கதகதப்பாக இருப்பதை கண்டறிவது இந்த வகையில் சேரும்.  ஒரு தாவரம் வளருவதற்கு சூரிய வெளிச்சம் முக்கியமானது. அதை சூரிய வெளிச்சம் உறுதி செய்கிறது. தோட்டத்தில் மூடாக்கு போட்டு செடிகளை வளர்ப்பவர்கள் செயற்கையான முறையில் பல்புகளை எரிய விட்டு செடிகளை வளர்ப்பார்கள். குறிப்பிட்ட வெப்பநிலையி

காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வளரும் தாவரம்!

படம்
  காற்றில் தாவரம்! பெரிய மரத்தின் இடையே சிறு செடிகள் வளருவதைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தில் கணுக்களுக்கு இடையில் சிறு செடிகள் வளரும். இவை, வளர மண் தேவையில்லை. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழ்கின்றன. இத்தாவர இனங்கள், ஒட்டுண்ணி போல மரத்தில் இருந்து சத்துகளை உறிஞ்சுவதில்லை. இந்த தாவர இனங்களுக்கு  எபிபைடஸ் ( ) என்று பெயர். பொதுவாக கூறும்போது காற்றுத் தாவரங்கள் என்று தாவரவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  எபிபைடெஸ் இன தாவரங்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் அதிகம் வளர்கின்றன. இங்கு வெளிச்சம் அதிகம் கிடைக்காது. ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இன்று அடர்ந்த காடுகளிலிருந்து எபிபைடெஸ் இன தாவரங்களை மக்கள் பலரும் வீடுகளில் அலங்காரச் செடியாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  https://www.allaboutgardening.com/epiphytes/

கலாப்பகோஸ் தீவு ஆச்சரியகரமானது! - வில்லியம் ஹெச் துர்ஹாம்!

படம்
  நேர்காணல் வில்லியம் ஹெச் துர்ஹாம்  அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். கலாப்பகோஸ் தீவில் உள்ள உயிரினங்கள் பற்றிய ஆய்வு செய்து வருகிறார்.  கலாப்பகோஸ் தீவு மனித வாழ்க்கையோடு எந்த விதத்தில் இசைவாக உள்ளது? கலாப்பகோஸ் தீவு, மனித வாழ்க்கை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கும் தனித்துவமான இடம். மனிதர்களின் பலம், திறன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை பிற உயிரினங்களிடமும் காணலாம். நாம் பெரும் உயிரினங்களின் இனக்குழுவில் ஒரு அங்கம். தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவையும் நமக்கு உறவினர் போலத்தான். இதை உணர்ந்தாலே இயற்கை சூழலை கையாளும் முறைகள் மாற வாய்ப்புள்ளது.  காலநிலை மாற்றத்தால் கலாப்பகோஸ் தீவு பாதிக்கப்பட்டுள்ளதா? தீவில் உள்ள உடும்பு (Marine iguana), நீளமானது. காலநிலை மாற்றத்தால் அதன் நீளம் தற்போது குறைந்து வருகிறது. இம்மாற்றம் 1905 தொடங்கி 2000 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது. எல் நினோ பருவநிலை மாற்றம், வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பது கடலிலுள்ள பாசிகளை அழிக்கிறது. கடல் பாசிகளை உடும்புகளின் முக

கிராஃப்ட் முறையில் தாவரங்களை மேம்படுத்தலாம்!

படம்
  விவசாய வளர்ச்சிக்கு உதவும் நுட்பம்! குறிப்பிட்ட முறையில் தாவரங்களை வளர்த்தெடுத்தால் அதிக விளைச்சல் பெறலாம் என கண்டறியப்பட்டுள்ளது. விளைச்சலோடு , பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த வகையில் வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை சிறந்த முறையில் விளைவிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கிராஃப்ட்  எனும் முறையில், ஒரு தாவரத்தின் வேரை இன்னொன்றோடு இணைக்கிறார்கள். இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்துறையில் செய்து வருகிறார்கள். இதனை புதிய முறை என்று கூற முடியாது. இந்த வகையில் ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை கொடி ஆகியவை நட்டு வளர்க்கப்படுகின்றன.  கிராஃப்ட் முறையில் கோதுமை, ஓட்ஸ், வாழை, பேரீச்ச பனை ஆகிய பயிர்களை நட்டு வளர்ப்பது கடினம். இவற்றை மோனோகாட்ஸ் என்று கூறலாம். இவற்றுக்கு திசுக்கள் குறைவு என்பதால் இதனை கிராஃப்ட் முறையில் இணைத்து வளர்ப்பது சிறப்பான பயன்களை தராது. குறிப்பிட்ட தாவர இனங்களில் திசுக்கள் குறைவாக இருப்பதற்கு வஸ்குலர் காம்பியம் என்று பெயர்.   மோனோகாட்ஸ் தாவரங்களிலும் கிராஃப்ட்ஸ் முறையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுகுழு  முயன்றுள்ளது. ஆய்வாளர் ஜூலியன் ஹிப்பர்ட் தலை

நகரத்திலுள்ள பசுமை பரப்பு - வெர்டிகல் ஃபாரஸ்ட்

படம்
  கட்டடத்தில் காடு! இன்று காடுகளின் பரப்பு வெகுவாக குறைந்துவருகிறது. நகரங்களுக்குள் காடுகளை உருவாக்குவதற்கான இடம் குறைந்ததால், பசுமையை கட்டடங்களில் ஏற்றிவிட்டனர்.  பசுமை கட்டடங்கள் என்று கூறப்படும் கட்டடங்களில் பல்வேறு செடிகள், மரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை, வெர்டிகல் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.  இத்தாலியின் மிலனில், மரம், செடி கொடிகளை வளர்க்கும் கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு நகரில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒளிச்சேர்க்கை காரணமாகவே, மாசுபாட்டை அதிகரிக்கும் வாயுவை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.  நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம்  நகரில் அலுமினிய டவர் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மக்கள் புழங்கும் பூங்காக்களில் வைக்கப்பட்டது. மாசுபாடுள்ள காற்றை இக்கருவி, சுத்திகரிக்கிறது. காபி தயாரிக்கும் இயந்திரத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மாசுபாட்டு சுத்திகரிப்பு கருவி செயல்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு  கார்பன் டை ஆக்சைடு  முக்கியமானது. நீர், சூரிய ஒளி ஆகியவற்றை கூடுதலாக பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது.  super science encyclopedia

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

படம்
  காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு! உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.  சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர்.  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் க

தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!

படம்
  தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வாகன இரைச்சல்!  காடுகளில் விலங்குகள்  தனது எல்லையை உறுதி செய்ய, எதிரிகளை எச்சரிக்க, உணவு தேட என  பலவகையில் குரலைப் பயன்படுத்துகிறது. மனிதர்களுக்கும் தகவல் தொடர்பு கொள்ள குரல் முக்கியமானது. இன்று இதை மிஞ்சும்படியாக சுற்றுப்புறமெங்கும் வாகன இரைச்சல், அதிகரித்து வருகிறது. இவற்றிலிருந்து விலங்குகள் மற்றும் மனிதர்கள் நகர்ந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் தாவரங்கள் என்ன செய்யும்? இதைப்பற்றிய ஆராய்ச்சி ஈரான் நாட்டில் நடைபெற்றுள்ளது.  ஈரானின் தலைநகரான டெஹ்ரானில், சாஹித் பெகிஷ்டி பல்கலைக்கழகத்தில்  ஒலி மாசுபடுதல் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வை தாவரவியலாளர் அலி அக்பர் கோட்பி  ராவண்டி வழிநடத்தினார். இதில்தான், தாவரங்களும் ஒலி மாசுபடுதலால் பாதிக்கப்படுவதை கண்டுபிடித்திருக்கின்றனர்.  பெரும்பாலான தாவரங்கள் தம் வளர்ச்சிக்கு  மகரந்த சேர்க்கையை நம்பியே உள்ளன. இதற்கு விலங்குகள் மறைமுகமாக உதவுகின்றன. வாகன இரைச்சல் காரணமாக விலங்குகளின் வரத்து குறைந்தால், அது தாவரங்களையும் பாதிக்கிறது. திட, திரவ, வாயு என மூன்று ஊடகங்களின் வழியாக ஒலி, அலைகளாக பரவுகிறது. இதனை தா

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி

பரிணாம வளர்ச்சியில் தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு!

படம்
  தொன்மை தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு! பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒயிட்ஃபிளை என்ற பூச்சி  மரபணு ஒன்றைப் பெற்றது. இதனை  தொன்மையான தாவரம் ஒன்றிலிருந்து பெற்றதாக தாவரவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் இத்தாவரம் எதுவென இன்னும் கண்டறியப்படவில்லை. BtPMat1  என்ற மரபணுதான் ஒயிட் ஃபிளை பூச்சிக்கு மாறிய மரபணு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது தாவர நச்சு வகையைச் சேர்ந்தது. ஆனாலும் பூச்சியை பாதிப்பதில்லை.  BtPMat1 என்ற மரபணு, தாவரத்திலிருந்து பூச்சி இனத்திற்கு மாறியுள்ளதை சீனா மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றிய செய்தி செல் இதழில் வெளியாகியுள்ளது. ஹரிஸோனல் ஜீன் டிரான்ஸ்பர் (HGT)முறையில் மரபணு மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த முறையில் நடைபெறும் மரபணுமாற்றம் பாக்டீரியா இனங்களிலிருந்து தாவரம் மற்றும் விலங்குகளுக்கு நடப்பது இயல்பானதுதான்.   நச்சு கொண்ட தாவரங்கள், தங்களிடமுள்ள உணவைக் காக்க நச்சை சுரக்கிறது. இச்சமயத்தில் ஒயிட்ஃபிளை பூச்சியை நச்சு பாதிக்காமல் காப்பாற்றுவது  தாவர மரபணுதான்.  இப்பூச்சியிடமிருந்த தாவர மரபணுவை நீக்கி சோதித்தபோது, உணவிலுள்ள நச்சு காரணமாக

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா!

படம்
  இந்தியாவில் தற்போது 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 40 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் முதல் தேசியப்பூங்கா எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?  அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. இதன் பெயர், யெல்லோஸ்டோன் என தலைப்பில் குறிப்பிட்டதுதான். இதன் பரப்பு, 8,104 சதுர கி.மீ.  இந்த தேசியப் பூங்கா வியோமிங் தொடங்கி மான்டனா, இடாகோ ஆகிய மாகாணங்கள் வரை நீண்டுள்ளது. இங்கு 67 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. 322 இன பறவைகள். 16 வகை மீன்கள், 1,100 இயற்கை தாவரங்கள் உள்ளன. 400 வகையான வெப்பத்தை விரும்பும் நுண்ணுயிரி வகைகள் அறியப்பட்டுள்ளன.  இங்கு கால்டெரா எனும் எரிமலை உள்ளது. வெப்ப நீரூற்றுகளும் உண்டு. ஓல்ட் ஃபைத்ஃபுல் என்ற வெப்ப நீரூற்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. 60 அல்லது 90 நிமிடங்களுக்கு நீரை வேகமாக பீய்ச்சி அடித்து வருகிறது. 1870ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்தனர். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் முன்னர் எரிமலை இயக்கம் இருந்திருப்பதாக ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். புவித்தட்டுகளில் மோதல் இங்கு எரிமலை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இதை ஏன் இப்போது நாம் வாசிக்கிறோம்? மார்ச் 1, 1872ஆம்

ஆய்வகத்தில் தயாரிக்கலாம் பாலை....

படம்
  பால் மற்றும் முட்டை ஆகிய உணவுப்பொருட்களை ஆய்வகத்தில் தயாரித்து விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.   அமெரிக்காவிலுள்ள பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனத்தைத் தொடங்கிய உயிரி பொறியாளர் ரியான் பாண்டியா, சோயாவிலிருந்து பால் பொருட்களைத் தயாரித்து வருகிறார். இந்த பாலில் எதிர்பார்க்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இப்போது வரை க்ரீம் சீஸை தயாரிக்க முடியாவிட்டாலும் ஐஸ்க்ரீமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த வகையில் விலங்குகளுக்கு மாற்றாக தாவரங்களின் புரதங்களிலிருந்து உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புதிதல்ல. ரியானின் நிறுவனத்தைப் போலவே அங்கு வேறு பல நிறுவனங்களும் பால் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.  இதில் புதுமையான விஷயம்,நொதிக்க வைக்கும் முறையில்  நுண்ணுயிரிகளிடமிருந்து குறிப்பிட்ட வேதிப்பொருளை பெற்று அதிலிருந்து பால் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சிதான்.  இதனை புதிய முறை என்று கூறமுடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரொட்டி, யோகர்ட், சீஸ், மதுபானங்கள் நொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.  தொண்ணூறுகளில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(F

செடிகளை பெட்ரூமில் வைத்து வளர்க்கலாமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி தாவரங்களை படுக்கையறையில் வைத்து வளர்க்கலாமா? எந்த தவறும் இல்லை. சிலர் இரவில் கார்பன் டை ஆக்சைடை செடிகள் வெளியேற்றும். இதனால் நமக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்பார்கள். ஆனால் அது எல்லாம் ஆதாரமில்லாத உளறல்கள் என ஒதுக்கிவிடுங்கள். மின்விளக்கை அணைத்து விட்டால் ஒளிச்சேர்க்கைக்கான விஷயம் செடியில் நடைபெறாது.அப்புறம் என்ன கவலை? முக்கியமாக உங்கள் தூக்கம் கெடாது. நன்றி - பிபிசி