இடுகைகள்

மக்கள்தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள்தொகை பெருகிய உலக நாடுகளின் நகரங்கள்!

படம்
    அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள் டோக்கியோ ஜப்பான் 37.34 மில்லியன் நாட்டின் முக்கியமான பொருளாதார அரசியல் தலைநகரம். பிறப்பு சதவீதம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் என்ற அந்தஸ்தை 2030இல் இழக்க வாய்ப்புள்ளது. டெல்லி இந்தியா 31.18 மில்லியன் முகலாயர்களின் கட்டுமானங்களைக் கொண்ட பழைய நகரம்.   பெயர்களை மாற்றி வைத்தாலும் வரலாற்றை அழிக்க முடியாது அல்லவா?   தொன்மைக் காலத்தில் இருந்தே அரசின் அதிகாரத் தலைநகரம். ஷாங்காய் சீனா 27.80 மில்லியன் சீனாவின் வணிகம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் இந்த நகரில்தான் நடைபெறுகின்றன. விண் முட்டும் கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள் என கட்டுமானங்களுக்கு, வணிகத்திற்கு பெயர் பெற்ற நகரம். சாவோ பாலோ பிரேசில் 22.24 மில்லியன் புனிதர் பாலின் பெயர் வைக்கப்பட்ட நகரம். இங்கு 111 இனக்குழுக்கள் வசிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி மெக்சிகோ 21.92 மில்லியன் சியரா மாட்ரே மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள நகரம்.   கடலுக்கு மேலே 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது.   டாக்கா வங்கதேசம் 21.74 மில்லியன் கங்கை ஆற்றுப்பகுதியில் அமைந்த

தெரிஞ்சுக்கோ - நாடும் நாட்டு மக்களும்

படம்
  தனது நாட்டின் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை கலவரத்தை பற்றி, அதன்     ஆட்சித்தலைவர் புன்னகையுடன பேச முடிகிற காலத்தை எட்டியிருக்கிறோம். சமகாலத்தில் உற்பத்தி திறனில் அல்ல மக்கள்தொகையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நிறைய மக்கள் நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு வேலை தேடி, பொருளாதாரத்திற்காக நகர்கிறார்கள். பணக்காரர்கள், ஏழைகளுக்கான வேறுபாடு என்பது மேலும் அதிகரித்தபடியே இருக்கிறது.நாடு, நாட்டு மக்கள் பற்றிய   சில புள்ளிவிவரங்களைப் பற்றி பார்ப்போம்.   250 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் தோராய ஆயுள 29 ஆண்டுகள். 2019ஆம்ஆண்டு 72 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் 140 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் மட்டும் 55 மில்லியன் மக்கள் ஹாங்காங்கிற்கு வருகை தந்துள்ளனர். உலகளவில் வறுமைக்கோடு என்பது, தினசரி 1.90 டாலர்களுக்கு குறைவாக சம்பாதிக்கும்   மக்களை கணக்கிட்டு உருவாக்கப்பட்டது.   2019ஆம் ஆண்டு ஐரோப்பாவில் 141 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு, இடம்பெயர்ந்த 52 சதவீத அகதிகளி

இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

படம்
  காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும். கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.   கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது. அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்விளக்கு பத்தொன்

மக்கள்தொகை பெருக்கமே, கார்பன் வெளியீட்டுக்கு முக்கியக் காரணம்!

படம்
  தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளில் உழைத்து வந்தார்கள். பின்னாளில், தொழிற்சாலைகள் நகரத்தில் உருவாகின. அதைச் சுற்றி பல்வேறு உபதொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிலாளிகள் எந்திரம் போல அதிக நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தன. தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தபோது வளிமண்டலத்தில் 48 சதவீத கார்பன் டை ஆக்சைடு கலந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வேளாண்மை பொருளாதாரத்தில் இருந்து பெரும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு மாறினர். இந்த தொழில்புரட்சி மெல்ல பிற நாடுகளுக்கும் பரவியது. இரும்பு, ஸ்டீல் ஆகியவற்றைத் தயாரிக்க அதிகளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல உதவி நீராவி எஞ்சினுக்கு முக்கிய ஆதாரமே நிலக்கரிதான். அன்று உலக நாடுகள் ஆற்றல் தேவைக்கு நம்பியிருந்த ஒரே பொருள், நிலக்கரிதான். தொழில்புரட்சி மேற்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் அவை நிலம், நீர், காற்றை   மாசுபடுத்தவும் செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, நாட்டின்

மக்கள் தொகைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! - டெட் நார்தஸ்

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் டெட் நார்தஸ் ( Ted Nordhaus ) நிறுவனர் பிரேக்த்ரோ இன்ஸ்டிடியூட்  சூழலியலாளர்கள், காலநிலை மாற்ற அபாயத்தைத் தவிர்க்க மக்கள்தொகை கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகிறார்களே? மக்கள்தொகை அதிகரிப்பு என்பது மறைமுகமாக பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. அதனைக் குறைப்பது என்பது தவறானது. கிராமத்தில் வறுமையில் வாழ்ந்த மக்கள் இன்று நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த மாற்றம் காலப்போக்கில் இயல்பாக நடந்தது. ஏழை மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்கிறது. அவர்கள் வேலையைத் தேடிக்கொண்டு நலமாக வாழ்கிறார்கள். தேவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இது சமூக மேல்தட்டினருக்கு பிடிக்காமல், மக்கள்தொகை கட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழலியலாளர்களில் பெரும்பாலானோர் வசதியானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  சூழல் மாதிரிகள் பற்றிய உங்கள் கருத்து? சூழல் அறிவியலாளர்கள், சூழல் மாதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எவையும் துல்லியமாக வெப்பநிலை அதிகரிப்பதை நமக்கு காட்டவில்லை. அப்படி அவை காட்டினாலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பொருளாதார செ

நுகர்வை குறைத்தால் சூழல் பிழைக்கும்!

படம்
  நுகர்வைக் குறைத்தால் சூழல் பிழைக்கும்! உலகளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு கூடுவது, சூழலின் சமநிலையை நிலைகுலைய வைக்கும். இந்த விளைவுகளை சமாளிக்க நாம், நமது நுகர்வைக் கவனித்து குறைத்தாலே போதுமானது.  மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது, இன்று நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. வீடு, வணிகம், தொழிற்சாலை என மின்சாரப் பயன்பாடு தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன. ஐ.நாவின் மனித மேம்பாட்டு தொகுப்பு பட்டியில் (HDI) கூட தனிநபர் செலவழிக்கும் அளவு 2000 - 3000 கிலோவாட்(kWh) என்று கணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை வைத்து ஒருவர் செலவழிக்கும் தோராய மின்சார அளவு கணிக்கப்படுகிறது. இதன் வழியாக அவரது வாழ்க்கை எப்படி செழிப்பாக அல்லது ஏழ்மையாக உள்ளதா என கணிக்கிறார்கள்.   வளர்ந்த மேற்குநாடுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒருவரின் வருமானத்திற்கும், அவரின் மின்சார நுகர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவை எடுத்து

இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டால் மக்களுக்கு உணவு வழங்கலாம்! பமீலா

படம்
  பமீலா டி மெக் எல்வீ பேராசிரியர், ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம் மனிதவள சூழலியல் பற்றி பாடம் எடுத்து வருகிறீர்கள். அதன் அடிப்படை என்ன? பல்வேறு வித இயற்கை சூழல்கள் நமது வாழ்க்கையை பாதிக்கின்றன. மாற்றுகின்றன. நான் இந்தக் கோணத்தில் மனிதவள சூழலியலைப் பார்க்கிறேன். மனிதர்கள் இயற்கை சூழலுக்கு எதிராக அல்லது ஆதரவாக இருக்கவேண்டும். இந்த இரு நிலைகள்தான் நமக்கு எதிரே உள்ளன. இயற்கை சூழல்களின் மாற்றம் எப்படி மனிதர்களை ஆபத்துக்குள்ளாக்கிறது என்பது பற்றி நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.  பருவச்சூழல் மாற்றம் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுக்கிறதா? நிச்சயமாக. ஐபிசிசி கூட்டத்தில் பங்கெடுத்து இதுபற்றி நான் பேசியுள்ளேன். எந்த பயிர் எந்த இடத்தில் வளரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இயற்கைச் சூழல்தான். வெப்பம் அதிகமாகும்போது குறிப்பிட நிலத்தில் பயிர் வளரும் வாய்ப்பு குறைவு. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறன் கொண்ட பயிர் மட்டுமே அங்குவாழும். மேலும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து வந்தால் பயிர்கள் பெறும் ஊட்டச்சத்துகள் குறையும். இப்போதே கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தி மெல்ல குறைந்து

உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை கொள்கை 2021-2030 ஏற்படுத்தும் விளைவுகள்!

படம்
 உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் பழைய ஜெயில் ரோட்டில் சட்ட கமிஷன் அலுவலகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.மிட்டல் தலைமையிலான மூன்று பேர் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை உருவாக்கியுள்ளனர். இதனை இணையத்தில் மாநில அரசு வெளியிட்டுள்ளது.  மாநில அரசின் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டப்படி, அரசின் கொள்கையை மீறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காது. உள்ளூர் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாது. அரசு வேலைக்குக் கூட மூன்று குழந்தைகள் கொண்டவர்களை தடுக்கிறது புதிய சட்டம்.  மாற்றுத்திறனாளிகளை வைத்துள்ள பெற்றோர், ட்வின்ஸ்களுக்கு புதிய சட்டத்தில் சலுகைகள் உண்டு.  தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அரசின் கொள்கைகளை கடைப்பிடித்தால் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றில் கட்டண சலுகை உண்டு. பி.எப் விஷயத்திலும் கூட உபகாரம் உண்டு.  அரசு ஊழியர்கள் அரசின் குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதபோது பதவி உயர்வு, பிஎஃப் ஆகிய விஷயங்கள் கிடைக்காது. அரசின் வீடுகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.  குடும்ப அட்டையில் நான்கு பேருக்கு மட்டுமே இடமுண்டு.  மக்கள் தொகை கட்டுப்பாடு என யோகி கூறியபோதே உ.பியில் வா

முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது! - ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர்

படம்
              ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் அசாமிற்கான அடுத்த பத்தாண்டுகள் திட்டம் என்ன ? அசாமில் தீர்க்கவேண்டிய நிறைய பிரச்னைகள் உள்ளன . சமூக திட்டங்களில் அசாம் முக்கியமான இடத்தில் இல்லை . அடிப்படைக் கட்டமைப்பு , பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு , குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைப்பு ஆகியவற்றில் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது . வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் அசாம்தான் . எனவே இங்கு செய்யும் மாற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறையவே உதவும் . எல்லை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு உதவும் . மாநிலத்தை புள்ளிவிவரப்படி ஆராய்ந்தால் முஸ்லீம்களின் மக்கள்தொகை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது . இந்துக்களின் வளர்ச்சி 10 தான் அதிகரித்துள்ளது . இதற்கு முஸ்லீம்களிடையே உள்ள கல்வி அறிவின்மை , வறுமை ஆகியவையே காரணம் . எனவே , நாங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால்தான் கல்வி , சுகாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும் . மாநில அரசு முஸ்லீம்களின் மக்கள்தொகையை குறைக்க திட்டங்கள் தீட்டி வருகிறதா ? அரசு , ம

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்தான் நகரமயமாதல் வேகம்பிடிக்கும்! - அனு ராமசாமி பொறியாளர்

படம்
              பொறியாளர் அனு ராமசாமி நகரமயமாதல் மக்கள்தொகைக்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் . இதுபற்றிய தங்களது கருத்து ? பலரும் நகரங்கள் உருவாவதை எதிர்மறையாகவே கருதுகிறார்கள் . இப்படி நகரங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதை நான் வளர்ச்சியின் அடையாளமாகவே கருதுகிறேன் . உலகில் தொண்ணூறு சதவீத செல்வம் நகரங்களிலிருந்துதான் கிடைக்கிறது . இப்படி பெறப்படும் செல்வம் விநியோகிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று கூறலாம் . நகரங்களில் இன்னும் சில பிரச்னைகள் உள்ளன . குற்றச்செயல்கள் கூடுவது , காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம் . எனவே இப்போது நீங்கள் கேள்வியை நகரமயமாக்கல் தவறு என்று கேட்க கூடாது . அதனை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் செய்வது ? அங்கு வாழும் மக்கள் நலமுடன் வாழ என்ன செய்யலாம் என்பதாகவே இருக்கவேண்டும் .    சூழலுக்கு உகந்த நகரமயமாக்கல் என்று கூறுகிறீர்கள் . இதைப்பற்றி விளக்குங்களேன் . மனிதர்கள் கட்டும் கட்டிடங்களில் எந்தளவு ஆற்றல் செலவாகிறது , அதனைக் கட்ட எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறோம் , மக்களின் விருப்பம் , அரசின் கொள்கைகள்

குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை தளர்த்தும் சீன அரசு

படம்
                மூன்று குழந்தை - சீனாவின் புதிய கொள்கை ரெடி சீனாவில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றனர் . இதனால் மூன்றாவது குழந்தையை ஒருவர் பெற முயன்றால் , குழந்தையை அரசே கருக்கலைப்பு செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது . சீன அரசு , இந்த கொள்கையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது . நகரங்களில் குழந்தைகளுக்கான கல்விச்செலவு , வீட்டுக்கான வாடகை பெருமளவு அதிகரித்து வந்ததால் பெரும்பாலானோர் மிகவும் கஷ்டப்பட்டனர் . இதை தீர்க்கும் விதமாக அரசே இரண்டு குழந்தைகள் சட்டம் உருவாக்கப்பட்டது என சீன அரசு நாளிதழ்கள் கூறின . 1970 இல் ஒரே குழந்தை சட்டம் அமலாகி 2016 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் நடைமுறையில் இருந்தது . சிறுபான்மையினருக்கு மட்டும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது . பிறகு அரசு இந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டது . இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை அரசு வழங்கவேண்டியிருந்தது நிதிச்சுமையை ஏற்படுத்தியது . இக்கொள்கையின் விளைவால் வயதானவர்களின்

உலகில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது கார்பன் அளவல்ல, மக்களின் பெருக்கம்தான்! - உடைத்துப் பேசிய ஆஸ்திரேலிய சூழலியலாளர்

படம்
            மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இன்றைய அவசர தேவை ! கார்பன் வெளியீடு , வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளைவிட மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசிய தேவை என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . 2100 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் மக்கள்தொகை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . பல சூழலியலாளர்கள் இதுபற்றி பேசாமல் இருக்கும்போது , அதிரடியாக வெளிப்பட்டுள்ள இக்கருத்து தீர்க்கமாக யோசிக்கவேண்டியது ஆகும் . ‘’ இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்துள்ள விஷயங்கள் தீர்ந்துவருகின்றன . அதனால்தான் தினசரி நாம் எழும்போது பல்வேறு விலங்குகளின் அழிவு , காடுகள் சுருங்கி வருவது , மீன்கள் குறைவது ஆகிய செய்திகளை கேட்கிறோம்’’ என்று நாளிதழில் பேசியிருந்தார் பாப் ப்ரௌன் . பெருந்தொற்றுகளால் மக்கள் இறப்பது அதிகரித்தாலும் , உலகளவில் பிறப்பு சதவீதத்தோடு ஒப்பிட்டால் அது சிறிய அளவுதான் . 1900 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை நூறு கோடிக்கும் சற்றே அதிகம் . ஆனால் 2023 இல் இந்த எண்ணிக்கை 800 கோடியாக அதிகரிக்கும் . 2