இடுகைகள்

ஞானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோனி சிந்தனைகள் - மண்ணிலே சொர்க்கம் கிடைக்கும்!

படம்
        ரோனி சிந்தனைகள் குடியுரிமை அமைப்புகள், பழங்குடி மக்களுக்கான அமைப்புகளை தடை செய்துவிட்டு, நிதியுதவியை நிறுத்திவிடுவது சர்வாதிகாரத்திற்கு உதவும். பின்னே, இவர்கள் போராட தொடங்கினால் தீவிரவாத இயக்கங்களுக்கான தடையை நீக்கி செயல்படுவது எப்படியாம்? மக்களுக்கு சொர்க்கத்தை காட்டுவது ஆட்சியாளர்களுக்கு மகத்தான லட்சியக்கனவாக இருக்கக்கூடும். ஆனால், சொர்க்கத்தைப் பார்த்தால் உயிரை விட வேண்டியிருக்குமே என மக்கள் புரிந்துகொண்டால் சரிதான்... குற்றங்களை செய்தீர்களே என யாராவது புகார் சொல்கிறார்களா,  பதற வேண்டாம். அப்படி சொல்பவர்களையும் குற்றத்தில் பங்குகொள்ள வைத்துவிட்டால். குற்றச்சாட்டுகளே எழாது. எப்போதும் போல ஊழலை செவ்வனே கர்மயோகியாக தொடரலாம். உண்மைக்குத்தான் நிரூபணம் தேவை. பொய்க்கு கிடையாது. பொய்யால் ஏற்படும் குழப்பத்தைப் பயன்படுத்தினாலே வெற்றிதான் என்பதை பொய் கூறுபவர்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள். நல்லவனை கெட்டவனாக காட்டுவதற்கு இழிவுபடுத்துவதற்கு விசுவாச ஊடகங்கள் ஏராளம் உண்டு. அரசு, அவர்களுக்கு சொல்லாமல் விட்ட இன்னொரு வேலை, நல்லவனாக வேடமிட்டு மோசமானவர்கள் செய்யு...

கிழக்கத்திய ஞானத்தை உளவியலுக்கு கொண்டு சென்று ஆராய்ந்த உளவியலாளர் ஜோன் கபாட்ஸின்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் கிழகத்திய ஆன்மிக கருத்துகளை, பாடல்களை இலக்கியங்களை நாடத் தொடங்கின. இந்த வகையில் பௌத்த மதத்தின் தியானம், உடற்பயிற்சிகளை வெளிநாட்டினர் ஆராயத் தொடங்கினர். அப்போது பெரிதாக அதன் ஆய்வுப்பூர்வ நிரூபணத்தை கூற முடியவில்லை. ஆனால் பின்னாளில் அதன் பலன்களை அடையாளம் கண்டு கொண்டனர்.  அமெரிக்க உயிரியலாளர், உளவியலாளரான ஜோன் கபாட்ஸின் என்பவர், மைண்ட்ஃபுல்னஸ் என்ற மன அழுத்தம் குறைக்கும் முறையை உருவாக்கினார். இதில் தியானம் முக்கியமான பங்கு வகித்தது.  ஒருவர் கூறும் கருத்துகளை, செய்யும் செயல்களை முன்முடிவுகள் இன்றி அதை ஏற்பது, அந்த செயல்பாடுகளில் இருந்து தன்னை பிரித்து வைத்து இயங்குவது, மையமாக இன்றி தனித்த இருப்பது ஆகியவற்றை ஜோன் இதில் முக்கியமாக கருதினார். அதாவது, உடல் அப்படியே நிலையாக இருக்க மனம் என்ன சிந்திக்கிறது என்பதை கவனமாக பார்க்குமாறு சூழலை உருவாக்கினார். இந்த முறையில் சிந்தனைகளை எந்த கட்டுப்பாடும் செய்யாமல் அப்படியே உருவாக விடுவது, அதைப்பற்றிய எந்த முடிவும் கூறக்கூடாது.  நான் தோற்றுப்போனவன், வாழ்க்கை எனக்கு இல்லை என எந்த முடிவுக...