இடுகைகள்

பசுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலம்! - குஸ்தாவோ பெட்ரோ, கொலம்பியா அதிபர்

படம்
  குஸ்தாவோ பெட்ரோ, அதிபர், கொலம்பியா உலகில் இன்று நடைபெறும் பெரும்பாலான மோசமான அரசின் செயல்பாடுகளுக்கு பின்னால் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உள்ளது. இவர்களால்தான் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து பாசிச செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றனர். பசுமைக் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நிறைய அரசியல் கட்சிகள் இந்த கருத்தை வாக்கு வங்கி கருதி கூறமாட்டார்கள். ஆனால் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை பற்றிய பயமே பசுமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.  2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று அதிபரானவர் பெட்ரோ. இவர் முன்னாள் கொரில்லாவாக செயல்பட்டவர். பிரேசில் அரசு, அமேசான் காட்டில் கச்சா எண்ணெய் எடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் சூழல் காக்கும் பணியில் அமேசான் காடுகள் முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதன் முக்கியத்தை கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.  வசதியான சொகுசான உயர்தர வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ஆகியவை கார்பன் வெளியீட்டில் முன்னணி வகிக்கி

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

நகரத்திலுள்ள பசுமை பரப்பு - வெர்டிகல் ஃபாரஸ்ட்

படம்
  கட்டடத்தில் காடு! இன்று காடுகளின் பரப்பு வெகுவாக குறைந்துவருகிறது. நகரங்களுக்குள் காடுகளை உருவாக்குவதற்கான இடம் குறைந்ததால், பசுமையை கட்டடங்களில் ஏற்றிவிட்டனர்.  பசுமை கட்டடங்கள் என்று கூறப்படும் கட்டடங்களில் பல்வேறு செடிகள், மரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை, வெர்டிகல் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.  இத்தாலியின் மிலனில், மரம், செடி கொடிகளை வளர்க்கும் கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு நகரில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒளிச்சேர்க்கை காரணமாகவே, மாசுபாட்டை அதிகரிக்கும் வாயுவை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.  நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம்  நகரில் அலுமினிய டவர் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மக்கள் புழங்கும் பூங்காக்களில் வைக்கப்பட்டது. மாசுபாடுள்ள காற்றை இக்கருவி, சுத்திகரிக்கிறது. காபி தயாரிக்கும் இயந்திரத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மாசுபாட்டு சுத்திகரிப்பு கருவி செயல்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு  கார்பன் டை ஆக்சைடு  முக்கியமானது. நீர், சூரிய ஒளி ஆகியவற்றை கூடுதலாக பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது.  super science encyclopedia

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்பை உலகளவில் எப்படி வ

நாகப்பட்டினத்தை பசுமையாக்கும் ஆசிரியர்! - அருள்ஜோதியின் அரிய பணி

படம்
  நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி. இவர் கொலப்பாடு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு இயற்கை பேரிடராக ஏற்பட்ட கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்துபோயின. இதைப் பார்த்து கவலைப்பட்டவர், அதோடு நின்றுவிடாமல் இயற்கையான பரப்பை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  தனது ஆசிரியர் நாகராஜ், தந்தை சண்முக சுந்தரம் ஆகியோரின் ஊக்கத்தால் நேஷனல் க்ரீன் கார்ப்ஸ் எனும் அரசின் சூழல் திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி பசுமை செயல்களை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வீதிதோறும் பழமரம், வீதிதோறும்  நிழல்மரம் எனும் இரு திட்டங்களை அருள்ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த வகையில் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது இருக்கும் நிலையை உருவாக மெனக்கெட்டுவருகிறார். இப்படி 200 வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர்விட்டு பராமரித்து வருவது கடினமானது. இந்த சூழலையும் அருள்ஜோதி சமாளித்து வந்திருக்கிறார்.  மண்ணுக்கு சொந்த

அளவுகோலை மாற்றி காடுகளை அதிகரித்து காட்டும் இந்திய அரசு!

படம்
  இந்தியாவில் அதிகரிக்கும் பசுமைப் பரப்பு! - உண்மை என்ன? அண்மையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவிலுள்ள காடுகளின் பசுமை பரப்பு பற்றிய அறிக்கையை(2021) வெளியிட்டது. கடந்த  ஜனவரி மாதம் 13இல் வெளியான அறிக்கை  காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியது. 2019ஆம் ஆண்டை விட காடுகளின் பரப்பு அதிகரித்து 1,540 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.  இந்திய அரசுக்காக வனத்துறை ஆய்வு நிறுவனம் (FSI), காடுகளின் பரப்பு பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறது. இந்த அமைப்பின் தகவல்படி, இந்திய நிலப்பரப்பில் 21.67 சதவீதம் காடுகள் உள்ளன. மொத்தமுள்ள காடுகளின் பரப்பு 7,13,789 சதுர கி.மீ. அறிக்கைப்படி, முந்தைய ஆண்டுகளை விட மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என வன ஆய்வு அமைப்பு தகவல் கூறுகிறது. 1981ஆம் ஆண்டு வனத்துறை ஆய்வுநிறுவனம் உருவாக்கப்பட்டது.  1988ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பு பற்றிய அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.  சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான

பாண்டிச்சேரியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் கல்லூரி முதல்வர்!

படம்
  வங்கத்தைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அறிந்திருப்பீர்கள். அவரது தந்தைதான் டெபேந்திர நாத் தாகூர். இவர்தான் மரங்களடர்ந்த இடத்தைப் பார்த்து அங்கு கல்வி நிலையம் அமைக்க நினைத்தார். அதன் பெயர்தான், சாந்தி நிகேதன். பாண்டிச்சேரியில் இதேபோல முயற்சி நடைபெற்றுள்ளது. இதனை தாகூர் கல்லூரி முதல்வர் சக்திகாந்த தாஸ் செய்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள பயன்படாத நிலம் 15 ஏக்கரில் ஏராளமான மரங்களை நட்டு அதனை வளப்படுத்தியுள்ளார். இப்போது கல்லூரி வகுப்புகளை கூட அங்கு நடத்தி வருகிறார்கள்.  தொடக்கத்தில் அங்கு மரக்கன்றுகளை நட தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கிறார் சக்தி. இவர், ஒடிஷா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். இன்று இவரின் முயற்சியை பலரும் செயல்படுத்த, 4 ஆயிரம் மரங்கள் வளர்ந்து சிறு காடாகவே நிற்கிறது.  தொடக்கத்தில் காடுகளை வளர்க்கிறோம் என்று சக்தி இருந்துவிட, உள்ளே புகுந்த மாடுகள் தாவரங்களை மேய்ந்துவிட்டு சென்றன. எனவே இப்போது இதனை பாதுகாக்கவென தனி பாதுகாவலரை ஏற்பாடு செய்துவிட்டனர். புதுச்சேரியில் தற்போது காடுகளின் அளவு 10 சதவீதம்தான். அதனை 20 சதவீதம் ஆக்கவேண்டுமென சக்தி விரும்புகிறார். அதனை தன்

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

சூழல் போராளிகள் அறிமுகம்! பசுமை முதல் கழிவுகள் வரை

படம்
கல்பனா மணிவண்ணன் சூழலின் மீது நமக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம் இந்த நாயகர்கள்தான் நம் வாழ்க்கை மீது  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்காக இவர்கள் ஏமாற்றங்களையும் ஏளனங்களையும் எதிர்கொள்ளாதவர்களல்ல. அதிலிருந்து மீண்டு தன் லட்சியத்தை இமயமாக்கி அதையும் சாதித்து இருப்பவர்கள். இப்போது சூழல் போராளிகளில் சிலரைச் சந்திக்கலாம் வாங்க. கல்பனா மணிவண்ணன் 44 கல்பனா சென்னையைச் சேர்ந்தவர். பரபரப்பான சாலையில் வசிப்பவர். இவர் உயிரியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியையும் கூடத்தான். வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சாப்பிட்டு வெறுத்துப்போனவர், அவற்றைத் தவிர்க்க இன்று கல்பவிரிக்ஷா என்ற பண்ணையில் தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். நாம் பயன்படுத்தும் தரை துடைப்பான்கள், கழிப்பறை துடைப்பான்கள் ஆகியவற்றில் கடுமையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை நம் குடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் நம் உடல் நலம் கெடுகிறது என்று பேசுகிறார் கல்பனா. இவர் காய்கறிகளோடு ஆர்கானிக் முறையில் வீட்டின் தரை துடைப்பான்களையும் தயாரித்து வருகிறார். சமீரா சதீஜா 46 சமீர

பசுமை சக்தியில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
பசுமை சக்தி உலகம் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள், மின் வாகனங்கள் என போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பெட்ரோல் டீசல் என ஊற்றி ஓட்டினாலும் வருங்காலம் என்பது ஹைட்ரஜன், லித்தியன் அயன் பேட்டரி வண்டிகளாகவே இருக்கும் என்பது உறுதி. அத்துறை சார்ந்த நிறுவனங்களும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சந்தையை விட்டுவிடாது. தற்போது வரை உலகளவில் அதிகளவு கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2030க்குள் தனது கார்பன் வெளியீட்டு அளவை பெருமளவு குறைத்துக்கொள்வதாக இந்தியா கூறியுள்ளது. எவ்வளவு தெரியுமா 30-35 சதவீதம். தொண்ணூறுகளிலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெளியேறிய கார்பன் அளவு 147 சதவீதம் என்கிறது சூழல் அமைப்புகளின் அறிக்கை. உலகளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு 6.55 சதவீதம்தான். தனிநபர் வெளியேற்றும் கார்பன் அளவில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் மூலம் 250 பே

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா

கார்பன் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயக்கமா?

படம்
டாக்டர். எக்ஸ் குழந்தைகளின் பிறப்பு குறைந்து மக்கள் தொகை குறைந்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறிப்பிட்ட கட்டுப்பாட்டில் உள்ளது. காரணம், இங்கு அரசு இடையறாது செய்யும் விளம்பரங்கள், பிரசாரங்கள்தான். மூன்றாம் உலக நாடுகளில் இதுதொடர்பான பிரசாரங்கள் 1970களில் தொடங்கின. என்ன விளைவு ஏற்பட்டது? பெருமளவு குடும்பங்களில் இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் அரசு இதனைத் தொடர்ச்சியானதாக கடைபிடிக்கவில்லை. பிரின்ஸ் ஹாரி, மேகன் இரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வது என முடிவெடுத்துள்ளனர். பாப்புலேசன் மேட்டர்ஸ் எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த அமைப்பு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு பிரசாரம் செய்து வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் எம்மா ஆலிஃப், உயிரியல்ரீதியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார். இது சாத்தியமாகுமா என்பது வேறுகதை. ஆனால், அப்படி ஒரு எண்ணம் மக்களின் மனதில் வந்துவிட்டதற்கான காரணம்தான் முக்கியம். இந்தியர்கள் சராசரியாக இரண்டு டன்கள், அமெரிக்கர்கள் இருபது டன

சூழலைக் காப்பாற்றுவது பாஜக அரசுதான்!

படம்
மினி நேர்காணல் பிரகாஷ் ஜாவேட்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் பஞ்ச பூதங்களை காப்போம் என்று கூறினீர்கள். எப்படி? நீரைக் காக்க ஜெய்சக்தி எனும் துறையைத் தொடங்கியுள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 17 சதவீதமும், விலங்குகள் உயிரினங்கள் அளவில் 20 சதவீதமும் உள்ளது. மழையில் இந்தியா 4 சதவீதம் மட்டுமே பெறுகிறது. டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்னையைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். நிலங்களைப் பாதுகாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உள்ளோம். பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்றின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளாரே? அவர் செய்யாத விஷயத்திற்கு புகழைத் தேடுகிறார். நாங்கள் இதுபற்றி சரியான புள்ளிவிவரங்களுடன் அறிக்கையை வெளியிடுவோம். அப்போது அவர் கூறிய பொய் வெட்டவெளிச்சமாகும். வெப்பமயமாதல் இந்தியாவை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையா? ஆயிரம் ஆண்டுகளாக பூமி இதுபோல சூழலைச் சந்தித்து வருகிறது. நாம் உயிர்வாழவில்லையா?  இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப ச

ஏன்?எதற்கு?எப்படி? - ஐந்து கேள்விகள் - மிஸ்டர் ரோனி

படம்
ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி ஒளியை  விட வேகமாக பயணிக்கும் பொருள் உண்டா? ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. இதைவிட வேகமான பொருள் இதுவரை இல்லை. நாளை கண்டுபிடிக்கப்படலாம். காரணம், விண்வெளி தொடர்ந்து விரிவாகி வருகிறது. அப்படி விரிவாகும்போது, ஒளியின் வேகம் என்பது மிகச்சிறியதாகவே இருக்கும். அனைத்து பருவகாலங்களிலும் சில செடிகள் பசுமையாக இருப்பது எப்படி? அதற்கு காரணம், அவற்றின் ஒளிச்சேர்க்கை முறையும், பருவகாலங்களுக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மைதான் காரணம். பொதுவாக செடிகள், மரங்கள் பனிக்காலத்தில் தம் இலைகளை உதிர்த்து விடும். தேவையில்லாமல் ஆற்றல் வெளியேறும் என்றுதான் இந்த ஏற்பாடு. பின்னர் வசந்தகாலத்தில் புதிய இலைகள் முளைக்கும். ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் செடிகள், ஒளிச்சேர்க்கையை குறைந்த வெப்பநிலையைப் பயன்படுத்தியும் செய்யும் தன்மை கொண்டவை. கசப்பான உணவுகளை குழந்தைகள் புறக்கணிப்பது ஏன்? குழந்தைகள் கீரைகள், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முக்கியக் காரணம் மரபணுக்களிலேயே உள்ளது. முன்னோர்கள் அப்படித்தான் இருந்தனர். கண்டது, கடியது என சாப்பிட்டால் அ

டெக் புதுசு! - தோட்டப்பொருட்கள்

படம்
தோட்டப்பொருட்கள் தி ஸ்மார்ட் கார்டன் 3 வீட்டுத்தோட்டம் என்பது சூரியன் பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்கு முன்பே உலகறிந்த ஒன்று. எனவே அதற்கான டெக் சமாச்சாரங்களும் வராவிட்டால் எப்படி? அதற்கு உதவுவதுதான் ஸ்மார்ட் கார்டன். இதில் மண், லைட் என அனைத்துமே உள்ளது. இதன்மூலம் லாவண்டர் பூ முதல் கீரை வரை விதைத்து ஜமாய்க்கலாம். அடுத்த வீட்டுக்காரரை பொறாமைப்பட வைக்கலாம். விலை - 110 டாலர்கள் கோ சன் கிரில் சாதாரணமாக பீச்சுக்கு சுண்டல் வாங்கிக்கொண்டு சேட்ஜி செல்வரார்கள். அங்கே தின்றுமுடித்து பிக்னிக் சந்தோஷம் பெற்று வருவார்கள். அதேதான். இப்போது நம்முறை கோசன் கிரில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கருவி. இதில் காய்கறிகளை அவிக்கலாம், சுடலாம். பேக்கரி சமோசாக்களை இதில் வைத்து சுடச்சுட சாப்பிடலாம். சோறு வைத்து பருப்பு குழம்பு வைக்க முடியுமா என்று கேட்காதீர்கள். லைட்டான தீனி தின்பவர்களுக்கான கருவி இது. விலை - 699 டாலர்கள் ஃபைனல் ஸ்ட்ரா பிளாஸ்டிக் ஸ்ட்ராதானே சூழலுக்கு பிரச்னை. வாக்கிங் ஸ்டிக்கை மடிப்பதைப் போல இப்போது மெட்டல் ஸ்ட்ரா சந்தைக்கு வந்துள்ளது. வாங்கிப்போட்டு உறிஞ்சிக் குட

தமிழகத்தில் பரவும் அகிரா மியாவகி வகை காடுகள்!

படம்
நகரில் வளர்க்கலாம் காட்டை! நகரில் லூயிஸ் பிலிப் சட்டை போட்டு ஆபீஸ் செல்லும் அனைவரின் மனதிலும் காட்டைப் பற்றிய எண்ணம் ரகசியமாக இருக்கும். காரணம் நாம் அங்கிருந்து வந்தவர்கள்தானே? இதன்காரணமாகவே நாம் பழுப்பை விட பச்சையை விரும்புகிறோம். வயல்வெளியைப் பார்த்தால் ஒருகணம் திடுக்கிட்டு நின்றுவிடுகிறோம். ஆனால் நகரத்தில் எங்கே பசுமையைக் காண? அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் துவக்கம் குழுவினர். ஜப்பானைச்  சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகியின் டெக்னிக்தான் நகரங்களில் கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை உருவாக்குவது. இதனை கையில் எடுத்து குரோம்பேட்டையிலுள்ள ஜெயின் பள்ளியில் மினி காட்டை உருவாக்கிக் காட்டினர். சென்னையில் தண்ணீர் கிடையாது. இந்த லட்சணத்தில் எப்படி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது? என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதில் உள்ளது. நம்மோடு பேசிக்கொண்டே அவருக்கு வந்த 40 போன்கால்களையும் பேசிச் சமாளிக்கிறார். அடுத்த கோடைக்குள் மரங்களை உருவாக்கும் வேகத்தில் மக்கள் உள்ளனர். இம்முறையில் நாங்கள் அனைத்து வகை மரக்கன்றுகளையும் ஒன்றாகவே விதைக்கிறோம். இது அசப்பில் காடுபோன்ற டெக்னிக்தான். இடம்தான்

இ - ஸ்கூட்டர் புதுசு - ஜி30 சந்தையைக் கலக்குமா?

படம்
Max G30 e-scooter பெரிய வண்டிகளை ஓட்டுவதற்கு இவை சிறந்த மாற்று. ஸ்டைலாக கோட்சூட் போட்டு வண்டி எடுத்தாலும் சரி. சிம்பிளாக லீவிஸ் ஜீன்ஸ், போலோ டிஷர்ட் போட்டு இ ஸ்கூட்டர் ஓட்டலாம். பிரமாதமாக இருக்கும்.  நைன்பாட் எனும் சீனக்கம்பெனியின் தயாரிப்பு. இக்கம்பெனி பல்வேறு இ ஸ்கூட்டர்கள், ஸ்கேட்டர்ஸ் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. ஐரோப்பாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிமுகப்படுத்தியது நைன்பாட். செக்வே - நைன்பாட் என்ற பெயரில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியது.  மணிக்கு இருபத்தைந்து கி.மீ வேகத்தில் செல்லும் இ ஸ்கூட்டர் இது. இதன் பேட்டரி திறன் 551 wh. 10  அங்குல ட்யூப்லெஸ் டயர்களைக் கொண்டது.  இன்னும் விலை நிர்ணயிக்கப்படாத இ ஸ்கூட்டர் இது. விரைவில் விலை விவரங்கள் அறிவிக்கப்படலாம்.  நன்றி: நியூ அட்லஸ்

சென்னை மாநகராட்சியின் சைக்கிள் பூங்கா

படம்
ஜாலியான சைக்கிள் சவாரிக்கு ரெடியா? செய்தி: சென்னை கார்ப்பரேஷன், விரைவில் சைக்கிள்களை வாடகைக்கு விட 25 சைக்கிள் பூங்காக்களை  அமைக்கவிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சைக்கிள் பயணங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் சைக்கிள்களில் மக்கள் பயணிக்க தனிப்பாதைகள், வாடகை சைக்கிள் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை கார்ப்பரேஷன் 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது. இதன்மூலம்  250 சைக்கிள்களை முதல்கட்டமாக வாடகைக்கு அளிக்க உள்ளது. சைக்கிள் நேச நாடுகள் உலகில் டென்மார்க்கின் கோபன்ஹேகன், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்கள் சைக்கிள் பயணங்களுக்கு புகழ்பெற்றவை. சைக்கிள் பயணங்களுக்கேற்ப பாதைகள் இங்கு உண்டு. திட்டம் வெல்லுமா? தமிழக அரசின் நோக்கம், திட்ட அளவில் நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்கவிருக்கிறது. முதலில் சைக்கிளை ஓட்டுவதற்கா