இடுகைகள்

மக்கள் அதிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு துருப்பிடித்த இரும்புத்துண்டு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
              https://www.amazon.com/dp/B0F2TVMKVZ

ஒரு துருப்பிடித்த இரும்புத்துண்டு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
     

தொழில்நுட்பத்தை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் எப்படி பயன்படுத்துகின்றன?

படம்
          தொழில்நுட்பம் என்பது ஒருவரை குறிப்பிட்ட செயலை செய்யவைக்கிறது என்று கூற முடியாது. ஆனால் செய்யும் செயல்பாட்டை சற்று எளிமைபடுத்தி வேகமாக செய்யலாம். இணையம் வந்தபோது இந்தியாவின் வடக்குதேச தற்குறிகள், வெளிநாட்டினரின் நிர்வாண படங்களைக் கேட்டு சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்தனர். ஆக, தொழில்நுட்பம் என்பது உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதை நீங்கள்தான் தாழ்ந்துபோகாமல் காக்கவேண்டும். இப்போது விமானச்சேவை விலை குறைவாக வந்துவிட்டதால், வடக்குதேச தற்குறிகள் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு பொது இடங்களில் அநாகரிகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். உலகநாடுகளில், இந்தியா என்ற நாட்டிற்கு பெரிய நல்லபெயர் கிடையாது என்பதால், வடக்குதேச தற்குறிகளின் செயல்களால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், நேர்மையாக படித்து சென்று அமைதியாக வேலை செய்பவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் ஒன்றியத்தின் பெயரைக் கூறாமல் தெற்குதேசத்திலுள்ள மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் மனம் சரியான ...

தூக்குமேடையில் சுருக்குகயிறு - மின்னூல் வெளியீடு

படம்
              https://books2read.com/u/brE5jM     

மக்கள் அதிகாரத்துவ இயக்கங்களை அழித்த போல்ஷ்விக், பாசிஸ்ட் அமைப்புகள்!

படம்
    அரசியல் இயக்கமாக மக்கள் அதிகார அமைப்புகளை பார்ப்பது சுவாரசியமானது. அதன் செயல்பாடு, அமைப்பின் கட்டமைப்பு, உள்ளே நடக்கும் செயல்பாடுகள் என அனைத்துமே வேறுபட்டவை. வெளிப்படைத்தன்மை கொண்டவை. 1848-1914 காலகட்டத்தில் மக்கள் அதிகார அமைப்புகள் தீவிரமாக இயங்கின. அமைப்பிற்குள் மக்களை இழுக்க பிரசாரம் செய்தன. ஆனால், உலகப்போர் நிறைவடைந்தபிறகு, அமைப்புகள் பலரும் அறியாமல் காணாமல் மறையத் தொடங்கின. இதற்கு போல்ஷ்விக், பாசிஸ்ட் இயக்கங்களே முக்கியப் பங்காற்றின.   ஐரோப்பாவில் மக்கள் அதிகார இயக்கங்கள் அழிவதற்கு, அதைவிட வலிமையான கருத்தியல் அமைப்புகள் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதே முக்கியக் காரணம். 1945ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் சில மக்கள் அதிகார அமைப்புகள் மெதுவாக இயங்கத் தொடங்கின. தனது கருத்தியல் சார்ந்து சில நூல்களை வெளியிட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் காரணமாக மக்கள் அதிகார அமைப்புகள் செயல்பாடு தேக்கமடைந்தன. பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மக்கள் அதிகார அமைப்புகளின் செயல்பாடு முழுக்க நின்றுபோய், அதன் நிழல்தான் மிச்சமிருந்தது. ப...

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!

படம்
      மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு  கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள். புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி. இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு ச...

சமூகப் புரட்சியை தொடங்கி வெற்றி பெறுவது பற்றி விளக்கும் நூல்!

படம்
   ஏபிசி ஆப் அனார்சிசம் அலெக்சாண்டர் பெர்க்மன் ப.108 அனார்சிசம் என்பதை தலைவர் இன்மை, அல்லது அரசின்மை என்று கூறலாம். அந்த வகையில் அரசு இல்லாமல் நாடு எப்படி செயல்பட முடியும், அதன் சாத்தியங்கள் என்ன என்பதைப் பற்றி இந்நூல் ஆராய்கிறது. பொதுவாக, புரட்சி என்பதை முதலாளித்துவ ஊடகங்கள், குறிப்பாக ஆரியர்கள் நடத்துபவை, தவறாக சித்திரித்து வந்திருக்கின்றன. அப்படியான பல்வேறு பிரச்னைகளை முதல் இரண்டு அத்தியாயங்களில் நூல் எடுத்தாண்டு, பிறகு பேசும் மையப்பொருளுக்கு வேகமாக நகர்ந்துவிடுகிறது. நூலில், அரசின்மை கருத்துகளை விளக்கிய முக்கியமான தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றை வாசகர்கள்தாம் தேடிப் படித்துக்கொள்ளவேண்டும். எடுத்துக்கொண்ட மையப்பொருளை விவரிக்க அதிக நேரம் தேவை என்பதால் எழுத்தாளர் அலெக்சாண்டர், முக்கிய சிந்தனையாளர்கள் பற்றி அதிகம் விளக்கவில்லை. கட்டற்ற ஆராய்ச்சி, ஆய்வு வலைத்தளங்களில் அனார்சிசம் பற்றி தேடினாலே ஏராளமான கட்டுரைகள், நூல்களின் சில பகுதிகள் இலவசமாக வாசிக்க கிடைக்கின்றன. அவற்றைப் படித்து ஒருவர் இத்தத்துவத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். நூலில் தொழிலாளர்கள் மீது அத...

சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
              அடிப்படையில் ஒரு மனிதர் வேலை செய்து ஒன்றை உருவாக்குகிறார். அதை அவர் முழுக்க சமூகத்தின் உதவியின்றி உருவாக்கினார் என்று கூற முடியாது அல்லவா? அப்படி உருவாக்கியது சமூகத்தைச் சேர்ந்தது. அதை தனது சொத்து என கூறக்கூடாது. எனவே, அப்படி உருவாக்கிய பொருள் சமூகத்திற்கான சொத்து. நூல், வைரம், உடை ஆகியவற்றை உருவாக்கியவர்களுக்கு முக்கியமானதாக மதிப்புக்குரியதாக தோன்றலாம். மற்றவர்களுக்கு அதில் மதிப்பு இருக்காமல் இருக்கலாம். பசி நேரத்தில் ஒற்றை ரொட்டித்துண்டின் மதிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்? வைரமோ, தங்கத்தைவிட அதிகமாகத்தானே? பத்து ரொட்டிப் பாக்கெட்டுகளை இரண்டுபேர் வாங்க காத்திருக்கிறார்கள். எனில், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு பாக்கெட்டுகளுக்கு பத்துபேர் காத்திருந்தால் விலை அதிகரிக்கும். இதெல்லாம் விநியோகம், தேவையை அடிப்படையாக கொண்ட கணக்கு. ஒருவரின் உழைப்பை எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.அதற்கான அளவுகோலை பாரபட்சமில்லாமல் உருவாக்குவது எளிதான காரியமல்ல. லாபம், அதீத லாபம், குறைந்த கூலி என பாதையில் வேகமெடுத்தால் அதுதான் முதலாளித்துவப்பாதை. அங்கு, குறைந...

அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி - மக்கள் அதிகாரம்

படம்
            மக்கள் அதிகாரம் 1 தமிழ் திரைப்படங்களில் காவல்துறையினரின் கொடூரங்களை உண்மையைக் காக்க அப்படி செய்கிறார்கள் என காட்டியிருப்பார்கள். ஆய்வாளர், தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி யாரொருவரையும் கள்ளத்துப்பாக்கியால் சுடுவார். அல்லது அரசு வழங்கிய துப்பாக்கியால் சுட்டுவிட்டு எப்படி கணக்கு காட்டவேண்டுமென தனக்கு தெரியும், உரிமம் பெற்ற ரவுடி, எவுடாய்த்தே நாக்கேண்டி, சம்பேஸ்தா, கண்ட கோசேஸ்தா என பொறிபறக்க வசனம் பேசுவார். இதெல்லாம் திரையில் சரி. நிஜத்தில் பாதிக்கப்படும் மக்கள் எவரும் கல்லறையில் இருந்து மீண்டெழுந்து தனக்கு நடந்த அநீதியைக் கூறுவதில்லை. அதுதான் வன்முறையின் பலம். செத்தால் புதைத்துவிடலாம். உயிரோடு இருந்தாலும் கை, கால்களை உடைத்து விட்டால் அவன் சோறு தின்ன, மலம் கழிக்க உடல் ஒத்துழைக்கவே பல மாதங்கள் ஆகும். அதுவுமில்லாமல் வன்முறை ஏற்படுத்திய பயம் காரணமாக அரசுக்கு எதிராக அவன் சாட்சியமும் கூறமாட்டான். அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்களுக்காக, நேரடியாக அரசுக்காக என ஏதோ ஒருவகையில் மக்கள் மீது காவல்துறையின் தாக்குதல் அல்லது கொலை நடைபெறுகிறது. இப்படியாக வன்முற...