காந்தியை மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - சோபன் ஜோஷி
மாணவர்களிடத்தில் காந்தியை கொண்டு போய் சேர்ப்பது எப்படி? சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இன்றுவரை காந்தி இந்தியாவில் பேசுபொருளாகவே இருக்கிறார் . அவரை நேரடியாக வாழும் மனிதராக பார்க்க முடியாவிட்டாலும் தினசரி வாழ்க்கையி ல் எளிதாக சந்தித்து விடலாம் . அவரை ரூபாய் நோட்டுகளில் , சாலைகளின் பெயராக , குப்பைகளை அள்ளும் திட்டத்தில் காந்தி இருப்பார் . அவரின் வட்டமான கண்ணாடி இருக்கும் ., நேர்மை , உண்மை என்று பேசப்படும்போதும் காந்தியை தவிர்த்து வேறு யாரை நாம் கூறிவிடமுடியும் . இன்று வாட்ஸ் அப் மூலம்தான் பலரும் செய்திகளை அறிகிறார்கள் . அதை வைத்தே அனைத்தையும் தெரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் . இந்தியாவைக் கட்டமைத்தவர்களை நாக்கு வளைந்த வரை அவதூறு பேசுகிறார்கள் . குற்ற உணர்வேயின்றி , சுய லாபத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள் . மனிதர்கள் பலவகை . அப்படித்தான் இருப்பார்கள் . இன்று வலது சாரிகள் தங்களது ஆட்சியில் காந்தியை பல்வேறுவிதமாக விவாதப் பொருளாக்கி அவரை ஓரங்கட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் . அது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை . அவர் எழுதிய பேசிய எழுத்துகளே நூற