தனது அப்பா செய்த தவறை காதலால் சரிசெய்யும் ஆனந்த்!
ஆனந்த் ராஜா, கமாலினி முகர்ஜி இயக்கம் சேகர் கம்முலா தெலுங்கில் இயக்குநர் மணிரத்னம் போல படம் இயக்க முயற்சிக்கும் ஆள்தான் சேகர் கம்முலா. இவரது பட கதாபாத்திரங்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் . பிறகுதான் காதலிப்பார்கள். அதில் வரும் பிரச்னைகள் என கதை நகரும். ஆனால் இந்தப்படம் அந்த ரகத்தில் வராது படத்தில் ரூபாவுக்கு பெற்றோர்கள் சிறுவயதில் விபத்தில் இறந்துவிட, தனியாளாகவே வளர்கிறாள். அவளுக்கு துணையாக தோழி ஒருத்தி அருகில் இருக்கிறாள். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மார்வாடி பையன் ஒருவனை மணந்துகொள்ள நினைக்கிறாள். கல்யாணச்செலவு கூட அவள்தான் செய்கிறாள். ஆனால், பையன் அம்மா பிள்ளை. எனவே அம்மா சொன்னதைக் கேட்டு ரூபாவை மணம் செய்கிறான். ஏறத்தாழ ரூபாவை வீட்டுக்கு வேலைக்காரி போலத்த்தான் மாற்றிக்கொள்ள கல்யாண சடங்கு. இந்த நேரத்தில் உண்மை தெரிய வந்து ரூபா, கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லி நிறுத்துகிறாள். தன்மானம், சுதந்திரம் என்ற காரணத்திற்காகவே கல்யாணத்தை நிறுத்துகிறாள். பிறகு தான் வேலை செய்த பழைய ஆபீசுக்கே மீண்டும் பணிக்குச் செல்கிறாள். ராகுல் என்ற முன்னாள் காதலனை மட்டும் மீண்டும் தவிர்க்கி