இடுகைகள்

பாத யாத்திரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாத யாத்திரை - தலைவர்கள் மீண்டும் கையில் எடுக்கும் ஆயுதம்!

படம்
மோகன்தாஸ் காந்தி, 272 கி.மீ தூரம் தண்டி யாத்திரை சென்ற செய்தி இந்தியர்களை விடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபடுத்தியது. அவரையும் பிரபலப்படுத்தியது. போராட்டம் , அகிம்சை என்பதோடு தன் மீதான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் இடையறாது பதிலளித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் ஏராளமாக எழுத முடிந்தது. பத்திரிகைகளை நடத்தி வர முடிந்தது. அந்த உழைப்பு அசாதாரணமானது. இன்று சமூகத்தோடு இணைய அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் நம்புகின்றனர். இதேகாலத்தில் ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, நாடு முழுவதும் பயணித்து மக்களைச் சந்தித்து ஆட்சியையும் பிடித்திருக்கிறார். இதேநேரத்தில் வெளியான யாத்ரா என்ற அவரது தந்தை குறித்து படமும் குறிப்பிட்ட அளவு அவருக்கு உதவியிருக்கிறது. இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், அக்டோபர் 2 - 31  வரை பாஜக எம்பிகள், தங்கள் தொகுதிக்குள் 150 கி.மீ தூரம் பயணித்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்த ஆண்டு காந்திக்கு 150 ஆம் ஆண்டு பிறந்த தினம். கூடவே சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமும் வருகிறது. இரண்டுக்கும் மரியாதை செய்வ