இடுகைகள்

கேரளா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  வழக்குரைஞர் பத்மலட்சுமி ஜெயாமோகன், கேரளா கேரளத்தில் சாதித்த முதல் பால்புதுமையின வழக்குரைஞர் கேரளத்தில் தினக்கூலி தொழிலாளரான மோகன் என்பவரின் மகள், பத்மலட்சுமி ஜெயாமோகன். இவர், பால்புதுமையின இனக்குழுவைச் சேர்ந்தவர். தான் யார் என்பதை அடையாளம் கண்டு பெற்றோருக்கு முதலிலேயே கூறிவிட்டார். பிள்ளை கூறியதைக் கேட்டு அவர்களும் அடித்து உதைக்காமல் ஆதரவாக இருந்த   காரணத்தால் இப்போது வழக்குரைஞராகி இருக்கிறார். இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பத்மலட்சுமியின் பெற்றோர், தனது மகளின் இயல்பை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டதுதான். தங்களது மகளைப் பற்றி அறிய அதுதொடர்பாக இணையத்தில் நிறைய தேடி அறிந்துகொண்டனர். கூடுதலாக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றிருக்கின்றனர். பெற்றோர் இந்தளவு ஆதரவாக இருந்தாலும் சுற்றமும், நட்பும், கல்விக்கூடமும், சமூகமும் அந்தளவு கரிசனம் காட்டவில்லை. இயல்புக்கு மாறான வினோதம் என்று பல்வேறு விஷ வார்த்தைகளை வசைகளை சொல்லி திட்டினாலும் இணையத்தில் உள்ளவர்கள் எதிர்மறை தன்மையை உருவாக்கினாலும் பத்மலட்சுமி ‘’நான் அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளப்போவதில்லை ஒருவர் வேலையில்லாமல் இண

நெசவாளர்களை வாழ வைக்கும் உடை வடிவமைப்பாளர்களின் முயற்சி!

  கேரளத்தில் பிரபலமாகும் பாலின பாகுபாடற்ற ஆடைகள் கேரளா மாநிலத்தின் செண்டமங்கலம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், இப்போது பேசு பொருளாகியுள்ளது. இதற்கு காரணம் புதிய தலைமுறை வடிவமைப்பாளர்களின் ஆடைகள். இவர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து நெய்து விற்பதுதான். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் சங்கம் முதலில் நஷ்டத்தில் இயங்கியது. இதன் ஆடைகள் மக்கள் பெரிதாக அடையாளம் கண்டு வாங்கவில்லை.   ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இதற்கு காரணம், இளைய தலைமுறையினர்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர், ஶ்ரீஜித் ஜீவன், ஷாலினி ஜேம்ஸ், ஆகிய வடிவமைப்பாளர்கள் மேலும் பலருடன் சேர்ந்து கைவிடப்பட்டு வந்த கைத்தறி நெசவை மீட்டெடுக்க முயன்றனர். 2022ஆம் ஆண்டு இருபத்து நான்கு வயதான பருல் குப்தா, யுகா எனும் பிராண்டை உருவாக்கினார். இதற்கு உதவிய ஹெச் 47 சங்கம் இதனால் மக்களிடையே புகழ்பெற்றது. கடந்த செப்டம்பரில் இந்த பிராண்டில்   33 புதிய ரகங்கள் வெளியாயின. இப்போது பருல் குப்தா, கிரு கேஷிகி எனும் புதிய ஆடை ரகங்களை வெளியிட்டுள்ளார். இந்த ரகங்களின் சிறப்பு, இவற்றை ஆணும், பெண்ணும் என இரு பாலினத்தவருமே அணியலாம் என்பதுதான். அதாவத

குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

படம்
  திடக்கழிவு மேலாண்மை  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன? கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான். என்ன பயன்? மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி

அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் முரட்டு முட்டாள் பாண்டி சகோதரர்களின் கதை! கடசீல பிரியாணி

படம்
  கடசீல பிரியாணி கடசீல பிரியாணி படத்தின் மையக்கதை அப்பாவைக் கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்வதுதான். அதனை படத்தின் இயக்குநர் அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். அதுதான் படத்தை தனித்துவமாக காட்டுகிறது.  ஆனால் தலைப்பு எதற்கு கடசீல பிரியாணி என வைத்திருக்கிறார்கள் என சிலர் கேட்கலாம். அதற்கான பதிலையும் இயக்குநர் இறுதியில் பதிலாக வைத்திருக்கிறார்.  பாண்டி குடும்பத்தார் மொத்தம் இருவகை. மனைவி, மாமனார், அத்தை என குடும்பமே வன்முறை கொண்டவர்களாக இருக்க கணவன், தனது கடைசிப்பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். மூன்றாவது பிள்ளையோடு தனியாக வாழ்கிறார். இவரது மூத்த இருபிள்ளைகளும் வன்முறையான ஆட்கள் என்பதால், அவர்களை அப்பா சந்திக்கவிரும்புவதில்லை. அவர்கள் தாயோடு வெட்டும் குத்தும் கறிச்சோறுமாக வாழ்கிறார்கள்.  இந்த நேரத்தில் அப்பா, தொழில் சார்ந்து சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அதனால் மூத்த இருபிள்ளைகளுக்கும் அம்மா, கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று சொல்லி பாடம் போட்டு அனுப்புகிறார். எனவே, அவர்கள் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்காக கடைசி பிள்ளையான தம்பியையும்  கூட்டிக்கொண்டு வருகிறார்கள். தம்பிக்க

செங்கொடியை பறக்க விட்ட பினராயி விஜயன்! - எதிர்ப்புகளை முறியடித்து மக்கள் நலன் காத்த தலைவர்

படம்
      பினராயி விஜயன்/விகடன்       பினராயி விஜயன் - மகத்தான தலைவன் கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று 140 சீட்டுகளில் 100 சீட்டுகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது . இத்தனைக்கும் 75 வயதான விஜயனின் மீது தங்க கடத்தல் வழக்கு , சபரிமலை பிரச்னை என பல்வேறு வழக்குகளை பாஜக கட்சி தொடுத்தது . மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது . இதனை முதலில் அமைதியாக பார்த்த விஜயன் , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்புகளை மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதித்தார் . இதனை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பின்பற்றின . இடதுசாரிகள் சிறப்பாக வென்றதோடு , பாஜக கட்சி வெல்லுவதற்கான வாய்ப்பையும் தடுத்துள்ளனர் . 2016 தேர்தலை விட எட்டு சீட்டுகளை மக்கள் கொடுத்துள்ளனர் என்பதோடு , 2024 இல் மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது . இதில் ம ம்தா , ஸ்டாலின் , பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கலாம் . நிபா நோய்த்தொற்று , வெள்ளப்பிரச்சினை , கொரோனாவை சமாளித்தது

தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை தொழிலாளர்களுக்கு முழுவதுமாக கொடுத்த இளைஞர்!

படம்
            காய்கறிகளைத் தொழிலாளர்களுக்கு கொடுத்த இளைஞர் ! கேரள மாநிலம் அண்டை மாநிலங்களிடமிருந்து காய்கறி , அரிசி ஆகியவற்றைப் பெறுகிறது . இதன் காரணமாக பிற மாநிலங்களில் ஏற்படும் விவசாய பாதிப்புகள் கேரள மக்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் . இம்மாநிலத்தைச் சேர்ந்த யாது எஸ் பாபு , தனது 1.5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு காய்கறிகளை விளைவித்தார் . அதனை தினக்கூலி தொழிலாளர்களின் உணவுக்காக வழங்கியிருக்கிறார் . இடுக்கி மாவட்டத்திலுள்ள அன்னக்கரா எனுமிடத்தில் வாழும் இருபத்தைந்து வயது இளைஞரான இவர் , இயற்கை முறையில் செயற்கை உரங்களை இடாமல் வளர்த்த காய்கறிகளை தானே முன்வந்து அன்னகோரும்மா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழியே தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் . இவரது தந்தையும் கூட இதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் . வாரம்தோறும் நூறு கிலோ காய்கறிகளை பறித்து உணவுக்காக தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர் . இவரது தோட்டத்தில் மிளகு , பீன்ஸ் , ஏலக்காய் , பீர்க்கை , கத்தரிக்காய் செடிகளை பயிரிட்டுள்ளார் . பனிரெண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான

மாரடைப்பு வந்தாலும் மக்களுக்கு சிகிச்சை செய்வேன்! - அர்ப்பணிப்பான கேரள மருத்துவரின் கொரோனா சாதனை!

படம்
            மருத்துவர் சந்தோஷ்(மஞ்சள் உடையில்)         சந்தோஷ்குமார் மருத்துவர் நோயாளியைத் தேடித்தான் மருத்துவர்கள் முன்னர் சென்று வந்தார்கள் . ஏன் தெரியுமா ? மருத்துவரை தேடி நோயாளிகள் அலைந்தால் அவர்களின் நோய் இன்னும் கூடுதலாக அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது என்பதால்தான் . மருத்துவர் சந்தோஷ்குமார் தொற்றுநோ்ய் பாதிப்புள்ள சியரா லியோன் , போர் ஆபத்துள்ள சிரியா என எந்த இடத்திலும் தயக்கமே இல்லாமல் சென்று தனது மருத்துவச்சேவையை அளித்துள்ளார் . இருபது ஆண்டுகாலத்தில் நாற்பது நாடுகளுக்கு சென்று மருத்துவச் சேவையை அளித்துள்ளார் . கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவக்கல்லூரியில் அவசரகால சிகிச்சைத் துறையின் டெபுடி சூப்பிரடெண்டாக பணியாற்றிவருகிறார் . இந்த மருத்துவக்கல்லூரி தொடங்கியபோது இவர் உட்பட பல்வேறு மருத்துவர்களுக்கு எப்படி செயல்படுவது என்ற எந்த நூலும் பின்பற்றுவதற்கு கிடையாது . அனைத்துமே அனுபவ பாடங்களாக கற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சைய உயர்த்தியுள்ளனர் . மாநிலத்தின் முக்கியமான மருத்துவமனை , பல்வேறு அதிகாரிகளால் அடிக்கடி பார்வையிடப்படும் இடமாகவும்

சிபிஐயை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் மாநிலங்கள்! - வளர்ந்து தேய்ந்த சிபிஐ

படம்
    சிபிஐ விளையாட்டு !     மத்தியில் பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வழக்குகள் தூசு தட்டி எடுத்து ஆளும் அரசு , முதல்வர் , அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன இதில் தீர்ப்பு வருவது யாருக்கும் முக்கியமில்லை . சேற்றை வாரியிறைத்து அவமானப்படுத்துகிறோம் அல்லவா ? அந்த மட்டுக்கு சிபிஐ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது . 1946 ஆம் ஆண்டு டில்லி சிறப்பு காவல்துறை சட்டம் மூலம் சிபிஐ துறை உருவாக்கப்பட்டது . இந்த அமைப்பு முதலில் மத்தியஅரசு ஊழியர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கவே அனுமதிக்கப்பட்டது . இதில் உள்ள பிரிவு ஆறின் படி இந்த அமைப்பை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பான உரிமை டில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் நீங்களாக பிற மாநிலங்களுக்கு உள்ளது . சிபிஐ அமைப்பு முன்னர் மத்திய அரசின் தனிப்பட்ட , ஓய்வூதியம் மற்றும் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது . அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள பிரதமர் இதனை இயக்குவார் என்று கூறலாம் . இந்த அமைப்பின் செயல்பாடு என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதல்ல . இதனை தகவல் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகேட்

மலையாளத் திரைப்படங்களை விரும்புகிறீர்களா? - ஆசிப் மீரானின் நூல்

படம்
மலையாளத் திரையோரம் ஆசிப் மீரான் தமிழ் அலை பதிப்பகம்  மலையாள படங்களை பார்த்து ரசித்து ஆசிப் மீரான் எழுதிய கட்டுரைகள். நூல் என்றதும் புகழ்ந்து நெக்குருகி எழுதி விட்டார் என நினைக்காதீர்கள். புகழ்ச்சியும் உண்டு கழுவி ஊற்றுதலும் உண்டு. இதில் மலையாள இயக்குநர்கள் பற்றி சுய தம்பட்டம் பெருமை இருக்கிறது. கலை, வணிகப்படங்களில், பரிசோதனை முயற்சிகளில் மலையாள நடிகர்கள் ஈகோ பார்க்காமல் ஈடுபடுவதை தன் பல்வேறு கட்டுரைகளில் பதிகிறார் மீரான். கூடவே தான் படங்கள் பார்ப்பதில் மலையாளத்தைத்தான் முதல் தேர்வாக கொள்வேன் என்கிறார். விருப்பு வெறுப்புகள்தானே படத்தை தீர்மானிக்கும். பத்திரிகையில் விமர்சனங்களை எழுதினாலும் கூட அது அந்த தனிநபரின் கருத்துக்களை உள்ளடக்கியதுதானே? இந்த நூலையும் நாம் ஆசிப் மீரானின் சினிமா அறிவோடு பொருத்திப் பார்க்கவேண்டும். இந்த நூல் மூலம் மலையாள திரையின் சிறப்பான இயக்குநர்கள், நடிகர்களை அறிய முடியும். அந்த வகையில் இந்த நூல் முக்கியமானது. நூலின் இறுதியில் அவரைக் கவர்ந்த இயக்குநர்கள் பற்றிய குறிப்புகளையும் படங்களையும் கொடுத்திருக்கலாம். உதவியாக இருந்திருக்கும். மற்ற

பகடிக்கலைஞர்- கேரள கார்ட்டூனிஸ்ட் சுதீர் நாத்

படம்
கேரளத்திலுள்ள திரிக்காகரா எனும் கிராமத்தில் பிறந்த சிறுவனுக்கு  வரைவது என்றால் அவ்வளவு இஷ்டம். ஆனால் அதற்கான தூண்டுதல் வேண்டுமே? 1986 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள கேலிச்சித்திரக் கலைஞர் நாதம் உரையாற்றியதைக் கேட்டதும் சிறுவன் மனதில் இத்துறைதான் தனது எதிர்காலம் என்பது முடிவாகத் தோன்றியது. நாதன்,  முதல்வர் கே.கருணாகரன் வரைந்த கேலிச்சித்திரத்தை எடுத்துச்சென்று அவரிடம் காட்டி கையெழுத்து வாங்கினார். அதனை தன் வகுப்பில் காட்டி பெருமை கொண்டார். ஆனால் வகுப்பில் அச்சிறுவனே அதனை வரைந்ததாக நினைத்துக்கொண்டு பாராட்டினர். சரியோ தவறோ அந்த பாராட்டு அவரை நிறைய வரைய வைத்தது. இன்று சுதீர் நாத், நிறைய கேலிச்சித்திரங்களை வரைவதோடு அதனைப் பற்றி பிறருக்கு வகுப்புகள் எடுக்கிறார். அடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுகிறார். சுதீர் நாத் என்று பெயரும் புகழும் பெற்றவருக்கு பதினைந்து வயதானபோது, அவரின் அம்மா, அவரை கார்ட்டூனிஸ்டான யேசுதாசனிடம் அழைத்துச்சென்றார். அவர்தான் சுதீருக்கு அனைத்து அடிப்படை விஷயங்களையும் கற்பித்தார். 1987 ஆம் ஆண்டு சுதீர் வரைந்த அரசுக்கு எதிரான கார்ட்டூன்கள் மாநிலமெங்க

ரோஷினி - வட இந்திய மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி- கேரளச்சாதனை!

படம்
எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு கல்வி! இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தாய்மொழிக்கல்வி! கேரள அரசு, அரசுப்பள்ளிகளில் வட இந்திய  மாணவர்களுக்கு,  அவர்களது தாய்மொழியையும், அதன்வழியாக மலையாள மொழியையும் கற்றுத்தருகிறது. கேரள அரசு, ரோஷினி என்ற திட்டத்தை அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயற்படுத்தி வருகிறது. இதன்நோக்கம், பிறமொழி மாணவர்களுக்கு தத்தமது தாய்மொழி மற்றும் மலையாளத்தைக் கற்பிப்பது ஆகும்.  நாற்பது தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு, 38 பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கேரளத்தில் 2013ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேற்கு வங்காளம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%), உ.பி (17.28%) ஆகிய அளவுகளில் வட இந்தியர்கள் வாழ்கின்றனர். மலையாளத்தைப் புரிந்துகொண்டால் பணியாற்றுவது எளிது என்ற முயற்சியில் அரசு, ரோஷினி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தன்னார்வலர்களான ஆசிரியர்கள்  2017ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தில் அறிமுகமான திட்டத்தால், 48 சதவீத அளவுக்கு மாணவர்களின் இடைநிற்றல் அளவு குறைந்திருக்கிறது. கேரள அரசு, வட இந்தியர்களால் பொருளாதார பலம் பெற்றிருக்கி

தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக்கலை களரி!

படம்
உடலினை உறுதிசெய்! நம் கனவுகளைச் சாத்தியப்படுத்த மனபலத்துடன் உடல் பலமும் அவசியத் தேவை. அதற்காக உதவுபவைதான் தற்காப்பு கலைகள். அண்மையில் இந்தியத் தற்காப்பு கலைகளில் ஒன்றான களறி பயட்டு புகழ்பெற்று வருகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக களரி வீரர்கள் திரளக்கூடாது என 1793 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் டோப், இக்கலைக்கு தடைவிதித்த வரலாறும் உண்டு. சென்னை வேலூரில் களரி பயிற்சிகளை அளித்துவரும் களரியில் ஷத்ரியா மையத்தை அணுகி, பயிற்சியாளர் சான் கிரிதரனிடம் பேசினோம். இன்றைக்கு களரிப் பயட்டுவின் தேவை என்ன? உங்களின் உடலையும் மனதையும் புத்துணர்வோடும், நெகிழ்வுத்தன்மையோடும் வைக்க களறிப் பயட்டு உதவுகிறது. இக்கலை கேரளாவில் புகழ்பெற்றாலும் இது தோன்றியது தமிழ்நாட்டில்தான். தோற்றுவித்தவர், அகத்திய முனிவர். களரி பயட்டுவில் கற்பித்தல் முறைகள் உண்டா? வடக்கு, தெற்கு என இருமுறைகளில் களரியைச் சொல்லித் தருகிறோம். ஆயுதங்கள், கற்பிக்கும் முறை என சில விஷயங்கள் மட்டுமே இதில் மாறுபடும். வடக்கு முறையில் மேபயட்டும், தெற்கு முறையில் நிழல் சண்டையும் பிரபலமானது. அடிப்படை பயிற்சிக்குப் பிறகு கம்பு, கத்தி, வாள், ஈட்டி ஆக