தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக்கலை களரி!




Image result for kalari


உடலினை உறுதிசெய்!

நம் கனவுகளைச் சாத்தியப்படுத்த மனபலத்துடன் உடல் பலமும் அவசியத் தேவை. அதற்காக உதவுபவைதான் தற்காப்பு கலைகள். அண்மையில் இந்தியத் தற்காப்பு கலைகளில் ஒன்றான களறி பயட்டு புகழ்பெற்று வருகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக களரி வீரர்கள் திரளக்கூடாது என 1793 ஆம் ஆண்டு கேரள ஆளுநர் டோப், இக்கலைக்கு தடைவிதித்த வரலாறும் உண்டு. சென்னை வேலூரில் களரி பயிற்சிகளை அளித்துவரும் களரியில் ஷத்ரியா மையத்தை அணுகி, பயிற்சியாளர் சான் கிரிதரனிடம் பேசினோம்.

இன்றைக்கு களரிப் பயட்டுவின் தேவை என்ன?

உங்களின் உடலையும் மனதையும் புத்துணர்வோடும், நெகிழ்வுத்தன்மையோடும் வைக்க களறிப் பயட்டு உதவுகிறது. இக்கலை கேரளாவில் புகழ்பெற்றாலும் இது தோன்றியது தமிழ்நாட்டில்தான். தோற்றுவித்தவர், அகத்திய முனிவர்.
களரி பயட்டுவில் கற்பித்தல் முறைகள் உண்டா?
வடக்கு, தெற்கு என இருமுறைகளில் களரியைச் சொல்லித் தருகிறோம். ஆயுதங்கள், கற்பிக்கும் முறை என சில விஷயங்கள் மட்டுமே இதில் மாறுபடும். வடக்கு முறையில் மேபயட்டும், தெற்கு முறையில் நிழல் சண்டையும் பிரபலமானது. அடிப்படை பயிற்சிக்குப் பிறகு கம்பு, கத்தி, வாள், ஈட்டி ஆகியவற்றைக் கற்றுத் தருவார்கள்.

களரி என்றாலே வாள், கேடயம் என்ற இருவகை ஆயுதங்கள் மட்டும்தான் உண்டா?

கடாரி, கட்கம் (வாள்), கரிகா (கத்தி), சுருள் (உறுமி), குந்தம் (ஈட்டி), மென்மழு (கோடாரி) ஆகிய ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி தருகிறோம். ஆனால் இப்பயிற்சி கைப்பிரயோகம் (கைகளால் தாக்குதல்), கோல்தாரி (கம்பு தாக்குதல்) ஆகியவற்றைப் பழகிய பிறகே கற்பிக்கப்படும். தொடக்கப்பயிற்சியில் பிழிச்சல் முறையில் பயிற்சியாளரின் உடலில் எண்ணெய் தடவி உடலை நெகிழ்த்துவது முக்கியமான நிகழ்ச்சி.

வர்மப்புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார்களே அது எதற்கு?

தியானத்தில் சக்கரங்களைக் குறிப்பிடுகிறார்களே அதுபோல உடலில் பல்வேறு வர்மப்புள்ளிகள் உண்டு. இந்த இடத்தில் தாக்கப்பட்டால் உறுப்பு செயலிழப்பு, உயிரிழப்பு ஏற்படும். அடிபட்டவர்களைக் காக்க  களரி வீரர்களுக்கு 'வர்மசிகில்சா சம்ரதாயம்' எனும் மருத்துவப் பயிற்சியையும் இதில் கற்றுத் தருகிறோம். 


 ச.அன்பரசு