வடகொரிய பெண்களை சிதைக்கும் சீனர்கள்!








வடகொரிய பெண்களை வளைக்கும் சீனா



சீனாவில் அகதியாக வாழ வரும் வடகொரிய பெண்களை செக்ஸ் தொழிலில் தள்ளும் மாஃபியா கும்பல்கள் அதிகரித்து வருவதாக கொரியா ஃப்யூச்சர் இனிசியேட்டிவ் எனும் திட்ட ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அகதியாக வாழ வழிதெரியாமல் வரும் பெண்களை திருமணம் என்ற போர்வையில் செக்ஸ் தொழிலில் தள்ளும் கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டாய திருமணத்தின் பேரில் பெண்களை வதைத்து செக்ஸ் தொழிலில் அவர்களை பலப்பிரயோகம் செய்து தள்ளி அதில் காசு பார்த்து வருகிறது இந்தக் கூட்டம் என பளிச்சென உண்மை பேசுகிறார் என்கிறார் ஆய்வாளர் யூன் கி சூன்.


எப்படி நடக்கிறது இந்த கொடூரம்? முதலில் இங்கு அகதியாக வாழ வரும் பெண்களை திருமணம் என்ற பெயரில் அணுகி மெல்ல மெல்ல வறுமையைக் காரணம் காட்டி சதை வணிகத்தில் இழுத்துவிட்டு அவர்களை சிதைக்கின்றனர். திருமணம் என்பது ஒரு சாக்குதான். மெல்ல இன்று வடகொரியாவிலிருந்து நேரடியாக பெண்களை செக்ஸ் தொழிலுக்கென இழுத்து வருவதும் அதிகம் நடைபெறுகிறது. வாழ வழியற்ற பெண்களுக்கு உடலே சாபமாகிற காரணம் இதுதான்.


வடகொரியாவிலுருந்து வரும் 60 சதவீத பெண்களில் 50 சதவீதப் பெண்கள் செக்ஸ் தொழிலில் தள்ளப்படுகின்றனர் என்கிறது மனித உரிமைக் கண்காணிப்பகம். 6,885 வழக்குகள் பதிவானாலும் போலீஸ் பெரியளவு இதனைக் கண்டுகொள்வதில்லை. காரணம் எல்லையில் ஆரம்பித்து செக்ஸ் ஏரியா வரை கொட்டும் காசு. சீனா, வடகொரியா அதிபர் கிம்முடன் நெருக்கம் காட்டிலும் தன் நாட்டில் அகதியாக வாழ வரும் மக்களுக்கு பெரிய உதவிகள் எதனையும் இதுவரை செய்யவில்லை.

தென்கொரிய கிறிஸ்தவர்கள் வடகொரிய பெண்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தாலும், பின்னாளில் அவர்களை கிறிஸ்த மத த்திற்கு மடைமாற்றம் செய்துவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் வருகிறது.

இப்படி மதமாற்றம் செய்வது மிக குறைவான அளவுதான். மேலும் வட கொரியர்கள் பெரும்பாலும் புரடஸ்டண்ட் கிறிஸ்தவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார் மனித உரிமை அதிகாரியான மைக்கேல் கிளென்டைனிங்.


நன்றி: யுபிஐ