எலக்ட்ரிக் வாகனப் புரட்சி எங்கிருந்து தொடங்குகிறது தெரியுமா?







எலக்ட்ரிக் வாகனப் புரட்சி அமெரிக்காவில் இருந்து தொடங்கும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சீனாவிலிருந்து தொடங்கும் என்பதுதான் உண்மை. எப்படி?

2018 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 23 மில்லியன் கார்கள் விற்றுப்போயுள்ளன. இன்றும்கூட சீனாவில் கார்களே இல்லாத குடும்பங்களும் அங்கு உண்டு என்பதால் வாகனச்சந்தை இன்னும் விரிவாக அனேக வாய்ப்புகள் உள்ளன.

2015 ஆம் ஆண்டு முதலாக எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அங்கு உயரத்தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 1.1 மில்லியன் கார்கள் அங்கு விற்றுள்ளன. 55 சதவீத கார்கள் உலகமெங்கும் விற்றுபோயுள்ளன என்றால் அதைவிட மூன்று மடங்கு எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை சீனர்கள் வாங்கியுள்ளனர். இதன் போட்டியாளரான அமெரிக்காவில் 3 லட்சத்து 58 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்றுள்ளன.

இதற்கு முக்கிய காரணம், கார் பேட்டரிகளின் விலை சரசரவென குறைந்ததுதான். 2021 ஆம் ஆண்டு  உலகின் 70 எலக்ட்ரிக் கார் பேட்டரிகளை சீனாவே தயாரிக்கும் என அறிக்கை கூறியுள்ளது. சீன அரசு இதற்காக பல்லாயிரம் கோடி டாலர்களை இத்துறைக்கு மானியமாக அளித்துள்ளது. இதனால் பல்வேறு கார் கம்பெனிகள் புதுப்புது எலக்ட்ரிக் கார்களை மேட் இன் சீனா என்று உலகச்சந்தையில் இறக்கவிருக்கின்றன.


எம்ஜி மோட்டார்ஸ் என்ற பிரிட்டிஷ் கம்பெனியை சீனக்கம்பெனிகள் கையகப்படுத்தி அண்மையில் இந்தியாவில் கூட கார்களை அறிமுகப்படுத்திவிட்டனர். எனவே போட்டி மெல்ல கடினமாகி வருகிறது. இனி உலக வல்லரசு சீனாவா, அமெரிக்காவா என்றுதான் இருக்க முடியும்.

நன்றி: தி கான்சர்வேஷன்