இடுகைகள்

மனநலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய்வாய்ப்பட்ட காதலனுக்கு, காதலி கொடுக்கும் அன்பு பரிசு! - லூக்கா - மலையாளம்

படம்
  லூக்கா -மலையாளம் லூக்கா மலையாளம் டோவினோ தாமஸ், ஆஹானா இயக்குநர் – அருண் ஜோஸ்   அதீத காதலும் அதன் விளைவுகளும்…. இப்படித்தான் இந்தப்படத்தின் கதையைக் கூற வேண்டும். லூக்கா என்ற ஓவியர், ஓவிய கண்காட்சி ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தோழி மூலம் பங்கேற்க வருகிறார் நிஹா. அங்கு வாய் சும்மாயிருக்காமல் இதெல்லாம் ஒரு படைப்பா என கேலி பேச, லூக்காவிற்கும் நிஹாவிற்கும் முட்டிக்கொள்கிறது. பிறகு மெல்ல சமாதானமாகி நட்பு கொள்கிறார்கள். பிறகு இருவருக்குமான கடந்தகாலம் தெரிந்துகொண்டபிறகு காதல் உருவாகிறது. லூக்காவின் பெற்றோர் முன்னமே துர் மரணங்களை சந்தித்தவர்கள். நிஹாவிற்கும் பாலியல் வல்லுறவு சார்ந்த மோசமான அனுபவம் இருக்கிறது. அதுவும் அவளின் மாமா மூலமாகவே. இதையெல்லாவற்றையும் மறக்க வைப்பதாக காதல், லூக்காவின் கலை இருக்கிறது. இப்போது சொன்னதெல்லாம் படத்தின் பின்பகுதியில் நாம் அறிவது. படத்தின் தொடக்கமே லூக்கா அவனது வீட்டில் இறந்துகிடக்கிறான். அவன் எப்படி இறந்தான், அவனது பின்னணி, அவனது நட்பு, எதிரிகள் என காவல்துறை அதிகாரி தேடிவருகிறார். அப்படி தேடும்போது நிஹா என்ற பெண் எழுதிய டைரி அவருக்கு கிடைக்கிறது

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

மனநல குறைபாடு கொண்ட அண்ணனைப் பழிவாங்கும் சுயநலமான தம்பி - கோப்ரா - அஜய் ஜானமுத்து

படம்
  கோப்ரா இயக்குநர் அஜய் ஞானமுத்து இசை ஏ ஆர் ஆர் ஸிஸோபெரெனியா குறைபாடு கொண்ட அண்ணனுக்கும், சுயநலமான தம்பிக்கும் நடக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்தான். கதை.  மதியழகன், அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு உதவும் கணித ஆசிரியர். கணிதத்தில் சற்று மேம்பட்ட மனிதர். அதில் கற்ற கோட்பாடுகளை வைத்தே தன்னையும், ஆசிரம குழந்தைகளையும் காப்பாற்ற கொலைத்தொழில் செய்கிறார். இதற்கு நெல்லையப்பர் என்ற பத்திரிகையாளர் உதவி செய்கிறார். இந்த நிலையில் மதி செய்யும் கொலைச்செயல்கள் பற்றி தகவல்கள் மெல்ல இன்டர்போலுக்கு கசிகின்றன. எப்படி என அறியும்போதுதான் அதிர்ச்சி உருவாகிறது. மதியைப் போன்ற தோற்றத்தில் உள்ள இன்னொருவன்தான் தகவல்களை பிறருக்கு கொடுக்கிறான். ஏன் அப்படி செய்கிறான் என்பது ஃபிளாஷ்பேக்கிற்கான முன்னோட்டம்.  விக்ரமை விடுங்கள். அவர் சிறப்பாக நடிப்பார் என அனைவருக்குமே தெரியும். இதிலும் அப்படியேதான். அதைத்தவிர மற்றவர்களைப் பார்ப்போம். படத்தில் மதி, கதிர் என இரு பாத்திரங்களிலும் நடித்துள்ள சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். அடுத்து, கல்லூரி பருவத்திலுள்ள மதி, கதிர் நடிகர் கூட நல்ல பங்களிப்புதான்.  ஆனால் படத்தில் ஆர்வம் தரும்

ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

படம்
  ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம்.  ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல.  உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து

மனநலம் பாதித்தவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார் . புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன . அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன் . பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது . ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது . பெண்களின் மேம்பாடும் , கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு சொல்லியிருக்கிறது . இடதுசாரிகள் , வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர் . பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து , அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது . பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது . அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன் . நன்றி ! அன்பரசு 22.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------

ஆளுமை பிறழ்வுக்கு என்ன காரணம்?

படம்
  ஆளுமை என்பதை நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். சுய முன்னேற்ற நூல்களில் ஆளுமை என்பது முக்கியமான வார்த்தையும் கூட. ஒருவர் பேசுவது, சிந்திப்பது, செயல்படுவது ஆகியவற்றில் தனது கலாசாரம் சார்ந்த தன்மைகளை தாண்டி இருப்பது ஆளுமைக் குறைபாடு அல்லது பிறழ்வு என கூறலாம். அதாவது சமூகத்தை சீர்திருத்துபவர்களை இதில் உள்ளடக்க முடியாது. குறிப்பிட்ட தன்மையில் யோசிப்பது, செயல்படுவது ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல், மனம் என இரண்டுமே பாதிக்கப்படும் நிலை என புரிந்துகொள்ளலாம். உளவியலாளர், ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு உண்டா இல்லையா என சோதனை மூலம் உறுதி செய்ய முடியும். ஆளுமை பிறழ்வு அல்லது குறைபாடு வகையில் மொத்தம் பத்து வகைகள் உள்ளன. பாரனாய்டு, ஸிசோய்டு, ஸிசோடைபால், ஆன்டி சோசியல், பார்டர்லைன், ஹிஸ்டிரியோனிக், நார்சிஸ்டிக், அவாய்ட்ன்ட், டிபென்டன்ட்,ஆப்செசிவ் கம்பல்சிவ். இவற்றைப் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் திகைப்பாகவே இருக்கும். எப்படி உச்சரிப்பது என்பது முக்கியல்ல. என்ன அறிகுறிகள், பாதிப்பை குறைத்து கட்டுப்படுத்துவது மட்டுமே அவசியமானது. மனநல குறைபாடுகளுக்கு தீர்வு

சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறதா? உலகம் முழுக்கவே சூரிய ஒளி மிகுந்த நாட்களை உற்சாகமான நாளாகவே நினைக்கிறார்கள்.  சூரிய வெளிச்சம், மனித உடலின் உயிரியல் கடிகாரம் சிறப்பாக செயல்பட அவசியம். புற்றுநோயை விலக்கும், ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும் வைட்டமின் டி சத்து, சூரிய ஒளியில்  உள்ளது.  2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வில் சூரிய ஒளி உற்சாகத்தையோ, மேகமூட்டமான மனநிலை மன அழுத்தத்தையோ உருவாக்குவதில்லை என தெரிய வந்தது. இந்த ஆய்வில் 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  ஃபாக்போ (Fogbow)என்றால் என்ன? பனிக்காலத்தில் சிறிய பனித்துளிகளின் வழியே ஒளி ஊடுருவுகிறது. இதனால், ஒளிவிலகல் ஏற்பட்டு ஃபாக்போ உருவாகிறது. வளைய வடிவிலும் வெள்ளை நிறத்திலும் ஃபாக்போ இருக்கும். பனித்துளிகள், மழைத்துளிகளை விட அளவில் சிறியன.    https://www.sciencefocus.com/the-human-body/does-sunshine-make-us-happier-and-healthier/ https://journals.sagepub.com/doi/10.1177/2167702615615867 https://www.sciencefocus.com/planet-earth/what-is-a-fogbow/

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்!

படம்
  பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்ளலாம். தொழில், கல்வி, நம் வாழ்க்கை, இதுவரை போட்டிருந்து திட்டங்கள் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதிகம் அடி வாங்கியது, சமூக வாழ்க்கையை தொலைத்த குழந்தைகள்தான். இதில் வேறு மூடநம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நோயைப் பற்றிய அச்சத்தை அறிவியல் மூலமாக தீர்க்காமல், கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள் என கூறிக்கொண்டிருந்தன.  இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பள்ளி சென்றுகொண்டிருந்த, பள்ளி செல்லவேண்டிய பிள்ளைகள் அனைத்துமே இன்று சமூக வாழ்வை தொலைத்து தனியாக உள்ளனர்.  மும்பையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவி அவள். மாஸ்க்கை கழற்றச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கழற்றவில்லை. ஆசிரியருக்கோ, நோய் பயமில்லை என்று சொல்லி தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். அவர் அந்த மாணவியின் முகத்தை பார்த்தே 600 நாட்களுக்கு மேலாகிறது. அதே மாணவி நடன வகுப்பில்  கலந்துகொண்டாள். அப்போது சக மாணவனின் கையை பிடித்ததுதான் தாமதம். உடனே போய் சானிடைசர் போட்டு கையை சுத்தப்படுத்தினாள். சுகாதாரம் பற்றிய பதற்றம்

தலைக்கு மேலே கூரை இல்லை! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா?  உங்களின் நிலைமை அறியாமல் தங்குவதற்கு இடம் கேட்டு சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் மனதில் உள்ளதை உடனே சொல்லிவிட்டேன். இனிமேல் நான் திருவண்ணாமலை வந்தால் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். தங்களைப் பார்க்கும் வாய்ப்பு திகைந்தால் பார்க்கிறேன். இதனை தங்களது பணிச்சூழலைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு நிறைய வேலைகள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் தங்க முடியாது. குறைந்த விலை கொண்ட பட்ஜெட் விடுதியை நீங்கள் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு திருவண்ணாமலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான இடம். ஆனால் உங்களுக்கு அதுதான் வாழிடமே. இரண்டிற்குமான வேறுபாட்டை உணரவில்லை. இனிமேல் தவறு நேராது.  கடிதம் எழுதுவது பற்றி இணையதளம் ஏதாவது இருக்கிறதா என தேடினேன். chitthi exchange,Mumbai chapter என பல்வேறு கடிதம் எழுதும் வலைத்தளங்கள் இருப்பதை இந்து நாளிதழில் எழுதியிருந்தனர். இது ஆச்சரியமான செய்தி.  மயிலை காபி என்ற கடையில் டீ  குடித்தேன். குங்குமத்தில் வேலை செய்யும் நண்பர் சக்தி அங்கு கூட்டிப்போனார். ஒரு டீ 25க்கு விற்கிறார்கள். கா

திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! பியாண்ட் பேட் கிறிஸ்பே ஹாசெட் ரூ .699 அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது , நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது . அலுவலக வேலை , தனிப்பட்ட வாழ்க்கை , சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு . இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான் . நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம் .                  ஃபோர்த் லயன் வேணு மாதவ் , கோவிந்த் ஶ்ரீநாத் ஆலெப் ப .312 ரூ .699 எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் . மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன . இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும் . ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி அம்ரிதா திரிபாதி , காம்னா சிப்பர் சைமன் ஸ்ஹஸ்டர் ரூ 139 கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை , குடும்பம் , எதிர்கால

பெண்களை சவால்களை ஏற்காவிட்டால் அவர்களால் வெற்றி பெற முடியாது!

படம்
              உலக பெண்கள் தினம் வந்துவிட்டது . பெண்களுக்கு மரியாதை தரும் தினத்தில் அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை எழுதாவிட்டால் எப்படி ? ருச்சுதா திவேகர் ஊட்டச்சத்து நிபுணர் , எழுத்தாளர் நீங்கள் ஒன்றை விரும்பினால் போதும் . மற்றதெல்லாம் எளிமையானதுதான் . நான் மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றி அவர்களை உணவுமுறையை பின்பற்றச்செய்கிறேன் . அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் . இது என்னை பெரிதும் உற்சாகப்படுத்துகிறது . மக்கள் நம்புகிற , ஆனால் நீங்கள் எதிர்க்கும் உணவு தொடர்பான மூடநம்பிக்கைகள் என்ன ? அரிசி சாப்பாடு ஒருவரை பருமனாக்கும் . மாம்பழம் நீரிழிவை ஏற்படுத்தும் . நெய் சேர்த்துக்கொள்வது கொழுப்பை அதிகரிக்கும் என்றி மூன்றை முக்கியமாக சொல்லலாம் . நீங்கள் ஊட்டச்சத்து நிபுணராக என்னென்ன போராட்டங்களைச் சந்தித்தீர்கள் . நான் தேர்ந்தெடுத்த துறை பிறரிடமிருந்து வேறுபட்டது என்பதால் எனக்கு வந்த சவால்களும் வேறுவிதமானவை . மும்பைக்காரி என்பதால் ஓரளவு சமாளித்துவிட்டேன் . மேலும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் கூட இதுபோலவே சவால்களை சந்தித்து வந்தவர்கள் எ

மனநலனைக் காக்கும் மொபைல் ஆப்ஸ்கள்!

படம்
பிபிசி பெருந்தொற்று காலத்தில் உடல்நலனைப் பாதுகாக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. மனநலன் பாதிப்பு உடனே வெளியே தெரியாவிட்டாலும் நமது இயல்பு, பழகும் முறை என அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. அதனை ஓரளவு சீர் செய்ய உடற்பயிற்சி, யோகா போன்றவை உதவும். இவற்றை தொடர்ச்சியாக செய்வதில்தான் பிரச்னை உள்ளது. அவற்றை நினைவுபடுத்தவும் ஏராளமான ஆப்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். Calm இந்த ஆப் தினசரி நீங்கள் இனிய இசையோடு தியானம் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு உதவுகிறது. இதற்கான இசையை நீங்கள் இதில் உள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். தூங்குவதற்கான நேரத்தையும் இந்த ஆப் கண்காணிக்கிறது. இனிய இசையைத் தேர்ந்தெடுத்து அதனை போஸ் ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு நீங்கள் தூங்கலாம். காசு கொடுத்து அப்டேட் செய்தால் நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும். headspace முன்னாள் புத்த மத துறவியான ஆன்டி புத்திகாம்ப் என்பவர் இந்த ஆப்பின் துணை நிறுவனர் இதுவும் காம் என்ற மேற்சொன்ன ஆப் போலத்தான செயல்படுகிறது. தியானமும், தூக்கமும் இதன் முக்கியமான அம்சங்கள். குறிப்பிட்ட மனநிலை சார்ந்த இச

குடும்பத்தில் ஏற்படும் உறவுச்சிக்கல்களைத் தீர்க்க உதவும் தெரபி முறைகள்!

படம்
pixabay இஎம்டிஆர் எந்த பணிகளையும் செய்வதற்கு நாம் வேறு சூழல்களால் தாக்கப்படாமல் இருக்கவேண்டும். பொதுவாக நாம் ஏதாவது பணியில் இருக்கும்போது நம்மை அதை செய்யவிடாமல் தடுப்பது, நமது கண்களும் காதுகளும். இந்த தெரபி முழுக்க கண்களுக்கானது. தெரபி வல்லுநர் தன் சுட்டு விரலைக் காட்டி குறிப்பிட நிகழ்ச்சியை நினைக்கச் சொல்லுவார். பொதுவாக நமக்கு மகிழ்ச்சியான நினைவுகளை விட துயரமான வேதனையான நிகழ்வுகள்தான் நினைவுக்கு வரும். அவற்றிலிருந்து ஒருவரின் மனதை திருப்பி அவர்களின் எண்ணங்களை நேர்மறையாக மாற்றுவதுதான் இஎம்டிஆர் தெரபி நோக்கம். ஆர்ட் தெரபி அனைவராலும் தன்னுடைய உணர்வுகளை பேசுவதன் மூலமாக வெளிப்படுத்திவிட முடியாது. அதற்காகவே ஒருவரின் மனதிலுள்ள எண்ணங்களை அவர்களது கலை வெளிப்பாட்டு வழியாக அறியும் தெரபி. ஓவியங்களை நாம் வெளிப்படையாக பிறருக்கு பார்வையிட அனுமதிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வும், விமர்சனங்களை ஏற்கும் மனநிலையும் ஏற்படுகிறது. ஓவியம் மட்டுமல்ல, இசை, எழுத்து ஆகியவையும் ஒருவருக்கு உதவலாம். இசை கேட்பது மட்டுமல்ல அதனை உருவாக்குவதும் மூளையிலுள்ள டோபமைன் சுரப்பில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அனிமல்