இடுகைகள்

சூழல் போராட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் போராட்டங்களின் முன்னோடி ரேச்சல் கார்சன்!

படம்
       இயற்கை செயல்பாட்டாளர் ரேச்சல் கார்சன் இன்று காடுகள் வணிகத்திற்காக திட்டமிட்டு விபத்துபோல நெருப்பிட்டு எரிக்கப்படுகின்றன. பாமாயில் உற்பத்திக்காக இயற்கை வளங்களை அழித்து பன்மைத்துவ சூழலை புறக்கணித்து அரசு ஏகபோக சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக்கிறது. காடுகளின் பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று கிரேட்டா துன்பெர்க், பியஷ் மனுஷ், முகிலன், நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் என போராடி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர் ரேச்சல் கார்சன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஸ்பிரிங்டேலில் கார்சன் பிறந்தார். எழுத்தாளர். கடல்சார் உயிரிய ஆராய்ச்சியாளர், இயற்கை செயல்பாட்டாளர் என பல்வேறு வகைகளில் வேலை செய்து வந்தார்.  1962ஆம் ஆண்டு தி சைலண்ட் ஸ்பிரிங் என்ற நூலை எழுதினார். இந்த நூலை நீங்கள் தமிழில் மௌன வசந்தம் என்ற பெயரில் வாசிக்கமுடியும். இயற்கை சூழலை டிடிடீ என்ற வேதிப்பொருள் எப்படி பாதிக்கிறது என்பதை ஆவணப்பூர்வமாக நூலில் சொல்லிருந்தார். இதுவே அமெரிக்காவின் நிலங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அரசு அதிகாரிகளு

இங்கிலாந்தில் சூடு பறக்கும் சூழல் போராட்டம்!

படம்
இங்கிலாந்தில் வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமானது, அவர்கள் விடுமுறை தினத்தன்று போராடுவதும் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதும்தான். ஆனால் அதற்காகவெல்லாம் அரசு சும்மா இருக்குமா? 2025 ஆம் ஆண்டிற்குள் கார்பனைக் குறைக்கும் நிர்பந்தம் இருக்கும் அரசை மேலும் போராட்டம் நடத்தி நெருக்கடியில் தள்ளியதற்காக, சுமார் 570 பேர்களை அரசு கைது செய்துள்ளது. இங்கிலாந்தின் ஹீத்ரு விமானநிலையத்தில் இளைஞர்கள் சூழல் தொடர்பான பாடல்களைப் பாடி போராடியதும் மக்களை உணர்ச்சிகரமாக போராட்டத்திற்கு அழைத்துள்ளது. போராட்டத்தில் அகாடமி அவார்டு வென்ற தாம்சன் என்ற நடிகையும் இணைந்துள்ளது போராட்டக்கார ர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பதிமூன்று முதல் பதினான்கு வரையிலான இளைஞர்கள் நாம்தான் பூமியின் கடைசி தலைமுறையா என்று கேள்வி கேட்டு வைத்த பேனர்கள் மக்களை போராட்டத்திற்கு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. என்னுடைய எதிர்காலம் பற்றிய பயத்தினால்தான் நான் போராட்டத்திற்கு வந்தேன். அதே பயம்தான் போராடுவதற்கான தைரியத்தையும் தந்தது என்று ராய