இடுகைகள்

கூகுள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

படம்
  பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை  ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம்.  லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ்.  இணையத்தில் இயங்க கூகுள் மெய

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு டெல் கம்ப்யூட்

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து

குரோம்புக்கால் எந்த பயனும் இல்லை - காலாவதி தேதியால் குப்பைக்குச் செல்லும் கணினி

படம்
  குரோம்புக் இ குப்பையாகும் குரோம் புக் அமெரிக்க பள்ளிகளில் குறைந்த விலை காரணமாக வாங்கப்பட்ட குரோம்புக், தற்போது இ குப்பையாக மாறத் தொடங்கிவிட்டன. இதற்கு காரணம், கூகுளின் காலாவதி அறிவிப்புதான். குரோம் புக் மடிக்கணினி வன்பொருட்கள் நன்றாக இயங்கி வந்தாலும் கூட அதற்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொண்டால் அதை மாணவர்கள் பயன்படுத்த முடியாது. குறைந்த விலை, எளிதாக பயன்படுத்துவது காரணமாகவே   பள்ளிகள் கூகுளின் குரோம் புக் கணினியை வாங்கின. நடப்பு ஆண்டில் பதிமூன்று மாடல்கள், அடுத்த ஆண்டு 51 மாடல்களுக்கான   காலாவதி தேதியை கூகுள் அறிவித்துவிட்டது. அமெரிக்க அரசு, கூகுள் குரோம் புக் மடிக்கணியை வாங்குவதற்கு மட்டும் 1.8 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. ஆனால், இக்கணினிகளுக்கான பயன்பாடு குறைந்த கால வரம்பே கொண்டிருந்தால், செலவழித்த பணத்திற்கான மதிப்பே இருக்காது. இதற்கு எதிர்மறையாக விண்டோஸ், மேக் ஆகிய நிறுவனங்களின் ஆதரவு நிறுத்தப்பட்டாலும் அதை ஒருவர் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். உடனே தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டியதில்லை. ஆனால் குரோம்புக்கில் இந்த வசதி இல்லை.   பெருந்தொற்று காலத்தில் குரோம்

செயற்கை நுண்ணறிவு ஆய்விலும், வணிகப்படுத்துதலிலும் தடுமாறும் கூகுள்!

படம்
  சுந்தர்பிச்சை, இயக்குநர், கூகுள் 2016ஆம் ஆண்டே கூகுள், செயற்கை நுண்ணறிவு பாதை பற்றிய   அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. ஆனால் செயல்பாடு என்ற வகையில் பின்தங்கிவிட்டது. எனவே, சாட்ஜிபிடி மைக்ரோசாப்டின் முதலீட்டைப் பெற்று முதலில் செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதனால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது கூகுளின் இயக்குநர் சுந்தர் பிச்சைதான். அமெரிக்க டெக் நிறுவனங்களின் வசீகர இயக்குநர்கள் என்று சொல்லும் எந்த அம்சங்களும் இல்லாத அகவயமான தலைவர், சுந்தர். திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதில் காட்டிய தீவிரம் அவரை தலைவராக்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என யாருடைய மக்கள் செல்வாக்குக்கும் எதிராக சுந்தரை நிறுத்தமுடியாது. கூகுளின் ஐஓ மாநாட்டில் கூகுள் மெயிலுக்கு ஹெல்ப் மீ ரைட் எனும் வசதி, கூகுள் மேப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் 3 டியில் பார்ப்பது, புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் செம்மைபடுத்துவது, கூகுள் பார்ட் எனும் சாட் ஜிபிடிக்கு போட்டியானசெயற்கை நுண்ணறிவு, அதற்கான பால்ம் 2 எனும் லாங்குவேஜ் மாடல்   என ஏராளமான விஷயங்களை பேசினார்கள். ஆனால், பலரும் தெரிந்துகொள்ள விரும்பியது. கூகுள

அமெரிக்காவில் மின் வாகனங்கள் பரவலாக மாறாததற்கு காரணம்!

படம்
  மின் வாகனங்களை நகரம் தொடங்கி கிராமத்தில் வசதியானவர்கள் வரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விலை அதிகமென்றாலும் தவணைக்கு வாங்கி ஓட்டுகிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை இப்படி ஓட்டுவது புதிய அந்தஸ்தாக மாறிவிட்டது.   மின்வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்கள் அளவுக்கு இன்னும் புழக்கமாகவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டாக மின் வாகனங்களின் வளர்ச்சி நடந்துவருகிறது. ஆனாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. பரவலாவதைத் தடுக்கும் சில காரணிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அவற்றைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.   மின்வாகனங்கள் குறிப்பாக கார்கள் இன்று வலிமையாக தயாரிக்கப்படுகின்றன. மக்களும் அதை வாங்கி ஓட்டுகிறார்கள். ஆனால் கார்கள் இத்தனை கி.மீ. தூரம் செல்லும் என கணக்குப் போட்டு விளம்பரம் கொடுக்கிறார்கள். இந்த கணக்கு உண்மையா என்றால் அதை பருவநிலைதான் தீர்மானிக்கும். மேற்குநாடுகளில் உறைபனி கொட்டும் காலங்களில் மின் வாகனங்களின் திறன் முப்பது சதவீதம் குறைந்துவிடுகிறது. பயணிகள் வாகனம் என்றால் அதற்கான ஆற்றலை எளிதாக சேமிக்கலாம்.   ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்டு சமாளித்துவிடலாம்.

நிலநடுக்க பொது எச்சரிக்கை அமைப்பின் முன்னேற்றம்!

படம்
  நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்! ஒரு நாட்டின் பரப்பில் நடைபெறும் தட்பவெப்பநிலை மாற்றங்களை அரசு அமைப்புகள் துல்லியமாக கண்காணிக்கின்றன. அமெரிக்காவின்  நாசா அமைப்பு, பல்வேறு செயற்கைக்கோள்கள் மூலம்  மாகாணங்களில் ஏற்படும் நிலப்பரப்பு ரீதியான மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறது. இதனோடு தேசிய கடல் மற்றும் சூழல் அமைப்பும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும்(USGS) இணைந்து பணியாற்றுகின்றன. தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.  கூடுதலாக, அமெரிக்க அரசு அமைப்புகள்,  தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. இதனால், அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கும், கடினமான சவால்களை பற்றிய ஆய்வுகளை செய்யமுடிகிறது.  தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நுட்பங்கள் (Earthquake Early Warning EEW)வேகமாக முன்னேறி வருகின்றன.  இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசும், தனியாரும் இணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுதான். இதன்மூலம் நிலநடுக்கத்தால் பலியாகும் ஏராளமான மக்களைக் காப்பாற்ற முடியும்.  நிலநடுக்கம் ஏற்படும் நிலநடுக்கவெளி மையத்தில் (Epicenter) நிலநடுக்க சென்சார்களை பொருத்துகின்றன

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்ப சாதனையாளர் மெரிசா மேயர்!

படம்
  மெரிசா மேயர் மெரிசா மேயர்  சூழல் பொறியாளரான மைக்கேல் மேயர், கலை ஆசிரியரான மார்க்கரேட் மேயர் ஆகியோருக்கும் மகளாக 1975ஆம் ஆண்டு மே 30 இல் பிறந்தவர் மெரிசா.  அமெரிக்காவைச் சேர்ந்தவரான மேரியா மென்பொருள் பொறியாளர், முதலீட்டாளர், பெண் தொழில்முனைவோர் என பல முகங்களைக் கொண்டவர். கூகுளின் தொடக்க காலகட்டத்தில் அதில் பணிபுரிந்தவர்.  ஸ்டான்போர்ட் பல்கலையில் சிம்பாலிக் சிஸ்டம், கணினி அறிவியல் பாடங்களைக் கற்றார். செயற்கை நுண்ணறிவு பற்றியும் படித்தவர் 1997இல் எம்எஸ்சி பட்டம் பெற்றார். 1999இல் கூகுளில் முதல் பெண் பொறியாளராக உள்ளே நுழைந்தார் மெரிசா. இவரது பணியாளர் எண் 20.  கூகுளின் தொடக்க பக்கத்தை இன்று அழகாக இருக்கிறது என பாராட்டினால் அதற்கான பெருமை மெரிசாவிற்குத்தான் சென்று சேரவேண்டும். இவர் வடிவமைத்த முகப்பு பக்கத்திற்கு பிறகுதான் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. ஜிமெயில், குரோம், மேப் எர்த் ஆகியவற்றிலும் நிறைய பங்களிப்புகளை செய்தார் மெரிசா.  பிறகு யாஹூ நிறுவனத்திற்கு இயக்குநராக சென்று விட்டார் மெரிசா. 2012இல் அந்த நிறுவனத்திற்கு சென்றவர், 2017இல் தனது பதவியை விட்டு நீங்கினார். யாஹூவின் வ

இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

படம்
  தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம்.  இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை பெ

கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

படம்
  தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன.  அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம்.  கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது.  சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது.  அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.  அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந்தந்த நிறுவனங்களில்தான் பணத்த

கண்ட்ரோல் + டெலிட் அழித்து கடந்த காலத்தை கூகுளில் அழிக்க முடியுமா? - ஒரு அலசல்

படம்
              கூகுளில் கடந்த காலத்தை மறைப்பது எப்படி ? காவல்துறையில் ஒருவர் பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டால் அது தினகரன் , தினத்தந்தி என அனைத்திலும் செய்தியாகும் . ஆனால் அவர் அக்குற்றச்சாட்டு தவறானது என்றால் அப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்று எந்த செய்தியும் பிரசுரமாகாது . இன்று டிஜிட்டல் உலகிலும் அதே நிலைதான் உள்ளது . இதில் ஒரு மாற்றம் உள்ளது . ஒருவர் தவறுசெய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு பழைய வாழ்க்கையை வாழ நினைத்தாலும் அது முடியாது . காரணம் , வேலை தேடி நிறுவனத்திற்கு சென்றால் அவரைப் பற்றிய பின்னணியைத் தேடும்போது எதிர்மறையான செய்திகளை கூகுள் எளிதாக காட்டிக்கொடுக்கிறது . இப்படி கூகுள் அத்தனை விஷயங்களையும் தனது சர்வரில் தேக்கி வைத்திருப்பதால் , குற்றங்களை மறந்த அமைதியாக வாழ நினைப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பே கிடைப்பதில்லை . கடந்தகாலம் என்பது காலைப்பிடித்த உடும்பாக தடுக்க புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமல் பலரும் தடுமாறி வருகிறார்கள் . இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது .    குழந்தைகளை பாலியல் சீண்டல் , வல்லுறவு , கொலை செய்தவர்களைப் பற்றியும் கூட தகவல்க