இடுகைகள்

ஜவகர்லால் நேரு ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1947, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை - ஜவகர்லால் நேரு

                1947, ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரை                                                                             ஜவகர்லால் நேரு                                                             தமிழில் : வின்சென்ட் காபோ             பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து நாம் விதியை சந்திக்க முயன்றாலும் , அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது . நாம் நமது நாட்டை முழுவதுமாக அல்லது முழுக்க மீட்கவில்லை என்றாலும் கணிசமான அளவு மீட்டிருக்கிறோம் . உலகமே உறங்கும் இந்த நள்ளிரவு வேளையில் இந்தியா தன் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப்பெற விழித்துள்ளது ; தூங்காமல் விழிப்பாக உள்ளது .             இந்த நிகழ்ச்சி வரலாற்றில் மிக அரிதாக நிகழும்படியான சொல் , செயல் என அனைத்திலும் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலம் மாறி , பழையவற்றிலிருந்து மீண்டு புதியவற்றுக்கு செல்கிறோம் . இந்த மனமார்ந்த செயல்பாட்டின்போது , இந்தியாவிற்கான சேவைகள் மற்றும் அவளின் குடிமக்களின் மீது அர்ப்பணிப்பான பணிகளை செய்யவேண்டும் .             வரலாற்றில் புதிய விடிய