இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நன்மையோ, தீமையோ தன் வாழ்க்கையை முழுமையாக வாழ முயலும் நாம்கூங் குடும்பத்தின் நோயுற்ற இரண்டாவது மகன்!

 ஹெவன்லி மார்சியல் காட் மங்கா காமிக்ஸ் பாடோ.ஐஓ நன்மை, தீமை பற்றியெல்லாம் கவலைப்படாத ஆள். தன்னை நலமாக வைத்துக்கொள்ள நிறைய அடிதடி, கொலை, சதித்திட்டங்களை செய்கிறார். இறுதியாக ஒரு கட்டத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பு ஆட்களைக் கூட கொன்றுவிட்டு தற்காப்புக்கலையில் உச்சம் அடைய முயல்கிறார். ஆனால், அவரது ரத்தக்களறியான கடந்தகாலம் தடையாகிறது. அவரை அந்நிலைக்கு அனுமதிக்க உயரிய சக்திகள் மறுக்கின்றன. இதனால் அவரின் ஆன்மா, நாம்கூங் இனக்குழுவின் நோயுற்ற பிள்ளை உடலில் புகுகிறது. அந்த பிள்ளைக்கு உடலில் 9 யின் யாங் தடை உள்ளது. இந்த நோய் அரிதானது. இப்படி உள்ளவர்கள் இருபது வயதில் இறந்துபோய்விடுவார்கள்.  உடல் பலவீனம், எலும்புகள் முறிவது, குளிரைத் தாங்க முடியாதது ஆகியவை நோயின் அறிகுறிகள்.  முந்தைய காலத்தில் மிகச்சிறந்த வீரனாக இருந்தவர், நிகழ்காலத்தில் பலவீனமான உடல்கொண்ட ஆண் பிள்ளையின் உடலில் இருந்துகொண்டு இயங்க முடியாமல் தவிப்பதை கதையில் சிறப்பாக காட்டியுள்ளனர். ஓவியங்கள் நன்றாக உள்ளன.  கதையில் நாயகன், முந்தைய காலத்தில் இருந்ததைப் போல கொடூரமாக தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாக இருப்பதில்லை...

வாழ்வில் பொருட்களின் நுகர்வைக் குறைத்து முழுமையாக வாழ்வதை கற்றுத்தரும் நூல்!

படம்
  Goodbye, Things Fumio Sasaki குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் ஃபிமியோ சசாகி கட்டுரை நூல் பெங்குவின்  சசாகி, நலிந்து வரும் பதிப்புத்துறையில் வேலை செய்கிறார். அதற்காக கற்றது தமிழ் நாயகன் போல இரண்டாயிரம், நான்காயிரம் என சம்பளம் வாங்கவில்லை. வீட்டில் பெரிய டிவி, இசைக்கருவிகள், நூற்றுக்கணக்கான நூல்கள், இசை கேட்கும் கருவிகள் வைத்து இருக்கிறார். ஏராளமான பொருட்களையும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.  பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் அதில் சந்தோஷம் குறைவதை மெல்ல உணர்கிறார். அதன்பொருட்டு, பொருள் சார்ந்து வாழ்க்கை இருப்பதை அறிந்துகொள்கிறார். மெல்ல வீட்டிலுள்ள பொருட்களை குறைக்கத் தொடங்குகிறார். குறைந்த பொருட்களில் நிறைவு என்பதே நூலின் அடிப்படை மையப்பொருள்.  வாழ்க்கையை பயணங்கள், நண்பர்கள், புதிய அனுபவங்களை தேடுவது என அமைத்துக்கொள்கிறார். மினிமலிசம் என்பதை பலரும் புரிந்துகொள்ள கஷ்டப்படக்கூடும். ஆப்பிள் போன் பார்த்திருக்கிறீர்கள். வட்டவடிவில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கும். அந்த போன் வந்த காலத்தில் பலரும் ஏகப்பட்ட பட்டன்களை போனில் வைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அத...

மொழிபெயர்ப்பு கட்டுரை - நன்றி அறிவியல் பலகை இதழ்

படம்
       

உங்களது கிரியேட்டிவிட்டியை வளர்க்க உதவும் அற்புத நூல்!

படம்
        ஸ்டீல் லைக் என் ஆர்டிஸ்ட் ஆஸ்டின் கிளியோன் வொர்க்மேன் பதிப்பகம் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால், கார்ட்டூன் கலைஞர் எழுதியிருக்கிறார். அதனால் நூலை வாசிக்கும்போது, படங்கள் அதிகமாகவும் எழுத்து குறைவாகவும் உள்ளது. வாசிக்க அதுவே ஆர்வம் தருவதாகவும் அமைவது ஆச்சரியம்தான். பொதுவாக படம் வரைபவர்கள், அதாவது கார்ட்டூன் போடுபவர்களால் எழுதவும் முடியும். அதற்கு அவர்கள் சற்று நூல்களை படித்து பயிற்சி செய்யவேண்டும். அவ்வளவேதான். அந்தவகையில் ஆஸ்டின், தன்னுடைய அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூல் முழுக்க புகைப்படங்கள், எழுத்துகள் என அவரது கைவண்ணம் அழகாக உள்ளது. ஒருவர் தன்னுடைய திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என எளிதாக கற்றுக்கொடுக்கிறார். அனைத்துமே எளிமையான சின்ன சின்ன விஷயங்கள்தான். குறிப்பாக, தினசரி நடக்கும் அனுபவங்களை நோட்டில் எழுதுவது, வேலை செய்யும் இடங்களை டிஜிட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என சிலவற்றை செய்தாலே நிறைய வேறுபாடுகளை பார்க்கமுடியும் என விளக்கிக் கூறுகிறார். கூடுதலாக நிறைய எழுத்தாளர்கள். ஓவியர்கள், ஓவியக்கலைஞர்களின் மேற்கோள்களு...

ரோனி சிந்தனைகள் - பொற்கால ஆட்சியை விரும்பாமல் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடும் மக்கள்

படம்
  தொடக்கத்தில் கல்லடி பட்ட நாய் போல ஓரிடத்தில் நுழைபவர்கள்தான் பின்னாளில் போடா மயிரே என்று கூறும் அளவுக்கு தந்திரக்காரர்களாக, ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். முட்டாள்தனத்தை ஒருமுறை நீங்கள் அடையாளம் கொண்டுவிட்டால் போதும். முட்டாள்கள் அப்படியே இருப்பார்கள், முட்டாள்தனம் மட்டுமே வீரியமாக மாறிக்கொண்டே வரும். ஒரு நாட்டை அழிக்க எதிரிகள், உளவுப்படை, கூலிக்கொலைகாரர்கள் எதுவுமே தேவையில்லை. இவை செய்யும் அனைத்தையும் மதமும், மூடநம்பிக்கைகளுமே செய்துவிடும். ஒருவருக்கு சலுகை கொடுப்பது வேறு. அந்த சலுகையை பயன்படுத்துமாறு அவரின் வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது வேறு. வெட்டப்பட்ட கிராப் தலையை சீவ உயர்தர சீப்பு, விற்றுவிட்ட வாட்சிற்காக அழகிய உயரிய உலோக பட்டை என ஓ ஹென்றியின் கதை மனிதர்கள் போலவேதான் அர்த்தமே இல்லாத அவலங்கள் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நடந்து தொலைக்கின்றன. ஆட்டு எலும்பு கடினமோ இல்லையோ, கடித்தே தீருவேன் என்று தின்ற நாய்க்கு கடைவாய் பல் விழுந்துவிட்டது. ஆபீஸ்ல வேலை செய்யறவங்கெல்லாம் எப்படி என்று கேட்டதற்கு, பரவாயில்லைங்க, ஒரு பிகர் தேறும் என்று பதில் சொல்லுவதெல்லாம் விதியல்லாம...

தினசரி வாழ்க்கையின் அங்கதத்தை விவரிக்கும் கட்டுரைகள்!

படம்
      நகுமோ லேய் பயலே செல்வேந்திரன் கட்டுரை நூல் எழுத்தாளர் செல்வேந்திரன், இலக்கிய வட்டாரங்களில் புகழ்பெற்றவர். வாசிப்பது பற்றிய நூலை எழுதி தொடக்கநிலை வாசகர்களிடையே கவனம் பெற்றவர். நகுமோ லேய் பயலே என்ற நூல், முழுக்க அவரது தினசரி வாழ்க்கை அனுபவத்தில் அடையாளம் கண்ட நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது. நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள் உள்ளன. அவற்றில் தீவிர இலக்கியம் சாராத கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை அனைவருக்குமானது. இலக்கிய வட்டார அங்கதம் என்பது அங்குள்ள கிசுகிசு, வயிற்றெரிச்சல், பொறாமை, இன்பம், துன்பம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அரசியல் காமெடியை, அதிலுள்ள குத்தல், பகடி புரியாமல் பார்ப்பவருக்கு அதை விளக்கி சொன்னால் நன்றாக இருக்காது அல்லவா? எனவே, மேற்படி இலக்கிய அங்கதத்தை இலக்கியம் படைப்போருக்கு விட்டுவிடலாம். சாதாரணமாக படித்தாலே உங்களுக்கு அதிலுள்ள நகைச்சுவை புரிபட்டுவிடும். தனிப்பட்ட இலக்கியவாதிகளின் உடல், மனம், குணம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டு சிரிப்பவர்கள் சிரிக்கலாம். அல்லாவிட்டாலும் புன்னகைக்க ரசித்துப் படிக்க நிறைய இடங்கள் உண்டு. முதல் கட்டுரையிலிருந்...

சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!

படம்
      12 டினி திங்க்ஸ் ஹெய்டி பார் சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும். பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம். இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இ...

கதைகள் சொல்லப்படாமல், கேட்காமல் வளர்வது குழந்தைகளுக்கு ஆபத்தானது - கஹானி சவாரி

படம்
  பாகிஸ்தான். கராச்சியில் உள்ள லையாரி டவுன். அங்கு இளைஞர் ஒருவர் நூலை விரித்து குழந்தைகளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் வேடிக்கையாக கூறுவதைக் கேட்டு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் கேட்கும் கதை பலமுறை சொல்லப்பட்டதுதான். ஆனாலும் சலிக்காத ஒன்று.  பாகிஸ்தானில் உள்ள பொருளாதார சூழலில் கல்வி அனைவருக்கும் எட்டாத ஒன்று. நூல்களும் உடைகளும் வாங்கி அரசின் இலவசக் கல்வியைப் பெறுவது கூட அங்குள்ள குழந்தைகளுக்கு இயலாத ஒன்று. இதற்கு, அங்கு எரிபொருட்களின் விலை உயர்வும், அதன் விளைவாக ஏராளமான மக்கள் வேலை இழந்ததும் முக்கியமான காரணங்கள்.  பத்து வயதிலுள்ள குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு எளிமையாக வாக்கியத்தை புரிந்துகொண்டு வாசிக்கத் தெரியவில்லை. பத்திலிருந்து 16 வயது வரம்பு கொண்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் பள்ளியிலிருந்து விலகிக்கொண்டுவிடுகிறார்கள். இத்தனைக்கும் பாக்.கில் கல்வி இலவசம், கட்டாயமும் கூட. ஆனால் விலைவாசி பிரச்னையில் குழந்தைகளும் தப்பவில்லை.  லையாரி டவுனின் தெருக்களில் ஐஸ்பெட்டி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் இளைஞர் பெயர் முகமது நோமன். இவர் கஹானி சவாரி எனு...

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசி...

2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!

படம்
  பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு? காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.  GHOSTING ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்த...

மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்

படம்
 தாவோ தே ஜிங் லாவோட்சு தமிழில் சந்தியா நடராஜன்  159 பக்கங்கள் இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது.  தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது.  சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிப...

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW

டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!

படம்
  ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள். தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள். ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்க...

டாமினன்ட் ஆட்களை புரிந்துகொள்வது எப்படி?

படம்
டாமினன்ட்/ சப்மிஸிவ் என இரண்டு வகையான உறவு உள்ளது. டாமினன்ட் என்பதை ஆதிக்கவாதி, சப்மிஸிவ் என்பதை அடிமை என்றும் குறிப்பிடலாம். பிடிஎஸ்எம் உறவு முறையில் இதுபோல இருவர் வாழ்வது உண்டு. இந்த உறவு, இருவரும் ஏற்றுக்கொண்டுதான் தொடங்குகிறது. இதில் ஆதிக்கவாதி என்று கூறுபவர், ஆதிக்கம் செலுத்துவார். இவரை அடிமை பின்தொடர்கிறார். ஆதிக்கவாதி என்பவர் எப்படி இருப்பார், அவரது குணம் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அந்தளவு எளிதாக அவரை கண்டறிய முடியாது. அவருக்கு அதிகாரம் தேவை. அதை பிறர் மீது பயன்படுத்துவார் என உடனே நினைக்காதீர்கள். தன்னுடைய வாழ்க்கை, சூழல், தானுள்ள இடம் என அனைத்திலும் கையில் லகானைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியென்றால் இப்படியான ஆள் சைக்கோபாத்தோ என உளவியல் ஆய்வு செய்ய நினைக்க கூடாது. அப்படி சோதனை செய்து லேபிள் குத்துவதை ஆதிக்கவாதி ஆட்கள் விரும்புவதில்லை. ஒருவரின் அடிமனதில் உள்ள கோபத்தை, வன்மத்தை வெளியே கொண்டு வர பெரிய சிரமங்கள் ஏதும் படவேண்டியதில்லை. அவருக்கு செய்யும் செயலில், இருக்கும் இடத்தில் கூடுதல் அதிகாரம் கொடுத்தால் போதும். உள்ளிருக்கும் பொய், புரட்டுகள்,மோசடித்தனங்கள...

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

படம்
  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என கேள்வி கேட்காத மனங்களே உலகில் இருக்காது. அந்தளவு சோகங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அதை நினைத்தே வருந்துவது, தாழ்வுணர்ச்சி கொள்வது, விரக்தியாக சுற்றுவது, குடிக்கு அடிமையாவது எல்லாம் நடக்கிறது. உண்மையில் இப்படி நடக்கும் சோகமான விஷயங்களை நேரடியான ஒருவரின் குணம், அதிர்ஷடம் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்மறையாக நினைப்பதே நடக்கிறது.  உலகில் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கிறது. கெட்டவர்களுக்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என நிறைய மக்கள் முன்முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, வாழ்க்கையின் போக்கில் நடைபெறும் கருத்துக்கு மாறான ஒரு சம்பவத்தைக் கூட அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதில் இன்னும் அபாயகரமான விஷயமாக மன அழுத்தம் முற்றி தற்கொலை வரை செல்வதுதான். இதைப் பற்றி விளக்கி மக்களுக்கு சிகிச்சை செய்த உளவியலாளர்தான் டோரத்தி ரோவே.  வேலை இழப்பு, புயல் சேதம், பெற்றோர் இறந்துபோவது என சம்பவங்கள் நடப்பதற்கு தனிநபரை குற்றவாளியாக்க முடியாது. அதை அவரே மனதிற்கு அருகில் வைத்துக்கொண்டு கவலைப்படு...

உலகை புதிய கோணத்தில் பார்க்க வலியுறுத்திய உளவியலாளர் - டிமோத்தி லேரி

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர் டிமோத்தி லேரி. இவர் 1960ஆம் ஆண்டு டர்ன் ஆன், ட்யூன் இன், ட்ராப் அவுட் எனும் கொள்கை ஒன்றை உருவாக்கி பிரபலப்படுத்தினார். ஆனால் இந்த கொள்கை வாழ்க்கை பற்றிய புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இதை அன்றைக்கு தவறாக புரிந்துகொண்டவர்களே அதிகம்.  மேலே சொன்ன வரிசைப்படி ஒருவர் தனது வாழ்வை பின்பற்றவேண்டும் என டிமோத்தி கூறவில்லை. அது ஒரு வரிசை முறை. ஒட்டுமொத்த சமூகமும் அரசியலால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அதை ஒருவர் தூய்மை செய்யவேண்டும். மையச் சமூகத்தில் இருந்து எந்த கருத்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் சுயசிந்தனையோடு வாழப் பழகவேண்டும். இந்த அடிப்படையில்தான் அவர் ட்ராப் அவுட் என்ற வார்த்தையைக் கூறினார். ஆனால் மக்கள் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டு விலகவேண்டும் என்று புரிந்துகொண்டனர். அப்படியான அர்த்தத்தில் அவர் கூறவில்லை.  டர்ன் ஆன் என்ற வார்த்தையை ஒருவர் தன்னுணர்வு நிலையை உணர்ந்து யதார்த்த நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அத்தகையை நிலைக்கு மனித மனத்தை கொண்டு வர போதைப்பொருட்களை பயன்படுத்த கூறினார். எல்எஸ்டி என்ற ம...

நடைபெறும் அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது!

படம்
  கிரேக்க தத்துவவாதியான எபிக்டெட்டஸ், மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதைபற்றிய பார்வைகளால் கோணங்களால்தான் துயரத்தை சந்திக்க நேருகிறது என்று கூறினார். அதே சிந்தனையை அப்படியே உளவியலுக்கு மாற்றி கூறியவர் உளவியலாளர் ஆல்பெர்ட் எல்லிஸ். இவர். 1955ஆம்ஆண்டு ரெப்ட் என்ற சிகிச்சையை தான் நம்பிய கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். ஒரு மனிதர் சந்திக்கும அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது. ஆனால், மனிதர்கள் அதை எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அதன்படி அனுபவம் அமைகிறது.  நாற்பது, ஐம்பதுகளில் எல்லிஸ் தனது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆய்வு செய்தார். அவர்கள், தங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்று தீர்ந்தால் இன்னொன்றை அதே இடத்திற்கு கொண்டு வந்து வருந்திக்கொண்டு இருந்தனர். எனவே,இதற்கு சிகிச்சை என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் என எல்லிஸ் முடிவு செய்தார். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம். ஒருவரை திடீரென வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு அலுவலக குழு அரசியல், ஒருப...

வதை முகாமில் மூன்று ஆண்டுகள் சித்திரவதைகள் அனுபவித்து உளவியல் கொள்கைகளை உருவாக்கிய விக்டர் பிராங்கல்!

படம்
  வியட்நாமைச் சேர்ந்த உளவியலாளர் விக்டர் ஃபிராங்கல். மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தடுப்பது ஆகியவற்றில் புகழ்பெற்ற வல்லுநர். 1942ஆம் ஆண்டு விக்டர் அவரது மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகியோர் நாஜிகளின் வதை முகாமுக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்டுகள் கடுமையான சித்திரவதையில் உயிர் பிழைத்தவர் விக்டர் மட்டுமே. 1946ஆம் ஆண்டு மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் என்ற நூலை தனது வதை முகாம் அனுபவங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதினார். மனிதர்களுக்கு இரண்டுவிதமான மனநிலைகள் உண்டு. அவை வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு துயரமான சூழ்நிலையைக் கடந்து வாழ்க்கையை வாழ உதவுகிறது. முடிவெடுக்க உதவுவதோடு, சுதந்திரமான இயல்பையும் உருவாக்கித் தருகிறது. நம்மைச்சுற்றி நடைபெறும் சூழ்நிலைகள் மூலம் நாம் எப்படி மாற்றம் பெறுகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதற்கு சூழலின், பிறரின் கருணையை எதிர்பார்க்க வேண்டியதில்லை என விக்டர் கூறினார்.  விக்டரிடம் ஆலோசனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு கவலை அவர் இறப்பது பற்றியல்ல. அவர் இறந்த மனைவியை நினைத்து வருந்தினார். அவரிடம் விக்டர், உங்கள் மனைவிக்கு  முன்னரே  நீங்கள...

வாழ்க்கையின் நோக்கத்தை தேடும் மனிதர்களின் பயணம்!

படம்
  ஒருவரின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் எதற்காக பிறந்தோம், எதற்காக இந்த வாழ்க்கை என்று தோன்றும். இந்தக் கேள்விகளுக்கு எதற்கு ஒருவர் பதில்களை தேடுகிறார்? அப்போதுதான் அவர் தன்னை எது திருப்திபடுத்துகிறது, எங்கு குழப்பம் ஏற்படுகிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். உணவு, தூக்கம், பாலுறவு என்பதெல்லாம் ஒருவரின் அடிப்படையான தேவைகள். இதெல்லாம் தாண்டி மனதில் ஏற்படும் திருப்தி உணர்வு என்பது முக்கியமானது. அதை அடையாதவர்கள், எதனால் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று அறிய முயன்று அலைந்துகொண்டே இருப்பார்கள்.  இருபதாம் நூற்றாண்டில் மேற்சொன்ன விஷயங்கள் புதுவிதமான சூழ்நிலையில் வந்து நின்றன. உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, மனிதநேயம் கொண்ட உளவியல் முறையை அறிமுகப்படுத்தினார். இதில் காதல், நம்பிக்கை, உண்மை, ஆன்மிகம், தனித்துவம், இருத்தல் என அனைத்துமே உண்டு. இந்த முறை மூலம் ஒருவர் தன்னுணர்வு நிலையைத் தொட்டு தன்னை உணர முடியும். மனிதர்களின் தேவைகளை பிரமிடு வடிவில் உருவாக்கினார். அதில் ஒருவரின் அவசிய தேவைகள், அறிவுசார் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் என அனைத்துமே இடம்பெற்றிருந்தன. ஒருவருக்கான அவச...

வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

படம்
  வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை.  இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்...