இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசிரியருட

2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!

படம்
  பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு? காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.  GHOSTING ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்தள கணக்கு,

மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்

படம்
 தாவோ தே ஜிங் லாவோட்சு தமிழில் சந்தியா நடராஜன்  159 பக்கங்கள் இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது.  தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது.  சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிபெயர்ப்பு பாடலைப் பட

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW

டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!

படம்
  ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள். தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள். ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்க

டாமினன்ட் ஆட்களை புரிந்துகொள்வது எப்படி?

படம்
டாமினன்ட்/ சப்மிஸிவ் என இரண்டு வகையான உறவு உள்ளது. டாமினன்ட் என்பதை ஆதிக்கவாதி, சப்மிஸிவ் என்பதை அடிமை என்றும் குறிப்பிடலாம். பிடிஎஸ்எம் உறவு முறையில் இதுபோல இருவர் வாழ்வது உண்டு. இந்த உறவு, இருவரும் ஏற்றுக்கொண்டுதான் தொடங்குகிறது. இதில் ஆதிக்கவாதி என்று கூறுபவர், ஆதிக்கம் செலுத்துவார். இவரை அடிமை பின்தொடர்கிறார். ஆதிக்கவாதி என்பவர் எப்படி இருப்பார், அவரது குணம் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அந்தளவு எளிதாக அவரை கண்டறிய முடியாது. அவருக்கு அதிகாரம் தேவை. அதை பிறர் மீது பயன்படுத்துவார் என உடனே நினைக்காதீர்கள். தன்னுடைய வாழ்க்கை, சூழல், தானுள்ள இடம் என அனைத்திலும் கையில் லகானைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியென்றால் இப்படியான ஆள் சைக்கோபாத்தோ என உளவியல் ஆய்வு செய்ய நினைக்க கூடாது. அப்படி சோதனை செய்து லேபிள் குத்துவதை ஆதிக்கவாதி ஆட்கள் விரும்புவதில்லை. ஒருவரின் அடிமனதில் உள்ள கோபத்தை, வன்மத்தை வெளியே கொண்டு வர பெரிய சிரமங்கள் ஏதும் படவேண்டியதில்லை. அவருக்கு செய்யும் செயலில், இருக்கும் இடத்தில் கூடுதல் அதிகாரம் கொடுத்தால் போதும். உள்ளிருக்கும் பொய், புரட்டுகள்,மோசடித்தனங்கள

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

படம்
  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என கேள்வி கேட்காத மனங்களே உலகில் இருக்காது. அந்தளவு சோகங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அதை நினைத்தே வருந்துவது, தாழ்வுணர்ச்சி கொள்வது, விரக்தியாக சுற்றுவது, குடிக்கு அடிமையாவது எல்லாம் நடக்கிறது. உண்மையில் இப்படி நடக்கும் சோகமான விஷயங்களை நேரடியான ஒருவரின் குணம், அதிர்ஷடம் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்மறையாக நினைப்பதே நடக்கிறது.  உலகில் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கிறது. கெட்டவர்களுக்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என நிறைய மக்கள் முன்முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, வாழ்க்கையின் போக்கில் நடைபெறும் கருத்துக்கு மாறான ஒரு சம்பவத்தைக் கூட அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதில் இன்னும் அபாயகரமான விஷயமாக மன அழுத்தம் முற்றி தற்கொலை வரை செல்வதுதான். இதைப் பற்றி விளக்கி மக்களுக்கு சிகிச்சை செய்த உளவியலாளர்தான் டோரத்தி ரோவே.  வேலை இழப்பு, புயல் சேதம், பெற்றோர் இறந்துபோவது என சம்பவங்கள் நடப்பதற்கு தனிநபரை குற்றவாளியாக்க முடியாது. அதை அவரே மனதிற்கு அருகில் வைத்துக்கொண்டு கவலைப்படுவது தவறு. இதில

உலகை புதிய கோணத்தில் பார்க்க வலியுறுத்திய உளவியலாளர் - டிமோத்தி லேரி

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உளவியலாளர் டிமோத்தி லேரி. இவர் 1960ஆம் ஆண்டு டர்ன் ஆன், ட்யூன் இன், ட்ராப் அவுட் எனும் கொள்கை ஒன்றை உருவாக்கி பிரபலப்படுத்தினார். ஆனால் இந்த கொள்கை வாழ்க்கை பற்றிய புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது. இதை அன்றைக்கு தவறாக புரிந்துகொண்டவர்களே அதிகம்.  மேலே சொன்ன வரிசைப்படி ஒருவர் தனது வாழ்வை பின்பற்றவேண்டும் என டிமோத்தி கூறவில்லை. அது ஒரு வரிசை முறை. ஒட்டுமொத்த சமூகமும் அரசியலால் களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அதை ஒருவர் தூய்மை செய்யவேண்டும். மையச் சமூகத்தில் இருந்து எந்த கருத்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் சுயசிந்தனையோடு வாழப் பழகவேண்டும். இந்த அடிப்படையில்தான் அவர் ட்ராப் அவுட் என்ற வார்த்தையைக் கூறினார். ஆனால் மக்கள் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டு விலகவேண்டும் என்று புரிந்துகொண்டனர். அப்படியான அர்த்தத்தில் அவர் கூறவில்லை.  டர்ன் ஆன் என்ற வார்த்தையை ஒருவர் தன்னுணர்வு நிலையை உணர்ந்து யதார்த்த நிலையை புரிந்துகொள்ளவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அத்தகையை நிலைக்கு மனித மனத்தை கொண்டு வர போதைப்பொருட்களை பயன்படுத்த கூறினார். எல்எஸ்டி என்ற மாயக்காட்சிகளை

நடைபெறும் அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது!

படம்
  கிரேக்க தத்துவவாதியான எபிக்டெட்டஸ், மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதைபற்றிய பார்வைகளால் கோணங்களால்தான் துயரத்தை சந்திக்க நேருகிறது என்று கூறினார். அதே சிந்தனையை அப்படியே உளவியலுக்கு மாற்றி கூறியவர் உளவியலாளர் ஆல்பெர்ட் எல்லிஸ். இவர். 1955ஆம்ஆண்டு ரெப்ட் என்ற சிகிச்சையை தான் நம்பிய கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார். ஒரு மனிதர் சந்திக்கும அனுபவத்திற்கு நல்லது கெட்டது என்ற இயல்பு கிடையாது. ஆனால், மனிதர்கள் அதை எப்படி பார்க்க விரும்புகிறார்களோ அதன்படி அனுபவம் அமைகிறது.  நாற்பது, ஐம்பதுகளில் எல்லிஸ் தனது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆய்வு செய்தார். அவர்கள், தங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்று தீர்ந்தால் இன்னொன்றை அதே இடத்திற்கு கொண்டு வந்து வருந்திக்கொண்டு இருந்தனர். எனவே,இதற்கு சிகிச்சை என்பது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பதுதான் என எல்லிஸ் முடிவு செய்தார். இதற்கு ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம். ஒருவரை திடீரென வேலையில் இருந்து நீக்குகிறார்கள். இதற்கு அலுவலக குழு அரசியல், ஒருபக்க சார்ப

வதை முகாமில் மூன்று ஆண்டுகள் சித்திரவதைகள் அனுபவித்து உளவியல் கொள்கைகளை உருவாக்கிய விக்டர் பிராங்கல்!

படம்
  வியட்நாமைச் சேர்ந்த உளவியலாளர் விக்டர் ஃபிராங்கல். மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தடுப்பது ஆகியவற்றில் புகழ்பெற்ற வல்லுநர். 1942ஆம் ஆண்டு விக்டர் அவரது மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகியோர் நாஜிகளின் வதை முகாமுக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்டுகள் கடுமையான சித்திரவதையில் உயிர் பிழைத்தவர் விக்டர் மட்டுமே. 1946ஆம் ஆண்டு மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் என்ற நூலை தனது வதை முகாம் அனுபவங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதினார். மனிதர்களுக்கு இரண்டுவிதமான மனநிலைகள் உண்டு. அவை வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு துயரமான சூழ்நிலையைக் கடந்து வாழ்க்கையை வாழ உதவுகிறது. முடிவெடுக்க உதவுவதோடு, சுதந்திரமான இயல்பையும் உருவாக்கித் தருகிறது. நம்மைச்சுற்றி நடைபெறும் சூழ்நிலைகள் மூலம் நாம் எப்படி மாற்றம் பெறுகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதற்கு சூழலின், பிறரின் கருணையை எதிர்பார்க்க வேண்டியதில்லை என விக்டர் கூறினார்.  விக்டரிடம் ஆலோசனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு கவலை அவர் இறப்பது பற்றியல்ல. அவர் இறந்த மனைவியை நினைத்து வருந்தினார். அவரிடம் விக்டர், உங்கள் மனைவிக்கு  முன்னரே  நீங்கள் இறந்துபோனால் என்ன

வாழ்க்கையின் நோக்கத்தை தேடும் மனிதர்களின் பயணம்!

படம்
  ஒருவரின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் எதற்காக பிறந்தோம், எதற்காக இந்த வாழ்க்கை என்று தோன்றும். இந்தக் கேள்விகளுக்கு எதற்கு ஒருவர் பதில்களை தேடுகிறார்? அப்போதுதான் அவர் தன்னை எது திருப்திபடுத்துகிறது, எங்கு குழப்பம் ஏற்படுகிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். உணவு, தூக்கம், பாலுறவு என்பதெல்லாம் ஒருவரின் அடிப்படையான தேவைகள். இதெல்லாம் தாண்டி மனதில் ஏற்படும் திருப்தி உணர்வு என்பது முக்கியமானது. அதை அடையாதவர்கள், எதனால் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று அறிய முயன்று அலைந்துகொண்டே இருப்பார்கள்.  இருபதாம் நூற்றாண்டில் மேற்சொன்ன விஷயங்கள் புதுவிதமான சூழ்நிலையில் வந்து நின்றன. உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, மனிதநேயம் கொண்ட உளவியல் முறையை அறிமுகப்படுத்தினார். இதில் காதல், நம்பிக்கை, உண்மை, ஆன்மிகம், தனித்துவம், இருத்தல் என அனைத்துமே உண்டு. இந்த முறை மூலம் ஒருவர் தன்னுணர்வு நிலையைத் தொட்டு தன்னை உணர முடியும். மனிதர்களின் தேவைகளை பிரமிடு வடிவில் உருவாக்கினார். அதில் ஒருவரின் அவசிய தேவைகள், அறிவுசார் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் என அனைத்துமே இடம்பெற்றிருந்தன. ஒருவருக்கான அவசியத் தேவை

வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

படம்
  வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை.  இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்ப வாழ தன்

ஒரு குழந்தையை வளர்க்கும் மூன்று திருமணமாகாத இளைஞர்கள்!

படம்
    த்ரீ டாட்ஸ் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி   ஜப்பான் டிராமா. மூன்று திருமணமாகாத இளைஞர்கள். இருவர் கார்ப்பரேட் அலுவலகம் செல்லும் ஆட்கள். இதில்,   ஒருவர் மட்டும் எந்த சேமிப்பும் இல்லாமல் பெரிய கனவு இல்லாமல் வாழும் ஆள். அவர்தான் டக்குன். தொடருக்கு அவர்தான் நாயகன். எந்த நேர்த்தியும் ஆபீசுக்கு லேட்டாக போவது, மேனேஜரிடம் திட்டு வாங்குவது, குட்டைப்பாவாடை அணிந்த பெண்களின் கால்களுக்கு கீழ் ஃபைலை தவறவிட்டு தேடுவது என அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் செய்கிறார். இவரைப் போலவே ஆபீஸ் போகும் இன்னொருவருக்கு கல்யாணம் கூட நிச்சயமாகிவிடுகிறது. அடுத்து, உடைகளை தைத்து விற்கும் ஃபேஷன் டிசைனர் ஒருவர். இவர் பிறர் வணக்கம் சொன்னால் கூட பதிலுக்கு சொல்லாமல் அமைதியாக செல்லக்கூடியவர். இந்த நேரத்தில் அவர்கள் தங்கியுள்ள அறையில் ஒரு இளம்பெண் நுழைந்து குழந்தை ஒன்றை வைத்துவிட்டு சென்றுவிடுகிறாள். அதில் இந்த குழந்தை உன்னுடைய குழந்தை என்று எழுதியிருக்கிற ஒரே ஒரு துண்டுச்சீட்டு. மூவருக்கும் எக்ஸ் காதலிகள் உண்டு. யார் கர்ப்பமாக இருந்தார் என யாருக்கும் திட்டமாக தெரியவில்லை. இந்த லட்சணத்தில் யாருடைய குழந்தை என்

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்கு, 2.4 பில்லி

வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் விக்டர் காமெஸி ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள். சானென் 3 ஆகஸ்ட் 1975   கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்   உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில் பயணித்து செல்

புலனுணர்வு சார்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாதது, வெறுமையானது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்கள் வாழ்வதற்கான பொருள்தான் என்ன? நீங்கள் இதற்கான பதிலைத் தேடாமல் இருக்கலாம். அதை புறக்கணிக்கலாம். இருபது அல்லது முப்பது ஆண்டுகளை செலவழித்து இயற்பியல், தத்துவம், சமூகவியல், உளவியல் என பலவேறு துறை சார்ந்த விஷயங்களைக் கற்கலாம். ஆனால், ஒருநாளை அல்லது ஒரு மணிநேரத்தைப் பயன்படுத்தி நீங்கள் யார், எதற்காக இங்கு வாழ்கிறீர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புவதில்லை. ஐஐடி பாம்பே 7 பிப்ரவரி 1984 வொய் ஆர் யூ பீயிங் எஜூகேட்டட்?   நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக்கொண்டு இருக்கிறோமா? பல்வேறு தொழில் சார்ந்த துறைகளில் ஒட்டுமொத்த ஆற்றலையும் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற அர்த்தத்தில் இதைக் கூறுகிறேன். நம் முழு இருப்பையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோமா?   நான் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். அதுதான் பெரிய சந்தோஷம். அல்லது உங்களுக்கு உள்ள திறமை என்பது ஒரு பரிசு. அதை ஆன்மிக வாழ்க்கைக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, அதை குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்.   குறிப்பிட்ட துறையில் திறமையைப் பயன்படுத்துவது என்பது துண்டுகளாக ஒருவரின் ஆற்றலை சிதறடிப்பது. எனவே நீங்கள்

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்

வாழ்க்கை, தொழில் என இரண்டிலும் வாகை சூடுவதற்கான வழிகாட்டி நூல்!

படம்
  ரியோ ஒகாவா நூல் வாகை சூடும் சிந்தனை ரியோ ஒகாவா ஜெய்ஹோ தமிழாக்கம் – மிஸ்டிக் ரைட் நிறுவனம்     நான் நன்றாக இருக்கிறேன் என்ற புத்தகம் ரியோ எழுதியதுதான். பக்கம் 85. நூல் சற்று சிறியது. கருத்துக்களும் அதனால் சிறியதோ என்று தோன்றும்படி நூலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த நூலோடு ஒப்பிடும்போது வாகை சூடும் சிந்தனை சொல்லும் கருத்துகள் அடிப்படையில் சற்று மேம்பட்ட சுய முன்னேற்ற நூல் எனலாம், ஹேப்பி சயின்ஸ் ஆன்மிக மத தலைவர் ஆற்றிய நான்கு உரைகளை தொகுத்து ‘வாகை சூடும் சிந்தனை’ என நூலாக்கியிருக்கிறார்கள். இப்படி நூலாக்குவதில் உள்ள நுட்பம் பற்றியும் ரியோ, பேசியுள்ளார். ஆனால், அது எந்தளவு சரி என்பதை வாசகர்கள்தான் படித்து புரிந்துகொள்ளவேண்டும். பானாசோனிக் நிறுவனத்தின் நிர்வாக முறை. குழாய் தண்ணீர் தத்துவத்தை எப்படி கடைபிடித்து நிறுவனம் மின்சாதனங்களை விற்றது என்பது படிக்க நன்றாக இருந்தது. இன்று அந்த தத்துவத்திற்கு என்ன மதிப்பு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுத்திய காலம் முக்கியமானது. குறிப்பிட்ட பதவி, அதிகாரம் கிடைத்தபிறகு நாம் எப்படி செயல்படவேண்டுமென ர