இடுகைகள்

மான்சான்டோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியங்களின் காந்தி - வந்தனா சிவா!

படம்
      இயற்கை செயல்பாட்டாளர் டாக்டர் வந்தனா சிவா    உலகிற்கே ஆபத்து மான்சான்டோ வடிவில் வருகிறது என்று சொன்ன துணிச்சலான இயற்கை செயல்பாட்டாளர் வந்தனா சிவா. மான்சான்டோவின் தற்போதைய பெயர் பேயர். பெயர் மாறினாலும் இவர்களின் விவசாய பேராசையும், வணிகமய புத்தியும் மாறவில்லை. இதற்கு எதிராக வந்தனா சிவா போராடி வருகிறார். இன்றைய விவசாயத்தில் பெரு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து அதனை வன்முறையாக்கி உள்ளனர் என பேசி வருகிறார்.  வந்தனா சிவா உலக மய கொள்கைகளுக்கு எதிராகவும் உணவு தற்சார்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் வந்தனா சிவா. மரபணு பொறியியல் பற்றிய படிப்பை படித்த வந்தனா சிவா, 1960ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய பசுமை புரட்சி அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்றுவரை தீவிரமாக விமர்சித்தும் அதற்கான தீர்வுகளை முன்வைத்தும் வருகிறார். மரபணுமாற்ற பயிர்களை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார்.  1991ஆம் ஆண்டு நவதான்யா எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதன் பொருள் ஒன்பது தானியங்கள் என்பதாகும். பெரு நிறுவனங்கள் குறிப்பிட்ட பணப்பயிர்களை மட்டுமே விவசாயிகளை விதைக்க கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலை வேளாண் சூழலை கெடுக்கும்

மரபணுமாற்ற அரிசியால் மாட்டிக்கொண்ட இந்திய அரசு!

படம்
  மரபணுமாற்ற பயிர் அண்மையில் பிரான்சில் அரிசிமாவு வணிகர், இந்தியாவிலுருந்து நொய்யரிசி 500 டன்களை வாங்கியிருக்கிறார். அதில் மரபணுமாற்ற சமாச்சாரங்கள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த அரிசியை ஏற்றுமதி செய்தவர், மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர் ஒருவர். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற பொருட்களை விற்பதற்கு பயன்படுத்த தடை உள்ளது. எனவே, இந்திய வணிகர் மரபணு மாற்ற பொருட்கள் இல்லை என்று சொல்லி அதற்கான சான்றிதழை வாங்கி இணைத்துத்தான் அனுப்பியிருக்கிறார். அப்படியிருந்தும் சோதனையில் மரபணுமாற்ற பொருட்கள் சிக்கியிருக்கின்றன.  அரிசியை அரைத்து மாவாக்கி அதனை மிட்டாய், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பேக்கரி உணவுகளை தயராக்கின்றனர்.  இந்தியா அரிசி விற்பனையில் முன்னிலை வகிக்கும் நாடு. கடந்த ஆண்டு 18 டன்களுக்கு தானியங்களை விற்று 65 ஆயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. இதில் வருமானம் பெற்றுத்தந்தது பாஸ்மதி அரிசிதான். இந்த அரிசியை மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்கள் நேபாளம், வங்கதேசம், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்கின்ற

உலகின் முக்கியமான நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள்!

படம்
நெற்பயிர் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆசிய நாடுகளில் பெருமளவு நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரிசி வகை உணவுகள் இங்கு அதிகம்.  ஆனால் காலப்போக்கில் பல்வேறு மரபு அரிசி வகைகளில் மகசூல் குறைவு , சத்துக்கள் பற்றாக்குறைவு, பருவநிலை வேறுபாடுகள் ஆகிய பிரச்னைகள் எழுந்தன. இதனால், பல்வேறு நாடுகளின் அரசும் இதற்கான ஆராய்ச்சிக்கு உதவின.  அரிசியில் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளை மரபணு மாற்ற முறையில் சேர்க்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். இப்படி கிடைத்த அரிசி ரகங்களால் உணவு உற்பத்தி அதிகரித்தது. இன்றும் அரிசியில் பல்வேறு விட்டமின்களைச் சேர்க்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்படி ஆராய்ச்சி செய்து வரும் முக்கிய நிறுவனங்களைப் பார்ப்போம்.  சுவிட்சர்லாந்து ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Swiss Federal Institute of Technology (Zurich))  1855ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம்.  உணவுப்பயிர்களில் இரும்புச் சத்தைச் சேர்த்து அதனை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாற்ற முயன்று வருகிறது. இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து மற்றும்  பீட்டா