இடுகைகள்

தேசியபாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

படம்
            கோவிந்த் மாத்தூர் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே ? நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் . நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும் . நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான் . இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன . ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன . நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே ? உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம் . அதில் எந்த தவறும் இல்லை . நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன . தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி . பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ? அவர்களின் பணி என்ன ? அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான