இடுகைகள்

கு.ப.ராஜகோபாலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படித்த பெண்ணால் களேபரமாகும் கல்யாணம்! - வேரோட்டம் - கு.ப.ரா

படம்
  வேரோட்டம்  முற்றுப்பெறாத குறுநாவல் கு.ப.ராஜகோபாலன் சென்னையில் கல்லூரியில் படிக்கும் திருவெழுந்தூர் பையனும், தஞ்சாவூர் பெண்ணும் காதல் வலையில் விழுகிறார்கள். இருவருமே பிராமணர்கள்தான். ஆனால் திருமணம் செய்வதில் பிரச்னை எழுகிறது. அதனை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை.  சந்திரசேகரன், கல்லூரியில் புகழ்பெற்ற ஆள். போட்டிகளில் கலந்துகொள்வது, படிப்பது என அனைத்திலும் முன்னணியில் நிற்பவன். அவன் மீது காதல் வயப்படும் பெண்களை அவன் பெரிதாக மதிப்பது கிடையாது. அப்படியிருந்தும் லலிதா என்ற பெண் அவன் போகும் இடமெல்லாம் வந்து என்னைப் பாரேன், என் அழகைப் பாரேன் என்று மௌனமாக மிரட்டுகிறாள்.  லலிதாவைப் பொறுத்தவரை கல்லூரில் உள்ள பெரும்பாலான ஆட்கள் தனது அழகுக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமை. ஆனால் சந்திரசேகரன் இவளை கண்டுகொள்ளவே இல்லை என்றதும் அவளது ஈகோ காயம்படுகிறது. அப்படியென்ன அவனுக்கு ஆணவம் என அவனைப் பின்தொடர்கிறாள். இப்படி நாம் இருவரின் மனவோட்டத்தை புரிந்துகொள்வது கதாபாத்திரங்களில் பெயர்கள், அதற்குப்பிறகு மனவோட்டம் என எழுதப்பட்டுள்ளது.  தஞ்சாவூர், திருவெழுந்தூர் கல்யாண பஞ்சாயத்துகள் கடித வடிவில்