இடுகைகள்

மதவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சர்வதேசியவாதி நூலில் இருந்து

 நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது.  ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம்.  காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும்.  இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...

ஜவகர்லால் நேரு சொன்னவை....

படம்
  ஜவகர்லால் நேரு சொன்னவை.... 1.நான் மதவெறியை விரும்பாதவன். அது பலவீனமடைந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்புவாதம் எந்த வடிவில் அல்லது உருவத்தில் வந்தாலும் அதையும் நான் விரும்பாதவன்.  2.எந்தக் கொடியைச் சுற்றி நீங்கள் திரண்டு நிற்கிறீர்களோ, நீங்கள் வணக்கம் செலுத்துகிறீர்களோ, அந்தக் கொடி எந்த சமூகத்தையும் சேர்ந்ததல்ல. இது தாய்நாட்டின் திருக்கொடி.  3.நான் சோஷலிஸ்டு, ஒரு குடியரசுவாதி என்பதை மறைக்காமல் கூறவேண்டும். அரசர்கள், மன்னர்களைக் கொண்ட அமைப்பை அல்லது தொழில்துறை அரசர்களை உருவாக்குகின்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4.பண்டைக்கால அரசர்களைக் காட்டிலும் தொழில் அரசர்கள் மக்களின் வாழ்க்கையையும் விதிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் அதிகமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்கார முறைகளையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.  5.சிறுபான்மையினருடைய பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஆபத்து ஏற்படாது என்று நமது பேச்சு மற்றும் செயல்கள் மூலம் முழுமையாக உறுதியளிக்க வேண்டும் என்பதை மட்டும் நான் மீண்டும் வலியுறுத்துவேன். 6. யாருடைய நன்மைக்காக தொழில் நடைபெறவேண்டும், யாருடைய ந...

தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...

பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!

 பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பி ஆர் அம்பேத்கர் தமிழில் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார்.  நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.  நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சா...

இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!

படம்
  இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள்.  எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை.  மற்றப...

ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்!

படம்
  ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்! நீங்கள் வரலாற்றை வலதுசாரி,மதவாதப் பார்வையில் பார்க்க வேண்டுமா அதற்கு கீழேயுள்ள நூல்கள் பல்வேறு தகவல்களை வழங்கும். இந்துத்துவா பார்வையில் உலகைப் பார்க்க தொன்மை வரலாற்று நூல்கள் உதவும். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொன்மை இந்தியா அதாவது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் இருந்த வேதகாலம் எப்படி பொற்காலமாக இருந்தது என்பதை நூல்களாக எழுத மாணவர்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இப்படியான எழுத்தாளர்கள்தான் நேஷனல் புக் டிரஸ்டில் வரலாற்று நூல்களை எழுதி வருகிறார்கள்.  என்பிடி ஒரு அரசு நிறுவனம், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனத்தை ஆர்எஸ்எஸ் ஆட்களை வைத்து வளைத்து வரலாற்றை திருத்தி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களையும் வலதுசாரிகள் வாசித்தால் குறைந்தபட்சம், டிவி விவாதங்களிலாவது உருப்படியாக ஏதாவது பேசித்தொலைய வாய்ப்புண்டு. இந்த நூல்பட்டியலை பரிந்துரைத்தவர் புகழ்பெற்ற நாளிதழ் ஆசிரியர் ஒருவர்.  நாம் குறிப்பிட்ட பார்வையை கோணத்தை உறுதி செய்துகொண்டு எந்த ந...

சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

படம்
  சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? அனைத்து விதிகளையும் சட்டங்களையும் சர்வாதிகார அரசு உடைத்தெறியும் என சட்ட கோட்பாட்டாளர் கார்ல் ஸமிட்ச்ட் கூறினார். நாட்டை நிரந்தரமான அவசர நிலைமையில் வைத்திருக்க முயல்கின்றனர். அப்போதுதான் குடிமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக, அடிப்படை சுதந்திரத்தை விலைபேச முன்வருவார்கள். தீவிரவாதம் பற்றி இன்றைக்கு நிறைய ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மக்கள் அதை நம்பி விடக்கூடாது. அதில் எந்த உ்ணமையும் இல்லை. அடிப்படை உரிமைகளை இழந்தால் அரசு கொடுப்பதாக கூறும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதும் நடைபெறுவதுண்டு. அதிகாரத்திற்கு கீழ்ப்படிவது சற்று இணக்கமான பாதுகாப்பான தன்மையை ஏற்படுத்துகிறது. சுதந்திரம், பாதுகாப்பு என இரண்டையும் இழந்துவிடுகிறோம். பாசிஸ்ட் ஒருவருக்கு வாக்களித்தால், மோசமான நிலையே கிடைக்கும். சர்வாதிகாரிகள், பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி பேசும்போதெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள், தங்களுடைய கருத்துகளை எதிர்ப்பவர்களை, விமர்சனம் செய்பவர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

அரசுக்கு ஆதரவான ஊக்கமருந்து செலுத்திக்கொண்டு மண்டியிட்ட இந்திய ஊடகங்கள்!

படம்
      ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு மண்டியிட்ட ஊடகங்கள் இக்கட்டுரையின் தலைப்புக்கு இந்திய கேலிச்சித்திரக்கலைஞர் வரைந்த சித்திரம் ஒன்றுதான் காரணம். தொடக்க காலத்தில் இந்தியாவில் கேள்விகளை நேர்மையாக கேட்பதும், புலனாய்வு செய்திகளை வெளியிடுவதும் இயல்பாக நடந்து வந்தது. ஆனால், இப்போதோ ஊடகங்கள் முழுக்க அரசு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்யும் கைப்பாவையாக, மடியில் அமர்ந்துகொள்ளும் நாய்க்குட்டிகள் போல மாறிவிட்டன. இந்தியாவில் ஒருகாலத்தில் பிரதமர் செய்த ஊழல்களை வெளிப்படையாக பத்திரிகைகளில் எழுதி, அதன் பொருட்டு ஆட்சி மாற்றம் நடந்ததெல்லாம் உண்டு. நடக்கவிருந்த தேர்தலின் முடிவு கூட மாறியது. இதையெல்லாம் அந்தக்காலம் என்று சொல்வதன் அர்த்தம், இன்று ஊடகங்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அதை யாரும் நம்புவதும் இல்லை. மரியாதையும்கூட முன்பைப்போல இல்லை. இன்று மதவாத பிரதமருக்கு நெருக்கமாக உள்ள வணிகர், அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்தார் என குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் அதைப்பற்றி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. அப்படியொரு அமைதி நிலவியது. இதையெல்லாம் கடந்த நாற்பது ஆண்டு...

2025ஆம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

படம்
  புதிய எதிர்பார்ப்புகள் 2024ஆம் ஆண்டு பற்றிய விஷயங்களை பூந்தி, டெய்லிகரன் ஆகியோர் இணைப்பிதழை இலவசமாக கொடுத்து புரிய வைத்துவிடுவார்கள். இனி அதை தனியாக எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்வரும் ஆண்டுக்கான விஷயங்களைப் பார்ப்போம். விமானநிலையம் மக்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவா என்று தெரியவில்லை. பிரமாண்ட விமானநிலையங்கள் நொய்டா, நவி மும்பையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றை ஆட்சித்தலைவரின் அபிமான நண்பர் இயக்குவாரா இல்லையா என விரைவில் செய்திகள் சொல்லும். கூட்டுறவு இந்தியா குவாட் அமைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவியேற்கவிருக்கிறார். சீனாவின் டிக்டாக்கை தடைவிதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். வணிகத்தைப் பொறுத்தவரை அதிகவரி ஏற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா என்ன வித நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா அதற்கு மகிழ்ச்சியுறும்.பின்னே நாம் முன்னேறமுடியவில்லை அடுத்தவர்கள் முன்னேறினால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா என்ன? இந்த வகையில் இந்தியா ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு இணைந்துகொண்டு இயங்கும். மின...

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...

தீவிரவாதிக்கு மதமில்லை, ஊழல் அரசியலுக்கு கட்சி பேதமில்லை

படம்
              ஊழல்களுக்கு கட்சி பேதமில்லை!  பல காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 2ஜி ஊழல் என்பது இதில் முக்கியமாக குறிப்பிடலாம். ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி, பெருமளவு விவாதங்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் ஈடுபட்ட சிலரைக்காப்பாற்ற பெரும் தலைவர்களின் அறிக்கைகள் போதுமானதல்ல. இதோடு நின்றுவிடப்போவதுமில்லை. சராசரி இந்தியர்களுக்கும் அரசியலில் அறமின்மை புகுந்தது கண்டு வெறுப்பு கொள்வதற்கான காரணமாக இவை அமைந்துவிட்டது. பல்வேறு ஊடகங்களின் சம்மட்டி அடி போன்ற ஊழல்களின் மீதான செய்திதொகுப்புகள், தெருவில் உள்ள கடைசி மனிதர் வரைக்குமான விழிப்புணர்வை தந்துவிட்டிருக்கிறது.  உண்மையில் ஊழல் செய்திகளை,  டி.வியில் பார்ப்பது பெரும் பொழுதுபோக்காக மாறிவருகிறது. சேனல்களுக்கான நிகழ்ச்சிக் கருக்களை அரசியல்வாதிகளே தந்துதவுகிறார்கள். டி.வி பார்க்கும் பார்வையாளர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்ட தலைவரை அப்பாவி என்று நம்புவதில்லை. அரசியல்வாதிகள் யார்தான் குற்றம் செய்யவில்லை என்று கூறப்படும் வழக்கமான செவ்வியல் வாக்க...

மொழி,சாதி, மத, இன பாகுபாடில்லாத ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

படம்
         இனிப்பு மிட்டாயும் பள்ளி புத்தகங்களும்!  வசந்தகாலத்தில் சில பூக்கள் மலர்வதைப்போலவே, இந்தியாவின் அரசியல் தேர்தல் காலங்களில் மட்டுமே உண்மையான நிறத்துடன் உயிர்ப்பு பெறுகிறது. இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அபத்தமான, சர்ச்சைக்குரிய (அ) கொள்கைகளற்ற ஆழ்ந்த அகன்ற அறிவோடு சராசரி வாக்காளனின் மனதை எப்படி வசீகரம் செய்வது என்பது போன்ற விஷயங்களை 2012 உ.பி அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவு, நவீன சிந்தனைமுறைகளைக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட புராதன, பின்னோக்கிய அளவீடுகளைப் பின்பற்றி வாக்காளர் சமூகத்தை தவறான செயல்பாட்டிற்கு பழக்குகிறார்கள்.  அவர்கள் இதனை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறார்கள் - தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே. நாடு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை நினைவு கொள்ள (அ) மறக்க கால நோக்கில் ஏற்படுத்தும் அளவு, பதவிக்கு அவர்கள் தகுதி பெற வெற்றி உண்மையில் மிக அவசியம்தான். இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பெரும் கட்சிகளைச் சார்ந்தவ...

பேச்சுரிமை என்றால் என்ன என்பதை முழுமையாக விளக்கி சிந்திக்க வைக்கும் நூல்!

படம்
              ப்ரீஸ்பீச் நிகல் வார்பர்டன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் நிறைய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. வேலைவாய்ப்பின்மை காரணமாக வலதுசாரி மதவாதம் தலைதூக்கி வருகிறது. தரம் தாழ்ந்த அரசியல்வாதிகள் மூலம் பயமும் வெறுப்பும் வளர்ந்து வருகிறது. ஏழை நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் செயலிகள் வழியாக வெறுப்பு பேச்சு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மெல்ல பறிபோகத் தொடங்கி வருகின்றன. ஃப்ரீஸ்பீச் என்ற நூல், பேச்சுரிமை என்றால் என்ன, அதற்கான  கொள்கை, தத்துவங்கள், அதற்கு எழுந்த சவால்கள், மத மீறல்களைக் கலைப்படைப்புகள், மதத்தை பகடி செய்யும் திரைப்படம், நாடகங்கள் ஆகியவை பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. பேச்சுரிமை என்றால் என்ன, இதன் தொடக்கமாக ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஆன் லிபர்டி என்ற நூல் முன்வைக்கப்படுகிறது. இதில் எழுத்தாளர் மில், பேச்சுரிமை ஏன் முக்கியம். அதை காப்பது எந்தளவு அவசியம் என்று விளக்கி கூறியிருக்கிறார். இவர் கூறிய கருத்துகளை வாசித்தபிறகு, நூல் பேச்சுரிமைக்குள் வருவதாக கூறும் வெறுப்பு பேச்சு, ஆபாச ப...