இடுகைகள்

நக்சலைட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நக்சலைட் காதலியைக் காப்பாற்றும் போலீஸ் காதலன்!

படம்
  ஹீரோ 2008 - நிதின், பாவனா ஹீரோ நிதின் , பாவனா எலன் மஸ்க் செவ்வாயை காலனியாக்க துடிக்கிறார் அல்லவா ? அங்கு திரையிடப்பட வேண்டிய படம் . படத்தில் அனைத்துமே மிகையாக நம்ப முடியாமல் உள்ளது . இ து வேறு உலகம் ப்ரோ . நிதினின் அப்பா போலீஸ் கமிஷனர் . அவருக்கு தனது மகனை தனது துறையில் வேலையில் சேர்த்துவிடவேண்டுமென நினைக்கிறார் . ஆனால் அதற்கு அவரது மனைவி சரளா எதிராக நிற்கிறார் . மகன் சினிமா ஹீரோ ஆகவேண்டும் என்பது அவரின் ஆசை . மகனுக்கும் அதுதான் லட்சியம் . இந்த நேரத்தில் நியாய உணர்வு கொண்டவர்கள் போலீஸ்காரர்களாக மாறலாம் என மாநில அரசு சட்டம் கொண்டு வருகிறது . நிதினை பயிற்சிக்கு அப்பா அனுப்புகிறார் . மகனும் வேண்டாவெறுப்பாக மூன்று மாதத்தை கடத்த அங்கு வருகிறார் . மூன்று மாத காலத்தில் போலீஸ் அகாடமியில் நடக்கும் காதல் , நட்பு , தேசப்பற்று இதர சமாச்சாரங்கள்தான் கதை . '' என்னை எதுக்காக காதலிக்கிற ? என்னோட கண்ணு , மூக்கு , வாய் , உதடு , கழுத்து பிடிக்குமா ?'’ என காதலி கிருஷ்ணவேணி கேட்க , சட்டென நாயகன் ராதாகிருஷ்ணன் அவளின் நீலநிற இடுப்

நக்சலைட்டாக இருந்து கல்லூரி மாணவராக மாறியவனின் கதை! ஜல்சா - பவன் கல்யாணம், இலியானா, பார்வதி மெல்டன்

படம்
  ஜல்சா இயக்கம் திரிவிக்ரம் சீனிவாஸ் இசை பான் இந்தியா ராக்ஸ்டார் டிஎஸ்பி பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு மட்டுமேயான படம். படத்தில் எந்த லாஜிக்கும் கிடையாது. அனைத்துமே மேஜிக்தான். அதைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஒருவர் இந்தப் படத்தைப் பார்க்கமுடியும். பவன் கல்யாண் கல்லூரியில் டிகிரிக்கு மேல் டிகிரியாக படித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு காதலி இருக்கிறார். அவர்தான் கமாலினி முகர்ஜி. அவர் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜின் பெண். இதனால் அவரது காதல், கல்யாணம் வரை செல்வதில்லை. இதனால் தனது காதலி கல்யாணத்திலேயே பந்திக்குப் போய் சாப்பிட்டு வருகிறார். இந்தளவுக்குத்தான் பவன் கல்யாணின் வாழ்க்கை இருக்கிறது. இப்படி இருக்கும் வாழ்க்கை, இரு பெண்களை வல்லுறவு செய்ய முயலும் கேங் ஒன்றை அடித்து துவைக்க மாறுகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு இரு பெண்கள் பவனை காதலிக்கிறேன் என்று சொல்லி வருகிறார்கள். அதில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணை பவன் காதலிக்கிறார். அவருக்கு முன்பே அந்த பெண் அவரை காதலிக்கிறாள். இந்த நேரத்தில் சிறைக்குள் இருந்தபடியே ஒரு ரவுடி நிலங்களை செட்டில் செய்து வருகிறான். அவன் பவனைத் தேடி வருகிறான்