இடுகைகள்

பழங்குடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடி மாணவன், தன் இன முன்னேற்றத்திற்காக படிக்க வந்து காதலில் வீழ்ந்து பின் வெல்லும் கதை!

     விஜயம் ராஜா, கஜாலா சிங்கீதம் சீனிவாச ராவ் இசை ஶ்ரீலேகா பழங்குடி மாணவன் கல்லூரி தேர்வில் தங்கப்பதக்கம் வாங்க நினைத்து படித்து, பிறகு காதலில் விழுந்து அதில் இருந்து மீண்டெழுவதே கதை. சுரேஷ் பாபு தயாரித்துள்ள படம். ஆனால், மிகவும் வணிகமாக இருக்கிறது. படத்தில் ஒரே ஆறுதல், பழங்குடிகளின் உரிமைக்காக போராடுபவராக வரும் பாத்திரம் மட்டுமே. அப்பாத்திரம் மட்டுமே, மூடநம்பிக்கையை ஒழித்து பழங்குடி இனத்தை முன்னேற்ற வேண்டும் என நம்பிக்கையை இறுதிவரை உறுதியாக பிடித்து நிற்கிறது. நாயகன் ராஜூ, நாயகி, நாயகனின் நண்பர்கள் பாத்திரம் என அனைத்துமே ஒருகட்டத்தில் நகைச்சுவை, பாடல்கள், சுயநலமான எண்ணம் என மாறிவிடுகின்றன. படத்தில் வரும் கஜாலா பாத்திரம் லூசு நாயகிக்கான அத்தனை அம்சங்களைக் கொண்டது. அதை சற்று மாறுபட்டதாக அமைத்திருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்கலாம். இயல்பான கதாபாத்திரங்கள் அமையவே கூடாது என இயக்குநர் முடிவெடுத்தபிறகு ஏதும் சரியாக அமையவில்லை. கடைத்தெருவில் தொப்புள் தெரிய நாயகி உடையணிந்துகொண்டு சித்து பாத்திரத்தோடு வருவது, அதேநேரம் தற்செயலாக நாயகன் ராஜூ வந்து நாயகியை குழாய் ஒன்றில் காப்பாற்...

கிராமம், பழங்குடிகள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவ மாணவர்கள் சிகிச்சையளிக்க முன்வரவேண்டும் - நேரு உரை

படம்
        மருத்துவத்தில் இந்தியா தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளது. நமக்கு முன்னும் பின்னும் ஏராளமான மருத்துவர்கள், அறுவை சிகிச்சை வல்லுநர்கள் புகழ்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தேவையும் சேவையும் இந்தியாவைக் கடந்தும் கூட இருந்துள்ளது. இன்று யோசிக்கும்போது தொன்மை மருத்துவர்கள், வாழ்ந்து வந்த காலத்தில் அவர்களை மக்கள் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அவர்கள் திறமையான மருத்துவர்களாக இருந்ததோடு, காலத்தால் மேம்பட்ட சிகிச்சை முறையைக் கையாண்டனர். அவர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களையே நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதேசமயம், நாம் இன்னும் பழைமையான முறைகளை விட்டு நவீனமாக காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. மக்களுக்கு அதிகளவு உதவி தேவைப்படும் சமயத்தில் கூட அறிவை புத்துயிர்ப்பு கொண்டதாக மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது செயல்படவிருக்கும் மருத்துவ நிறுவனம், அறிவியலை அடிப்படையாக கொண்டு இயங்கவேண்டும். பழைமையான முறைகளை பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறவில்லை. அவை சரியானதாக இருந்து லாபம் கிடைக்க கூடியதாக இருந்தால் அதை பின்பற்றலாம். பழை...

இறப்பை ஏற்படுத்தும் பாக்டீரிய நச்சு!

படம்
        அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உணவில் நச்சுத்தன்மை எப்படி ஏற்படுகிறது? உங்களின் ஜென்ம எதிரிகள் மதிய சோறு வாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டு சோற்றில் விஷம் வைக்கலாம். எனவே, உங்களின் நண்பர் என்ற போர்வையில் யார் அழைத்தாலும், அவர்களுக்கு நீங்கள் செய்த செயல்களை நன்றாக நினைத்துப் பாருங்கள். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை, அவமானத்தை, உயிரபாயத்தை சந்திக்க நேரும். இது தெரிந்து ஏற்படுவது. தெரியாமல் பல்வேறு எதிரெதிர் உணவுப்பொருட்களை உணவில் தாறுமாறாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. இது வயிற்றுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும். நிலப்பரப்பு சார்ந்து உணவுகள் மாறும். அதற்கேற்ப நீங்களும் மாறிக்கொள்ளவேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே வகையான உணவு என்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். தெரியாமல் உணவில் நச்சுத்தன்மை சேர்வது குழந்தைகள் வளருகிற வீட்டில் ஏற்படுகிற விபத்து. இதற்கு கவனமாக விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி. இயற்கையில் இறப்பை ஏற்படுத்தும் வகையிலான நச்சு எது? பாட்டுலினல் என்ற நச்சு, குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த நச...

பழங்குடிகளின் வாழ்வாதாரங்களை சட்டம் மூலமாக பறிக்கும் தரகு கும்பல்கள்!

படம்
உலக நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகிய அமைப்புகள் உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு தரகர்கள் போலவே செயல்படுகின்றன. இயற்கையை சுரண்டுவதோடு, பழங்குடிகளை வாழ்வாதார நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் சட்டங்களை திருத்த அரசுகளை வற்புறுத்துகின்றன. அப்படி சொல்லித்தான் நிதியுதவிகளை தாராளமாக தருகின்றன. நவ தாராளவாத நிறுவனங்களான இத்தகைய அமைப்புகளே இயற்கை அழிக்கும் ஆபத்தான சக்திகள். நவ தாராளவாத நிறுவனங்களோடு அமைப்புகளோடு போராடுவது எளிதல்ல. சமூக வலைத்தள ஆப்களை விலைக்கு வாங்கும் அரசுகள், அதன் வழியாக போராட்டம் பற்றி, போராட்டக்காரர்கள் பற்றிய மோசமான அவதூறுகளை பரப்புகின்றன. மக்களை சாதி, மதம், இனம் வாரியாக பிரிக்கின்றனர். பிறகு எளிதாக இயற்கை வளங்களை வேட்டையாடுகின்றனர். அரச பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக இயங்கத் தொடங்கிவிட்டது. சோசலிசவாதிகள், சூழலியலாளர்கள், சூழல் சோசலிசவாதிகள் பழங்குடிகளுக்கு ஆதரவாக நிற்பது அவசியம். அப்போதுதான், காடுகளை பறிக்க முயலும் கொள்ளையர்களை தடுத்து மக்களுக்கு உதவ முடியும். சுரங்கம், கச்சா எண்ணெய், உயிரி எரிபொருள் ஆகியவை இயற்கை வளங்களை சுரண்டி மாசுபடுத...

உயிரி எரிபொருள்(பயோ ஃப்யூல்) - காட்டிலுள்ள உயிரினங்களை அழிக்கும் எரிபொருளாக மாறிய கதை!

படம்
கரிம எரிபொருட்களுக்கு மாற்றாக நிறைய நாடுகள் உயிரி எரிபொருட்களை பரிந்துரைக்கின்றன. அப்படி மாறினால் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என பரப்புரை செய்யப்படுகிறது. உண்மையில் அது தவறான வாதம். உயிரி எரிபொருட்களை விளைவதற்கு பயன்படுத்தும் உரங்களுக்கு அடிப்படையானதே கரிம எரிபொருட்கள்தான். அவை இல்லாமல் எப்படி உயிரி எரிபொருட்களுக்கு அடிப்படையான பயிர்களை விளைவிக்க முடியும்? உணவுப்பயிர்களை விளைவிப்பது குறைந்துவரும் சூழலில் ஒருவர், உயிரி எரிபொருட்களுக்கான பயிர்களை விளைவித்தால் அங்கு சூழல் என்னாகும்? விரைவில் நாடு உணவு தானியங்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் என்பதே நடைமுறை உண்மை. உயிரி எரிபொருட்களில் முக்கியமானது, பனை எண்ணெய். அதாவது பாமாயில். இதை எப்படி விளைவிக்கிறார்கள்? இந்தோனேஷியா, மலேசியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் மழைக்காடுகளை வெட்டி எறிந்துவிட்டு அங்கு பனைமரக்கன்றுகளை நட்டு பனை எண்ணெய்யை உற்பத்தி செய்கிறார்கள். உணவு பயிர்களுக்கு மாற்றாக பணப்பயிர்களை விளைவிப்பது, ஒருகட்டத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தைக் கொண்டு வரும். மேலும், அமெரிக்காவில் வாகனங்களுக்கு எரிபொருளாக சோளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன...

எங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது வேடிக்கை பார்க்க முடியாது! - நேமொன்டோ நென்க்யூமோ

படம்
 பூமியின் காவலர்கள் - நேமொன்டே நென்க்யூமோ சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அமேசான் காடுகளில் கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் என்ன பிரச்னை என்று.... அவர்கள் அப்படி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு அளவற்ற கோபம் உருவாகிறது. உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து எரியும்போது, அதை அணைக்க முயற்சிப்பீர்கள்தானே? நிச்சயம் அமைதியாக நின்று எரியும் நெருப்பை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள்தானே?  உங்களது வீடு, உறவினர்கள் வீடு, உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் நெருப்பால் அழிவைச் சந்திக்கும்போது அதைத் தடுக்க முயல்வீர்கள்தானே? உங்கள் நாட்டை அணுக்கதிர்வீச்சிலிருந்து எதற்காக பாதுகாக்க நினைக்கிறீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? எங்கள் வீடுகளும், மக்களும் அழிவை, பேரிடரை சந்திக்கும்போது வெளிப்புற மக்கள் கேட்கும் இத்தகைய கேள்விகள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. மேற்குலகினரின் குடியேற்றம் எங்கள் இன மக்களின் வாழ்க்கையை வீடுகளை வாழ்வாதாரத்தை அழித்தொழித்தது. இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உயிரைப் போராடி தக்க வைத்திருக்கிறேன். மேலும் பல்வேறு போலியான ச...

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரிய...

உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100

படம்
  ஷாய் சுரூய் 26 பழங்குடி நிலங்களைக் காப்பவர் சுரூய் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார். தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக் காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும் அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின் பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்” என்றார். அர்மானி சையத்   பூமெஸா நந்திதா நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே, 33 நோயாளிகளுக்காக போராடும் போராளிகள் மேற்சொன்ன இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துகளில் உள்ள நச்சு...

பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!

படம்
  கோண்ட் பழங்குடிகள் கலைஞர் மங்களா பாய் ஒரு தொன்மை மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள், இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள. இதற்கான மை தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள். இந்த மையை ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில் பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.   நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெ...

உடலைத் தீய்க்கும் பாலைவனப் பயணத்தில் இயற்கையைப் புரிந்துகொள்ளும் பெண்! தடங்கள் -ராபின் டேவிட்சன்

படம்
  தடங்கள் ராபின் டேவிட்சன் தமிழில் – பத்மஜா நாராயணன் எதிர் வெளியீடு   அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி, ஆஸ்திரேலியாவின் பாலைவனத்தை தனியாக கடக்கிற பயணத்தை, அதற்கான திட்டமிடலை, போராட்டத்தை க்கூறுகிற கதை இது. நூல் மொத்தம் 300 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த பக்கங்கள் முழுவதும் ஒட்டகங்கள், அவற்றை வளர்ப்பது, பாதுகாப்பது, பராமரிப்பது பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. டூக்கி, கோலியாத், ஜெலிகா ஆகிய ஒட்டகங்களோடு ஆசிரியருக்கு இருக்கும் உறவானது, மனிதர்களோடு இருக்கும் உறவை விட உறுதியானதாக மாறுகிறது. டிக்கிட்டி எனும் பெண் நாயை ஆசிரியர் இழக்கும் சமயம், ஆசிரியரின் மனதிற்குள் நடக்கும் விரக்தி, வெறுமை நம்மையும் பற்றிக்கொள்கிறது. பாலைவனப் பரப்பு மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை   விளக்கும் பகுதிகள் சிறப்பாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன. வெப்பம், மிக அதிக வெப்பம், தாங்க முடியாத வெப்பம் என்பதே அங்கு பயணிப்பவர்கள் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் ஒருவர் சந்திக்கும் அனுபவங்கள் என்னவாக இருக்கும்? காட்டு ஒட்டகங்களின் தாக்குதல், சுற்றுலா பயணிகளின் நாகரிகமே இல்லாத புகைப்பட வ...

முதலில் காதலியைக் காப்பாற்றிவிட்டு பிறகு காட்டைக் காப்பாற்ற முயலும் வன அதிகாரி - கொண்டா பொலம் - கிரிஷ்

படம்
  கொண்டா பொலம்   இயக்குநர் கிரிஷ்   குடிமைத் தேர்வுகள் எழுதிய பிற்படுத்தப்பட்ட பழங்குடியை ஒத்த சாதி இளைஞர், தனது கதையை அதிகாரிகளிடம் சொல்லுகிறார். அவரது நினைவுகளின் வழியே கதை பயணிக்கிறது. வைஷ்ணவ் தேஜின் –( சின்னவன்) வாழும் ஊரின் வேலையே ஆடு மேய்த்து பிழைப்பதுதான். ஆனால் அவனது அப்பா, ஆடுகளை விற்று அவனை பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். இதன்மூலம் அவன் நகரத்தில் போய் பிழைத்துக் கொள்வான் என நினைக்கிறார். ஆனால் படித்த ஐடி படிப்பும், வாயில் நுழையாத ஆங்கிலமும் சின்னவனை வேலையில்லாத பட்டதாரியாக்குகிறது. இந்த நிலையில் அவன் திரும்ப கிராமத்துக்கு வருகிறான். ஆடுகளை மேய்க்கப் போவதற்கு ஆட்கள்   குறைய,   அவனும் ஆட்களோடு மலைக்கு செல்கிறான். அங்கு சென்று சில மாதங்கள் தங்கி ஆடுகளை மேய்த்து கூட்டி வர வேண்டும். இந்த பயணத்தில் அவன் விலங்குகளை மேய்ப்பதோடு காட்டுக்குள் உள்ள பல்வேறு சதிகார மனிதர்களையும், ஆடுகளை தின்னும் புலியையும் சந்திக்கிறான். பள்ளித்தோழி ஓபுலம்மா மூலம் சின்னவன் நிறைய விஷயங்களைக் கற்கிறான். அதில் காதலும் ஒன்று. அவனுக்கு காதலை விட முக்கியமானதாக காடுகளில் மரங்கள...

செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  பீகார், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான காடுகள் உள்ளன. இங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்க்கை மோசமாகிக் கொண்டே வருகிறது. கனிமங்களை அகழ்ந்தெடுக்க இம்மக்களை பல்வேறு வசதிகளைத் தருவதாக கூறி வேறு இடங்களுக்கு மாற்ற அரசும், தனியார் அமைப்புகளும், கூலிப்படையினரும் முயன்று வருகின்றனர. அங்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என செருக்குறி ராஜ்குமார் எழுதிய கட்டுரைகளின் சுருக்கமான தமிழாக்கமே இந்த நூல்.  நூலை வாசிப்பதன் மூலம் ஆதிவாசி பழங்குடிகள் எந்தளவு அரச பயங்கரவாதத்தின் பாதிப்பில் உள்ளனர் என்பதை அறியலாம். நூலில் உள்ள இந்து நாளிதழுக்கு செ.ரா அளித்த நேர்காணல் முக்கியமானது. அதில் அவர் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதில் கட்சி ரீதியான விமர்சனங்களும் உள்ளடங்கும்.  நூலை ஸ்கேன் செய்தும் வாசிக்கலாம்.... நூல்களை வாசிக்க.... செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் நூல் https://www.amazon.in/dp/B0BNQFWFL5 நட்பதிகாரம் https://www.amazon.in/dp/B08B14WJ6M நெ.1 சமூக தொழில் அதிபர் https://www.amazon.in/dp/B08CCW8P7F ஜனநாயக இந்தியா ...

விஷம் கொண்ட தாவரங்கள்- விஷத்தை எப்படி பக்குவப்படுத்தி உண்பது?

படம்
  விஷம் கொண்ட காய்கறிகள் நாம் உண்ணும் நிறைய காய்கறிகள் விஷத்தன்மை கொண்டவைதான். அதாவது மனிதர்களின் செயல்பாடு இல்லாமலேயே இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விஷம் உண்டு. இவற்றை இன்றுவரை மனிதர்கள் விஷம் என்ன விட்டுவிடவிலை. அதை பதப்படுத்தி பக்குவப்படுத்தி மருந்துகள், உணவு, வாசனை திரவியங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்பற்றி பார்ப்போம் வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் விஷத்தன்மை கொண்ட கொட்டைகளை சாப்பிட்டு வந்தனர். இரண்டு கொட்டைகளே ஒரு விலங்கை கொல்ல போதும். இப்படி விஷம் கொண்ட தாவர விதைகளை சைகாட்ஸ் என்று பெயர். இதிலுள்ள விஷம் சைகாசின் என அழைக்கப்படுகிறது. குடலில் சென்று செரிமானம் ஆகும்போது விஷம் வெளிப்பட்டு குடல் செல்களை தாக்குகிறது. பிறகு கல்லீரலையும் பாதிக்கிறது. குடல் எரிச்சல், கல்லீரல் செல்கள் இறப்பு, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றால் மனிதர்களுக்கு இறப்பு நேர்கிறது. பழங்குடிகள் இதை அறிந்துதான் விஷம் வாய்ந்த விதைகளை நீரில் அலசி நிலத்தில் துளையிட்டு அதை ஒரு வாரம் அல்லது சில மாதங்கள் வைத்திருந்து எடுத்து உலர்த்தி பிறகு உண்கிறார்கள். இந்த செயல்முறையில் த...

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்...