இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வனவிலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

படம்
  வன விலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்! மனிதர்களோடு வாழும் முக்கியமான உயிரினங்களில் நாயும் ஒன்று. ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு, வீடுகளுக்கு காவல், வேட்டையாடுவது என நாயின் பங்களிப்பு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. தற்போது காட்டுயிர் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும் நாய் உதவிவருகிறது.  சட்டவிரோத கடத்தல் 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சட்டவிரோத வேட்டையாடல் அதிகரித்து வந்தது. காட்டுயிர் பாதுகாப்புத்துறை, பென்னி என்ற லாப்ரடார் இன நாயை, கடத்தலைத் தடுக்க பணியமர்த்தினர். அப்போது, யானைத் தந்தம், சுறாமீன் துடுப்பு, காண்டாமிருக கொம்பு ஆகியவற்றை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.  மோப்பநாய் பென்னி, இவற்றை வேகமாக கண்டுபிடித்து தடுத்தது. ஆப்பிரிக்காவிலும்  சட்டவிரோத கடத்தலைத் தடுக்க மோப்பநாய்களையே பயன்படுத்துகின்றனர்.   கழுகுகளுக்கு விஷம் 2003ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில்,  33 கழுகுகள் (Griffon,Cinereous,Royal kites) ஆட்டிறைச்சியில் வைக்கப்பட்ட விஷத்திற்கு பலியாயின. விஷம், காட்டுநாய்களைக் கொல்ல வைக்கப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் ஓநாய், கரடிகளைக் கொல்ல இறைச்சியில் விஷம் வைக்கப

கல்வியால் பெண்களை முன்னேற்றுவதே லட்சியம் - சுதா வர்க்கீஸ்

படம்
  தீண்டப்படாத சாதி பெண்களை முன்னேற்றும் கல்வி! கேரளத்தில்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதா. பள்ளிமாணவியாக இருந்த போது சுதா,  நாளிதழ் ஒன்றில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தார்.  பீகாரின் சாலையோரத்தில் உள்ள குடிசையின் புகைப்படம் அது.  ஏழை மக்களின் குடியிருப்பு என பார்க்கும் யாரும் புரிந்துகொள்ளலாம். அந்த நொடியில் பள்ளி மாணவியான சுதா தீர்மானித்தார். நான் ஏழை மக்களின் நிலையை மாற்றுவேன் என உறுதியெடுத்துக்கொண்டார். பெற்றோர் ஏற்காதபோதும், சமூகசேவையைச் செய்ய கன்னியாஸ்த்ரீ வாழ்க்கையை ஏற்றார். பிறகு, இப்பணியில் திருப்தி இல்லாமல், தனது பணியை விட்டுவிலகினார். நேராக பீகாருக்குச் சென்றார்.  சிறுவயதில், அவர் புகைப்படத்தில் பார்த்த குடிசை, முசாகர் (Musahar)எனும் மக்களுக்குச் சொந்தமானது.  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட, முசாகர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும் கிடைக்கவில்லை. இச்சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே, 2005ஆம் ஆண்டு ‘பிரேர்னா ’(Prerna)என்ற பெயரில் தானே பள்ளியைத் தொடங்கினார்.   சுதாவின் கல்வி உதவிகளால், 5 ஆயிரம் பெண் குழந்தைகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். பீகாரில் முசாகர் இனப

காற்றிலுள்ள மீத்தேனைப் பயன்படுத்தி புரத உணவுகள்!

படம்
  எழில் சுப்பையன், ஸ்ட்ரிங் பயோ மீத்தேன் மூலம் உணவு தயாரிக்கலாம்! 2013ஆம் ஆண்டு எழில் சுப்பையன், அவரது கணவர் வினோத் குமார்  ஆகியோர் இணைந்து ஸ்ட்ரிங் பயோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். பெங்களூருவில் செயல்படும் இந்த நிறுவனம் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தி, புரத உணவை உற்பத்தி செய்து வருகிறது. ஆசியாவிலேயே பதப்படுத்தும் முறையில் மீத்தேன் மூலம் புரதங்களை  உற்பத்தி செய்யும் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஸ்ட்ரிங் பயோ தான்.  ”எப்படி சர்க்கரையை ஈஸ்டாக மாற்றி மதுவை தயாரிக்கிறார்களோ அதை முறையைத் தான்  பின்பற்றுகிறோம். இதில் சற்றே மாறுபாடாக, நாங்கள் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் மீத்தேனை உண்டு அதனை புரதமாக மாற்றுகின்றன” என்றார் ஸ்ட்ரிங் பயோ துணை நிறுவனரான எழில் சுப்பையன். மீத்தேனை இயற்கை எரிவாயு, உணவுக்கழிவுகளிலிருந்து பெறுகின்றனர். மீத்தேனிலிருந்து உருவாக்கும் புரதத்தை, விலங்குகளுக்கான உணவாக மாற்றி விற்று வருகிறது ஸ்ட்ரிங் பயோ நிறுவனம்.  ”நாங்கள் குறைந்தளவு நீர், நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை உற்பத்தி செய்கிறோம். பிற தாவர, விலங்கு இறைச்சி வகைகளை விட பதப்படுத்தும் முறையில்

அரசுபள்ளி மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் நடமாடும் நூலகம்!

படம்
  வாசிப்பை வளர்க்கும் நூலகம்!  திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆடையூர் பஞ்சாயத்து பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.  பைக்கில் வரும் நூலகருக்காகத்தான் மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நூலகர்,நடமாடும் நூலகம் என எழுதப்பட்ட பெட்டியிலிருந்து நூல்களை எடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கிறார். 15 நாட்களுக்குள்  நூல்களை படித்துவிட்டு திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.  மாணவர்களுக்கு, இதற்கென தனி அடையாள அட்டை உண்டு.  குறிப்பிட்ட கால அளவில் பத்து நூல்களை படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஒரு நூலை வழங்குகிறார் நூலகர்.  இந்த நடமாடும் நூலக திட்டத்தை அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருவது, ரெஜன்பூக் இந்தியா பௌண்டேஷன் (Regenboog India Foundation). இதனை நிறுவி நடத்தி வருபவர், மதன் மோகன்.  2006ஆம் ஆண்டு மதன் மோகன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியில், மனநிறைவு கிடைக்காததால் , வேலையை விட்டுவிலகி சமூகப் பணிகளைச் செய்ய நினைத்தார்.   அப்போது திருவண்ணாமலையில் இடைநிற்கும் கிராம மாணவர்களின் எண்ணிக்

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 2021 - மார்ச் 2022

உலகிலுள்ள அணுகுண்டுகள் ஒட்டுமொத்தமாக வெடித்தால்...

படம்
  வளர்ந்தநாடுகள் வைத்துள்ள அணு குண்டுகளின் எண்ணிக்கை 15 ஆயிரம் என 2019ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இவை ஒட்டுமொத்தமாக வெடித்தால் 3 பில்லியன் மெட்ரிக் டன் டிஎன்டிகளுக்கு சமம். 30 மைல் தொலைவுக்கு காளான் குடை பூக்கும். பொதுவாக அணுகுண்டு வெடித்து எழும் புகையின் வடிவமே காளான் குடையாகும். இப்படி காளான் குடை உருவாவதோடு, 1,864 சதுர கிலோமீட்டர் பரப்பும் ஒன்றுமில்லாமல் அழிந்துபோகும்.  இப்படி நாம் கூறும் தகவல்கள் எல்லாமே தோராயம்தான். யூடியூப் சேனலான கர்ஸ்ஜெசாட் கூறும் தகவல்கள்தான் இது.  image - business insider

மக்களுக்கு துணையாக நிற்கும் இரு நண்பர்களின் வெட்டுக்குத்து கதை!

படம்
  மகாநந்தி ஸ்ரீஹரி, சுமந்த், அனுஷ்கா இயக்கம் வி சமுத்ரா ஒருவழியாக படம் முடிந்தபோது.... கதையின் கரு நண்பர்களுக்குள் வரும் முட்டல் மோதல், நம்பிக்கை தான் கதை.  ஆந்திராவில் உள்ள கிராமம். அங்கு தனது நிலபுலன்களை விற்று ஊர் மக்கள் வேலை செய்வதற்கு தொழிற்சாலை கட்ட நினைக்கிறார் சுவாமி நாயுடுவின் அப்பா. ஆனால், அதை ஊரில் உள்ள பணக்கார ர் ஏற்கவில்லை. அப்படி தொழிற்சாலைக்கு மக்கள் வேலைக்கு போனால் நமக்கு மதிப்பிருக்காது. நீ தொழிற்சாலை கட்டக்கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு ஒரு நல்லநாள் பார்த்து சுவாமி நாயுடுவின் பெற்றோரை வீடு புகுந்து தாக்கிக் கொல்கிறார்.  இதனால் சுவாமிநாயுடுவும் அவரது தங்கையும் அனாதை ஆகிறார்கள். படம் இப்படித்தான் தொடங்குகிறது.  பிறகு சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எதிரிகளை பழிவாங்கிய சுவாமி நாயுடு ஊரில் பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அவருக்கு வலது இடது என இரு கரமுமாக இருப்பவன்தான் சங்கர். பார்த்தால் அண்ணன் தம்பி போல  தோன்றும் ஆனால் இருவரும் நண்பர்கள். சுவாமி நாயுடுவைப் பொறுத்தவரை அப்பாவின் கனவை நிறைவேற்றுவதுதான் பேஷன், ஆம்பிஷன், கனா எல்லாமே. இப்படி தொழிற்சாலை கட்டி முடிக்கும்போது எத

அலையாத்திக் காடுகளில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

படம்
  அலையாற்றிக்காடுகளின் சிறப்பம்சங்கள்! அலையாற்றிக் காடுகளிலுள்ள மரங்கள் எப்போதும் பசுமையாக உள்ள இலையுதிரா காடுகள் வகையைச் சேர்ந்தவை. இதன் காரணமாக கார்பன் டையாக்சைட் வாயுவை உட்கிரகித்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இம்மரங்கள் தம் வேர்கள் மற்றும் தண்டுகளிலுள்ள சிறிய சுவாசிப்பு துளைகள் மூலம் காற்றை உறிஞ்சுகின்றன. இத்துளைகளுக்கு லென்டிசெல்ஸ் (Lenticels) என்று பெயர்.  அலையாற்றிக் காடுகளிலுள்ள ரைசோபோராசீயே (Rhizophoraceae) இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் இனப்பெருக்க முறைக்கு தாயோட்டு விதை முளைத்தல் (Vivipary)என்று பெயர். விலங்கினங்களைப் போல, விதைகளைக் கன்று போல ஈன்று வளர்க்கின்றன. உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, கடலோரப் பகுதிகள் நீரால் அரிக்கப்பட்டு வருகின்றன. அலையாற்றிக் காடுகள் உள்ள பகுதிகளில் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. இவை, இயற்கை அரணாக நின்று தம் வேர்களை நிலத்தில் படர்த்தி நிலப்பரப்பைக் காக்கின்றன.  அலையாற்றிக் காடுகளில் கடல் மீன், இறால், சுறா ஆகியவை ஆண்டு முழுவதும் வலசை வருகின்றன. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்த பிறகே மீண்டும் கடலுக்கு செல்லும். இதன் காரணமாக

கரும்பருந்தின் வாழ்க்கை பற்றி அறியும் ஆய்வு!

படம்
  கரும்பருந்து கரும்பருந்துக்குப் பாதுகாப்பு!  இயற்கைச்சூழலில் கரும்பருந்தின் (Milvus migrans) பங்கு,குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதுதான். டில்லியைச் சேர்ந்த இளங்கலைப் பட்டதாரி  இளைஞர்,நிஷாந்த்குமார். இவர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளை அடிக்கடி பார்ப்பார். அங்கு இரைதேட வரும் கரும்பருந்துகள் வானில் வலம் வரும் காட்சி அவருக்கு பிடித்தமானது. ஆனால் இப்படி அவர் பார்வையில் படும்  கரும்பருந்துகளின்  எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. உண்மையில் கரும்பருந்துகளுக்கு என்னவானது என்ற கேள்வியே 2009ஆம் ஆண்டு,கரும்பருந்து பாதுகாப்பு திட்டத்தை (black kite project ) ஊர்வி குப்தா என்பவரோடு சேர்ந்து தொடங்கவைத்தது.  இந்த திட்டத்திற்கான உதவிகளை வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வழங்குகிறது. பொதுவாக குப்பைக்கிடங்குகளில் காணும் சிறிய பருந்துகள்,(Small indian kites)  கரும்பருந்தின் இனத்தைச் சேர்ந்த துணைப்பிரிவைச் சேர்ந்தவை. டில்லியில் கரும்பருந்துகளுக்கான உணவில் குறையேதும் இல்லை. டில்லியின் தொன்மையான நகரப்பகுதிகளில் முஸ்லீம்கள், கரும்பருந்துகளுக்கென இறைச்சித்துண்டுகளை உணவாக வீசி வருகிறார்கள். இ

சிறுவயதிலிருந்தே பறவைகளை கவனிப்பது பிடிக்கும்!

படம்
  அதிதி முரளிதர் இயற்கை செயல்பாட்டாளர் உங்களைப் பற்றி கூறுங்கள். நான் மும்பையில் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இயற்கை, பறவைகள் பற்றியும் நான் எனது எர்த்தி நோட்ஸ் என்ற வலைத்தளத்தில் எழுதி வந்தேன். இப்படித்தான் மெல்ல இயற்கை பற்றிய செயல்பாடுகளுக்குள் நான் வந்தேன்.  பறவைகளைக் கவனிக்கத் (Bird watching) தொடங்கியது எப்போது? சிறுவயதில் அம்மாவுடன் உட்கார்ந்து, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது நினைவில் உள்ளது. கல்லூரியில் படிக்கும்போது, உயிரியல் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிடுவேன். அப்போதும் வெளியே உள்ள பறவைகளைத் தான் கவனித்துக் கொண்டிருப்பேன். ஹூப்போ (Hoopoe) என்ற பறவை எங்கள் கல்லூரிக்கு அடிக்கடி வரும். சிறுவயதில் பறவைகளின் ஒலிகளைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.  உங்களுக்குப் பிடித்த பறவைகள் என்னென்ன? எனக்கு அனைத்து பறவைகளும் பிடிக்கும். ஆனால் சிறுவயதில், வால்க்ரீப்பர், ஆசியன் ஃபேரி ப்ளூபேர்ட், ஃபயர் பிரெஸ்டெட் ஃபிளவர்பெக்கர் (Wallcreeper, Asian Fairy-bluebird,  Fire-breasted Flowerpecker) ஆகிய பறவைகள் பிடித்தமானவை. இவையே அன்று என் கவனத்தை ஈர்த்தவை.  பறவை கவனித்

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்திரமாகிறார். அவரின் பெயர

தேசியமொழியாக இந்தியே இருக்க முடியும்! - நமது மொழிப்பிரச்சினை - காந்தி- அ.லெ.நடராஜன்

படம்
  காந்தி நமது மொழிப்பிரச்னை காந்தி தமிழில்  அ.லெ. நடராஜன் இந்த நூல் காந்தி எழுதிய பல்வேறு கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்டு கோவையாக்கி நூலாக்கப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளதை குறிப்பிட்டு கூறவேண்டும்.  பனியா சாதியில் பிறந்தவர் காந்தி. அவர், தன் வாழ்பனுவத்தில்  சமூகத்தில் உள்ள மக்களைப் பற்றி இறுதி வரை கற்றுக்கொண்டே இருந்தார். இந்த வகையில் அவர் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டம் வரை பல்வேறு விஷயங்களைக் கற்றும் கற்றதை பரிட்சித்தும் பார்த்து வந்தார்.  இந்த நூலில் முழுக்க மொழிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் தேசிய மொழியாக ஒரே மொழி. அது எதுவென்பதுதான் விஷயமே. இந்த வகையில் நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க இந்தி தான் உதவும் என தனது தரப்பு கருத்தை கூறுகிறார். ஒருகட்டத்தில் பிற மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுதிப்பழகலாம். இதனால் தாய்மொழி அழிந்துவிடாது என தன் கருத்தை கூறுகிறார்.  நூலில் முக்கியமான மொழிகளாக இந்தி வட்டாரத்தில் பேசப்படும் இந்தி, உருது ஆகிய மொழிகளில் எது சிறந்தது என வாதிடும் போக்கிலேயே நூல் பெரிதும் பயணிக்கிறது. இந்துஸ்தானி என்பது எந்த மொழியைக் குறிக்

உலகப்போரின் தொடக்கம்!

படம்
  ஐரோப்பாவில் உலகப்போர் தொடங்கிய காலகட்டம் 1914 - 1918. இந்த வகையில் உலகப்போர் தொடங்கி 7 கோடிக்கும் அதிகமான படையினர் போரில் கலந்துகொண்டனர். இப்போர் நடைபெறுவதற்கான சூழல் படுகொலை ஒன்றால் உருவானது.   1914ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டார். காவ்ரிலோ பிரன்சிப் என்ற போஸ்னியா தேசியவாதி தான் கொலைக்கு காரணம். ஆஸ்திரிய ஆட்சியாளர்களிலிருந்து, போஸ்னியாவை மீட்பதுதான் காவ்ரிலோ பிரின்சிப் சார்ந்த  பிளாக் ஹேண்ட் அமைப்பின் நோக்கம்.  பிறகுதான் செர்பியா மீது ஆஸ்திரியா - ஹங்கேரி நாடுகள் போரை அறிவித்தன. 1914ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று போர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. போரில் இரு தரப்புகள் உருவாயின. ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் ஒரு தரப்பாகவும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி ஆகியோர் ஒரு தரப்பாகவும் மாறி போரிட்டனர்.  ஜெர்மனியைப் பொறுத்தவரை இது ஐரோப்பாவை கையகப்படுத்த சிறந்த வாய்ப்பாக நினைத்தது. எனவே, பிரான்சை தாக்க படைகளை அனுப்பியது. படைகளை பெல்ஜியம் வழியாக கொண்டு சென்றது. ஆனால் பெல்ஜியம், போரில் நடுநிலை வகிக்க நினைத்தது. எனவே, ஜெர்ம

சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!

படம்
  இகோர் குர்சாடோவ் முதல் அணுஉலை  இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.  இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்ட

மனிதர்களின் உடலில் எத்தனை விதமான மூட்டுகள் உள்ளன தெரியுமா?

படம்
   மூட்டுகள் பற்றி அறிவோம்... மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை, உடலிலிருந்து நழுவாமல் இயங்க மூட்டுகள் உதவுகின்றன. இவற்றில் அசையும் மூட்டு, அசையா மூட்டு என இருவகை உண்டு. அசையும் மூட்டுகளுக்கு தோள்மூட்டு, இடுப்பு மூட்டு எடுத்துக்காட்டாகும். அசையா மூட்டுக்கு மண்டையோட்டு எலும்புகள் சான்று.    முழங்கால், முழங்கை ஆகியவை  கீல் மூட்டு இணைப்பைக் கொண்டவை. இவை கதவைப் போல திறந்து மூடுபவை. எலும்புகளை உறுதியான வளையும் தன்மை கொண்ட குருத்தெலும்பு (Cartilage) பாதுகாக்கிறது. முதுகுத்தண்டிலுள்ள எலும்புகளை குருத்தெலும்பு இணைக்கிறது. இதன் வளையும் தன்மை, அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலைத் தருகிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் முள்ளெலும்புகளை இணைத்துள்ள குருத்தெலும்பு தாங்குகிறது.   முளை மூட்டு (Pivot Joint) மனிதர்கள் திரும்புவதற்கு உதவும் தாடைக்கு கீழுள்ள மூட்டு. ஆனால், இவை பக்கவாட்டில், முன், பின்பக்க இயக்கம் கொண்டவை அல்ல.  கீல் மூட்டு (Hinge joint) மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் முன்னே, பின்னே நகரும். ஆனால் பக்கவாட்டில் நகராது.  தகட்டு மூட்டு (Gliding joint) தட்டை எலும்புகளுக்கு இடைய

பயணம் செய்பவர்களுக்கான ஆப்ஸ்கள்!

படம்
  polar grit x coros vertix 2 பீக் ஃபைண்டர்  இந்த ஆப் மூலம் உயரமான மலைச்சிகரங்களை அடையாளம் காணலாம். ஏராளமான மலைகள் இருப்பதால், உங்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து ஏறலாம். மலைகளை 360 டிகிரியில் பார்க்க முடியும். இதனை ஆஃப்லைனிலும் பயன்படுத்த முடியும். கட்டண சேவை தான்.  ஸ்லோவேய்ஸ்  இங்கிலாந்து மக்கள் பயன்படுத்த இலவச ஆப் இது. லாக்டௌனில் தொடங்கிய ஆப் இது. இலவசம்தான். இங்கிலாந்தின் 7 ஆயிரம் வழித்தடங்களை  ஒரு லட்சம் கி.மீ. தொலைவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் கதவைத் திறந்து சாலைகளைப் பார்த்ததும் மிரளாமல் பயணம் செய்யலாம்.  கோமூட் பயணிப்பதற்கான வழித்தடங்களை உருவாக்கும் ஆப் இது. வழித்தடம், ட்ராக்கர், சமூக வலைத்தளம் என பல்வேறு வசதிகளைக் கொண்ட ஆப் இது. நகர தெருக்கள் தொடங்கி மலைகள், சிகரங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், எங்கே தூங்குவது, குடிநீர் கிடைக்கும் இடம் என பல்வேறு விஷயங்களை ஆப் தருகிறது.  இத்தனைக்கும் சேவை இலவசம்தான். பயணம் தொடர்பான அனைத்து விஷயங்களும் கோமூட் ஆப்பிலேயே கிடைத்துவிடும்.  கோரோஸ் வெர்டிக்ஸ் 2 சாகச பயணத்திற்கு ஏற்ற ஜிபிஎஸ் வாட்ச் இது. 140 மணி நேரம் ஜிபிஎஸ் வசதியைப் பயன்பட

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்க

சினிமா டூ தொழிலதிபர் - இரு குதிரை சவாரி - அனுஷ்கா சர்மா, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா

படம்
  அனுஷ்கா சர்மா 2008ஆம் ஆண்டு ஷாரூக்கானின் ரப்னே பனா டி ஜோடி படத்தில் அறிமுகமானார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தமாகி டஜன் கணக்கிலான படங்களில் தெறமை காட்டினார். 2013ஆம் ஆண்டு க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதனை, அனுஷ்காவின் சகோதரர் கவனித்துக்கொள்கிறார். அனுஷ்கா நடிப்பதை மட்டும் பார்க்கிறார். அனுஷ்கா தயாரிப்பாளர் மட்டுமல்ல படங்களை உருவாக்கும் கதை, திரைக்கதை, படப்பிடிப்பு என அனைத்து செயல்முறையிலும் பங்கேற்று வருகிறார். 2015ஆம் ஆண்டு வெளியான என்ஹெச் 10 படம் இப்படித்தான் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 2017இல் பில்லாரி, 2018இல் பரி ஆகிய திரைப்படங்கள வெளியாயின.  பேய்க்கதை, திகில் ஆகிய படங்களையே விரும்பி தயாரிக்கிறார். பல்ப்புல் -2020, பாதாள்லோக் 2020 ஆகிய இரண்டு ஓடிடி சீரிஸ்களும் அனுஷ்காவுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்தன. இப்போது நுஸ் எனும் துணிகளை வடிவமைத்து விற்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  2018, 2019ஆம் ஆண்டுகளில் ஃபார்ச்சூன் இதழில் 50 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும், ஃபோர்ப்ஸ் ஆசியா 30 அண்டர் 30 பட்டியலிலும் இடம்பிடித்தார்.  ஆலியா பட் பொது அறிவு கேள்விகள

ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

படம்
  போருடு 2008 அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது.  படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை.  ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்... தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜ

டைம் இதழின் செல்வாக்கு பெற்ற திரைப்படம், இசை துறை கலைஞர்கள்!

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதரகள்  கலை சிமு லியூ சீன கனட நடிகர் கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் சக மனிதர் என்ற வகையில் நடிகர் சிமு லியூவின் திரைப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறக்காத சினிமா கதவுகளை அவர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும்  கனடா நாட்டுக்காரர்களுக்கு திறந்து வைத்துள்ளார். இனிமேல் இதுதொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிமு லியூவின் வெற்றியால் தான் சாத்தியமானது என  பிறர் கூறுவார்கள்.  சாங் சீ  திரைப்படத்தை சிமு லியூவுக்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். படத்தில் அவரின் நகைச்சுவை உணர்வு, போர்க்கலை பயிலும் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. தன்னைத்தானே சுய கிண்டல் செய்யும் அரிய குணம் சிமு லியூவுக்கு உண்டு. கச்சிதமான உடைகள் அவரை அழகாகவும் காட்டுகின்றன என்பது முக்கியமானது.  வெறுப்புவாதம், இனவெறி, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நடிகர் சிமு லியூ. இவர் நமக்கான சூப்பர் ஹீரோவேதான்.   சாண்ட்ரா ஓ  2 ஜோ கிராவிட்ஸ்  அமெரிக்க திரைப்பட நடிகை ஜோ கிராவிட்ஸ் அழகு, புத்திசாலித்தனம் நிரம்பியவர். அவருடன் இரவு நேரங்களில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதுதான் நடிப்புடன் அவ

காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021

படம்
  வருடு காவாலேனு 2021 தெலுங்கு - தமிழ் டப்  இயக்கம் லஷ்மி சௌஜன்யா இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன் படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.  காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான