சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

 


















இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய
க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம். 

இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது.... 

இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இருமுறை நடந்த போர்களிலும் இங்கிலாந்து படைகளே வென்றன. சீனா படுதோல்வியை அடைந்தது. 

இதனால் சீனா தன் வசமிருந்த சில நிலப்பரப்புகளை இங்கிலாந்திடம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. பாறைகளைக் கொண்ட வறண்ட நிலப்பரப்பு இப்படித்தான் சீனாவிடமிருந்து இங்கிலாந்திற்குச் சென்றது. இதுதான் ஹாங்காங். இதனை சீனா 1842 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குக் கொடுத்தது. 

ஹாங்காங் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. 1860இல் கோலூன் பெனின்சுலா, 1868இல் ஸ்டோன்கட்டர்ஸ் தீவு என பிரிக்கப்பட்டது.  புதிய பகுதிகளை இங்கிலாந்து 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றது. இந்த காலம் முடிவடைந்ததும் 1997ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட பகுதிதான் ஹாங்காங். இதனை விழா போல நடத்தினர். 156 ஆண்டுகள் ஹாங்காங்கை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். 

இங்கிலாந்து நாடு கடைசியாக பிடித்து வைத்திருந்த காலனி பகுதி, ஹாங்காங்தான். 


டெல் மீ வொய் இதழ்

2022





கருத்துகள்