இடுகைகள்

அவசர நிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசின் புதிய சட்டத்திருத்தங்கள்!

படம்
புதிய சட்டத் திருத்தங்கள்! 1951 முதல் சட்டம் எஸ்சி, எஸ்டி ஆகிய பட்டியலினத்தவருக்கான சிறப்புச் சலுகைகள் அளிக்கும் சட்டம் இது. சட்டம் 15 இன் கீழ் வருகிறது. பின் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டம் 19இன் கீழ் வந்தது. 31 ஏ, 31பி ஆகிய சட்டங்கள் நிலங்களை பாதுகாக்க உருவானவை. 24வது சட்டத்திருத்தம், 1971 நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மாற்றும் அதிகாரம் உண்டா என்பது போன்ற விவாதம் எழுந்தது. கோலக்நாத் எனும் வழக்கில் இந்த சட்டத் திருத்தம் உருவானது. அரசியலமைப்பை மாற்றும் சட்டத்திருத்தை குடியரசுத்தலைவர் மாற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என சட்டத் திருத்தம் உருவானது. 26வது சட்டத்திருத்தம் இங்கு, தனியுரிமை சொத்துகளைப் பாதுகாக்கும் சட்டம். மாநிலங்களை, சமஸ்தானங்களை ஆண்ட ஆட்சியாளர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் சட்டம் இது. 1985ஆம் ஆண்டு 52ஆவது சட்டத்திருத்தம் இது கட்சிக்காரர்கள், பிற கட்சிகளுக்கு மாறி பதவிகளை அனுபவிப்பதை தடை செய்கிறது. ஆம் கட்சித்தாவல் தடைச்சட்டம்தான். இதை இன்று பாஜக அரசு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. 1989, 64 வது சட்டத்திருத்தம் வாக்களிக்கும் வயது 21ல